திங்கள், 9 டிசம்பர், 2013

வாள் வெட்டுக்கு பிரசித்தி பெற்ற பாரிஸ் லா சப்பலில் தமிழ் இளைஞர் மீது வாள்வெட்டு

பாரிஸ் லா சப்பல் பகுதியில் தமிழ் இளைஞர் குழுக்களுக்கிடையிலான மோதலில் 18 வயது இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாரிஸ் லா சப்பல் தமிழர்கள் நிறைந்த பகுதியாகும். துமிழர்களின் ஆதிக்கம் இங்கு வந்த பின் வாள்வெட்டு கத்திக்குத்து படுகொலை போன்ற வன்முறைகளும் பிரசித்தம் அடைந்துள்ளது.

தென்னாப்பிரிக்க தேசியக் கொடியின் வண்ணத்தில் எம்பயர் கட்டிடம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள விண்ணை முட்டும் எம்பயர் ஸ்டேட் கட்டிடம், தென்னாப்பிரிக்க தேசியக் கொடியில் இருப்பது போன்ற வண்ணங்களில் காட்சியளிக்கிறது.

சிங்கப்பூர் கலவரம்.. உண்மையில் நடந்தது என்ன? (படங்கள் இணைப்பு)


பொது ஒழுக்கம், போக்குவரத்து விதிகளில் கறார், பொது சொத்துக்கு சேதம் விளைவிக்காமை போன்றவை சிங்கப்பூருக்கே உரிய சிறம்பம்சங்களாகும். ஆனால் இவை அனைத்தும் நேற்று சில மணி நேரம் மீறப்பட்டதில் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் சிங்கப்பூர்வாசிகள்.

குறிப்பாக அங்கு வேலைக்குப் போய் செட்டிலாகியுள்ளத இந்தியர்கள் - தமிழர்கள்.

மிகவும் பருமனான நபராக புகழ்பெற தினசரி 29,000 கலோரி உணவை உண்ட நபர்... (படங்கள் இணைப்பு)

உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து நிறையை குறைக்க மேற்கொண்ட முயற்சி காலங்கடந்த ஞானோதயமாகிய பரிதாபம்

பிரித்­தா­னி­யா­வி­லேயே மிகவும் பரு­ம­னான நப­ராக சாதனை படைக்க தின­சரி 29,000 கலோரி சக்திப் பெறு­மான உணவை உண்ட நப­ரொ­ருவர் தனது அள­வுக்­க­தி­க­மான நிறை கார­ண­மாக உயி­ருக்குப் போராடி வரு­கிறார்.


பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன் சனிக்கிழமை இரவு விற்பனை நிலையமொன்றிற்கு சாதாரண குடிமகன் போன்று சென்று தனது தாயாருக்காக ஆட்டு இறைச்சித்துண்டுகளை கொள்வனவு செய்து அங்கிருந் தவர்களை திகைப் பில் ஆழ்த் தியுள்ளார்.

விடு­தலை வீரர் நெல்சன் மண்­டேலா

தென் ஆபி­ரிக்­காவில் ஆங்­கி­லே­யரின் அநி­யாய ஆட்­சிக்கு எதி­ராக ஆபி­ரிக்க தேசிய காங்­கிரஸ் தோன்­றிய ஆறு ஆண்­டு­க­ளுக்குப் பிறகு நெல்சன் மண்­டேலா அர­சி­யலில் ஈடு­பட்டு ஆபி­ரிக்க தேசிய காங்­கி­ரஸின் பொதுச் செய­லா­ள­ரானார். புரட்­சி­க­ர­மான போராட்­டங்­களில் ஈடு­பட்டார். அவ­ருக்கு நீதி­மன்றம் ஆயுள் தண்­டனை விதித்­தது. 46 ஆவது வயதில் சிறை­சென்ற அவர் 27 ஆண்­டுகள் சிறைக் கொடு­மை­களை அனு­ப­வித்தார். ஆபி­ரிக்க கறுப்பு இன மக்­களின் விடு­த­லைக்­காக அவர் கடு­மை­யான சிறை­வாசம் அனு­ப­வித்தார்.

மண்டேலாவின் வழியை பின்பற்றுவது அவசியம்

உல­கையே சோகத்தில் ஆழ்த்­தி­யுள்ள மனித நேயம் மற்றும் ஜன­நா­ய­கத்தின் தந்தை நெல்சன் மண்­டே­லாவின் மறை­வுக்கு உலகத் தலை­வர்கள் இரங்கல் செய்­தி­களை அனுப்­பி­வ­ரு­வ­துடன் எதிர்­வரும் 15 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை தென்­னா­பி­ரிக்­காவில் நடை­பெ­ற­வுள்ள அன்­னாரின் இறுதிச் சடங்கில் கலந்­து­கொள்­வ­தற்கும் தயா­ரா­கி­வ­ரு­கின்­றனர்.

நாளை மறுநாள் 11.12.13 அதிசய தேதியில் டும் டும் முடிக்க ஆயிரக்கணக்கானோர் காத்திருப்பு!!

நாளை மறுநாள் வர இருக்கும் அதிசய தேதி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நூற்றாண்டில் நாளை மறுநாள் 11.12.13 என அடுத்தடுத்த தொடர் எண்களை கொண்டதாக உள்ளதே இதன் சிறப்பம்சம். அன்றைய தினத்தை மிகவும் ராசியான, அதிர்ஷ்டமான நாளாக கருதி உலகம் முழுவதும் ஏராளமான திருமணங்கள் நடைபெற உள்ளன.

நெல்சன் மண்டேலா : வெளிச்சமும் இருளும் (3)

மண்டேலாவும் அவர் இயக்கமும் இடையில் சில காலம் வன்முறை மீது நம்பிக்கை வைத்திருந்தபோதும், பெரும்பாலும் அவர் அகிம்சை கொள்கையையே உயர்த்திப் பிடித்துள்ளார். உலகம் தழுவிய அளவில் மண்டேலா இன்று கொண்டாடப்படுவதற்குக் காரணம் அவருடைய பொருளாதாரக் கொள்கைகளோ ஆட்சிமுறையோ அல்ல, அவரது அகிம்சை வழிமுறையே. எதை அவர் முன்னிறுத்தினாரோ அதன் குறியீடாகவே அவர் இன்று மாறியிருக்கிறார். மாற்றப்பட்டிருக்கிறார். காந்தி, மார்ட்டின் லூதர் கிங் வரிசையில் நெல்சன் மண்டேலாவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது இதுவே காரணம்.

டில்லியில் தேவையில்லாமல் தலையை கொடுத்து விஜயகாந்த் வாங்கிய 'செம அடி'

டில்லி சட்டசபை தேர்தலில், சில நூறு ஓட்டுகள் மட்டுமே கிடைத்த தால், தன் தேசிய அரசியல் கனவு தேய்ந்து போய் விட்டதே என, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் நொந்து போயுள்ளார்.

தமிழர்கள் வாழும் தொகுதி:

இது தொடர்பாக, தே.மு.தி.க., வட்டாரங்கள் கூறியதாவது:தமிழக சட்டசபையில், பிரதான எதிர்க்கட்சியாக உள்ள, தே.மு.தி.க., ஏற்காடு சட்டசபை தொகுதி, இடைத்தேர்தலை புறக்கணித்தது.

சரும முடிகளை அகற்ற வாக்சிங் செய்வதற்கு பதிலா, இத ட்ரை பண்ணுங்க...

பொதுவாக சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை வாக்சிங் மூலம் தான் நீக்குவோம். ஆனால் தற்போது சரும முடிகளை எளிதில் நீக்க வேண்டுமென்று வாக்சிங் செய்வதற்கு பயன்படுத்தும் பொருட்களில் நிறைய கெமிக்கல்கள் கலந்திருப்பதால், அவை சருமத்திற்கு ஒரு கட்டத்தில் பெரும் ஆபத்தை விளைவிக்கிறது. குறிப்பாக சரும அரிப்புகளை அதிகப்படுத்தி, சருமத்தின் அழகையே கெடுத்துவிடும்.

எளிதில் கர்ப்பமாக வேண்டுமா? அப்ப ஓவுலேசன் காலத்தில் ஆரோக்கியமா இருங்க...

கருமுட்டை வெளிப்படுதல் என்பது ஒரு உயிரியல் வினைமுறையாகும். அதன் படி மாதவிலக்கு காலத்தின் போது வளர்ச்சி அடைந்த முட்டையக சுரப்பி கிழிந்து கருமுட்டையை வெளியேற்றும். கருமுட்டை வெளிப்படும் காலம் என்பது ஒவ்வொரு பெண்ணை பொறுத்து மாறுபடும். பொதுவாக 28 நாள் அடங்கிய மாதவிலக்கு கால சுற்றில் இந்த வினைமுறை 14-ஆம் நாள் நடைபெறும். ஆனால் பத்திலிருந்து பத்தொன்பதாம் நாள் வரை எப்போது வேண்டுமானாலும் கருமுட்டை வெளிப்படுதல் நடைபெறலாம். அப்படி வெளியேறிய கருமுட்டை விந்தணுவுடன் சேரும் போது அது கருத்தரித்தலில் வந்து முடியும். கர்ப்பம் தரிக்க வேண்டுமானால் கருமுட்டை வெளிப்படுதல் எப்போது நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாக விளங்குகிறது.

மண்டேலாவுக்கு ரகசியமாக பேத்தியைக் காண்பித்த சிறை அதிகாரி கிறிஸ்டோ...

மண்டேலா தனது சிறைவாசத்தில் பெரும்பகுதியைக் கழித்த சிறையில் பணிபுரிந்தவரும், பின்னாளில் அவரது நண்பராக திகழ்ந்தவருமான கிறிஸ்டோ பிராண்ட் என்பவர், மண்டேலா குறித்த தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மணப்பெண்ணாக போகும் பெண்களுக்கான சில கூந்தல் பராமரிப்பு டிப்ஸ்...

பொதுவாக பெண்கள் என்றால் தங்களை அழகாக காட்ட விரும்புவார்கள். அதற்காக உடல் பராமரிப்பு, சரும பராமரிப்பு மற்றும் தலைமுடி பராமரிப்பு என அவர்கள் மெனெக்கெடுவது அனைவரும் அறிந்ததே. சாதாரண நேரத்திலேயே இவ்வளவு மெனெக்கெடுபவர்கள் திருமணம் ஆக போகிறது என்றால் சும்மா இருப்பார்களா?

பேபி உருளைக்கிழங்கு வறுவல்

தேவையான பொருட்கள்:

பேபி உருளைக்கிழங்கு - 8-10
பச்சை மிளகாய் - 2-3 (நீளமாக கீறியது)
வெங்காயம் - 2
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 சிட்டிகை
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்

ஆண்களே! 'அந்த' இடத்தில் ரொம்ப அரிக்குதா? அதை தடுக்க இதோ சில டிப்ஸ்...

பிறப்புறுப்பில் பெண்களுக்கு மட்டும் தான் தொற்றுகள் ஏற்படும் என்பதில்லை, ஆண்களுக்கும் தொற்றுகள் ஏற்படும். இப்படி பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்பட்டால், அது கடுமையான அரிப்புக்களை ஏற்படுத்திவிடும். சாதாரணமாக தலையில் பொடுகு அல்லது பேன் இருக்கும் போது, தலையில் கை வைத்தாலே அசிங்கமாக இருக்கும் போது, பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படும் போது பொது இடங்களில் அங்கு கை வைத்துக் கொண்டிருந்தால் நன்றாக இருக்குமா என்ன?

பெண்களுக்கான சொத்துரிமை குறித்து சில விவரங்கள்!

பெண்களுக்கான சொத்து உரிமைகளை தருவது 1956-ல் நிறைவேற்றப் பட்ட இந்து வாரிசுச் சட்டப்படிதான்.இந்த சட்டம் வருவதற்கு முன்பு ‘இந்து பெண்கள் சொத்து சட்டம்’ என்று ஒன்று இருந்தது. இந்த சட்டத்தின் மூலம் பெண்களுக்கு பிறந்த வீட்டில் தங்குவதற்கான உரிமை மட்டும்தான் இருந்தது. சொத்தில் எவ்வித உரிமையும் கிடையாது. பிறந்த வீட்டிலிருந்து கொடுக்கப்பட்ட சீதனம் மட்டுமே பெண்களுக்கான சொத்தாக கருதப்பட்டது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல