இலங்கையோடு ஒப்பிடும் போது தமிழக அரவாணிகள் எவ்வளவோ சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அரவாணிகள் என அழைக்கப்படும் திருநங்கையருக்கு இன்றைய தமிழக அரசு ஆதரவாக இருந்து வருகிறது. கலைஞர் டி.வி. அமெரிக்காவில் கல்வி கற்று திரும்பி வந்த திருநங்கையான ரோசுக்கு ‘இது ரோஸ் நேரம்’ என்ற ‘டோக் ஷோ’வை நடத்த அனுமதி அளித்துள்ளது. இந்த ரோஜாவைப் பற்றிய கதை இது.
ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010
சவூதியிலிருந்து ஆணிகளுடன் வந்த ஆரியவதி
ஆஸ்பத்திரியில் ஆரியவதி
நாகரிகம் வளர்ச்சியடைந்து மனிதன் பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளான். மனிதப் பண்புகள் மேலோங்கி விட்டதாக பெருமையாகக் கூறப்படுகிறது. இதனால் பிராணிகளை வதைப்பதைத் தடுக்கவும் கூட பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றின் மீது கைவைத்தால் மிருகவதை எதிர்ப்பு அமைப்புகள் புரட்டி எடுத்து விடுகின்றன. ஆனால் மிருகங்களை விடக் கேவலமாக மனிதர்கள் நடத்தப்படும் அவலம் மற்றொரு பக்கமாக அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.
அதற்கு சவூதிக்கு பணிப்பெண்ணாகச் சென்ற ஆரியவதி சிறந்த உதாரணமாகும்.
Labels:
இலங்கை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



