சனி, 1 டிசம்பர், 2012

அன்பான புலி (காணொளி)


Share |
Image Hosted by ImageShack.us

தம்பதிகள் சிறையில் இருப்பது உள்நாட்டு விவகாரம் இதில் தலையிட முடியாது

நார்வே நாட்டில் குழந்தையைக் கண்டித்த இந்திய பெற்றோர் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

இவர்கள் மீதான வழக்குக்கு நாளை தீர்ப்பு வரவுள்ள நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது என்று கூறியுள்ளார்.

அம்மன் சிலைக்கு காவலாக நாகம் நின்ற அதிசயம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் விளாவெட்டுவான் கிராமத்தில் அமையப் பெற்று உள்ளது அருள் மிகு ஸ்ரீ நாக தம்பிரான் ஆலயம்.

இங்கு கடந்த போயா தினத்தோடு அண்டி இடம்பெற்ற அதிசயம் ஒன்று அடியவர்களை புல்லரிக்க வைத்து உள்ளது.

விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர்!!!!

நான்கு ஆண்டுகளில் விமானத்தில் பறக்காமல் கடல் மற்றும் தரைவழி என பஸ், ரயில் ஆகியவற்றின் மூலம் 201 நாடுகளுக்கு பயணித்து பிரிட்டனைச்சேர்ந்த வாலிபர் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் பல லட்சம் கிலோ மீட்டர் பயணம் செய்து உலகை சுற்றி வந்த முதல் வாலிபர் என்ற பெருமையினை பெற்றுள்ளார்.

7 வயது சிறுவன் கூறிய புகாரால் தாய் தந்தையர் நோர்வேயில் கைது !!

Anupama (left); Chandrasekhar with son Sriram

தன்னை தனது பெற்றோர் துன்புறுத்துவதாக தனது வகுப்பு ஆசிரியரிடம் சிறுவன் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, அவனது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேலிக் கூத்துக்குள்ளான நாடு கடந்த அரசின் 4 வது அமர்வு


கலர் கலரா உடுப்புபோட்டு வந்து கலக்கிய நா.க உறுப்பினர்கள்:

நாடு கடந்த அரசின் 4 வது அமர்வு லண்டனில் நடைபெற்றது. இதற்கு முன்னதான அமர்வுகள் அமெரிக்காவில் உள்ள எருமை நகரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்க விடையம். இம் முறை இந்த அமர்வுகள் பிரித்தானிய பாராளுமன்றின் வளாகத்தினுள் நடைபெற்றது. அதன் உறுப்பினர்கள் கலர் கலரா உடுப்பு போட்டு வந்து பார்வையாளட்களை அசத்தியுள்ளார்கள். உறுப்பினர்களுக்கு ஒரு கலர் உடுப்பு.... அமைச்சர்கள் மற்றுமொரு கலர்... செனட் சபை உறுப்பினர்கள் ஒரு கலர் என்று, வித்தியாசம் வித்தியாசமான ஈஸ்மன் கலரில் இவர்கள் வந்து கலக்கினார்கள். ஆனால் இலங்கை அரசு கலங்கியுள்ளதாக என்று கேட்டால் அது தான் இல்லை. இதிலும் கனடா அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வந்த அங்கத்தவர்கள், பிரித்தானிய பாராளுமன்றம் மிகவும் நன்றாக இருக்கிறது என்று, முழு நேரப் புகழ் பாடினார்களே தவிர தமிழர்களுக்கு என்ன தீர்வு என்று, இல்லையேல் தமது நிலைப்பாடு என்ன என்று தெளிவுபடுத்த மறந்துவிட்டார்கள்.

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் – பகுதி 9

யாழ் மாநகரசபையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புத் தொடர்பில் பல்வேறு ஊகங்களும் விசாரணைகளும் இடம்பெற்ற போதிலும் அதன் சூத்திரதாரிகள் யார் என்பதில் தொடர்ச்சியான குழப்பமே நிலவி வந்தது. அல்லது தற்போதும் நிலவி வருகிறது. இந்தக் குண்டுவெடிப்பில் படை அதிகாரிகள் உட்பட பல அரச ஊழியர்களும் கொல்லப்பட்டனர். தங்களது மாநகர சபையிலேயே ஒரு ஊழியராக பணியாற்றியவாறு புலிகளுக்கு தகவல் வழங்கியபடி ஒருவர் இருக்கிறார் என்பதை யாரும் அப்போது அறிந்திருக்கவில்லை. தங்களிடையேதான் இருக்கிறார் அவர் என எவருமே எண்ணியிருக்க மாட்டார்கள்.

பாகிஸ்தானில் பிறந்து இந்தியாவின் பிரதமர் ஆனவர்

உடல் நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, முன்னாள் பிரதமர், இந்தர் குமார் குஜ்ரால், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். அவருக்கு வயது, 92. அவரது உடல், இன்று, முழு அரசு மரியாதையுடன், தகனம் செய்யப்படுகிறது.

நாட்டின், 12வது பிரதமராக, 12 மாதங்கள் பதவி வகித்த, இந்தர் குமார் குஜ்ரால், கடந்த சில ஆண்டுகளாக, சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.

புலிகள் இயக்கத்துக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய டக்ளஸ் தேவானந்தா

இவரை குறைந்தது 13 தடவைகள் படுகொலை செய்கின்றமைக்கு புலிகள் முயன்று தோற்றுப் போனார்கள் என்பது உலகம் அறிந்த விடயம். தேவானந்தாவை படுகொலை செய்கின்றமைக்கு விதம் விதமான உத்திகளை எல்லாம் கையாண்டு கொண்டே இருந்தார்கள் புலிகள். ஆயினும் இவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது.

ஆட்டுக்கறி அசைவம்; ஆடு கறி சாப்பிட்டா அது சைவமா?



"எங்க ஏரியாவுல ஒரு ஆடு, லெக் பீஸ் சாப்பிடுதுங்கோ!,''தகவல் வந்தபோது, கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருந்தது; அதையும் பார்த்துவிடுவோமே என்று விலாசம் விசாரித்து நாம் சென்ற இடம், பேரூரை அடுத்த ஆறுமுக கவுண்டனூரிலுள்ள அழகுராஜ் என்ற விவசாயினுடைய வீடு. அவர் வளர்க்கும் 10 ஆடுகளில் ஒன்றுதான், சிக்கன், முட்டை, மீன் என்று எல்லைச்சாமியைப் போல எல்லாவற்றையும் வெளுத்து வாங்குகிறது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல