வெள்ளி, 21 ஜனவரி, 2011

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது!

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது என்று விசேட செய்தியாளர் தெரிவிக்கிறார். இராணுவத்தினர் பெரும்பாலான சந்திகளில் நின்கின்றனர் எனவும் அவர் தெரிவிக்கிறார். இரவு நேரத்தில் புதிய சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் யாழ்ப்பாணம் இருண்டதும் பதற்றத்துடன் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களை பணயக் கைதிகளாக்க திட்டம்????

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களை பணயக் கைதியாக வைத்து, தடுத்து வைக்கப்பட்டிருந்த தம் இயக்கத்தை சேர்ந்தவர்களை விடுவிப்பதை நோக்காகக் கொண்டே 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் சென்ற பஸ் மீது தாக்குதல் நடத்தியதாக, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த லக்ஷ்ர்-இ-ஜங்வி இயக்க உறுப்பினரான அப்துல் வகாப் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த தாக்குதலுக்கான திட்டம் வொஸ்ரிஸ்டனில் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் ஜியோ செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு என மோட்டார் சைக்கிள் சிலவும் கொள்ளவனவு செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சபரிமலை மகர ஜோதி இயற்கையா அல்லது செயற்கையா????

சபரிமலையில் மகர ஜோதி மனிதரால் ஏற்றப்படுகிறதா?
விளக்கம் கேட்கிறது, கேரள ஐகோர்ட்டு

சபரிமலையில் ஆண்டு தோறும் காணப்படும் `மகரஜோதி'யை மனிதர்கள் யாராவது தீபம் போல ஏற்றுகின்றனரா? என்பது குறித்து கோவிலை நிர்வகித்து வரும் திருவாங்கூர் தேவசம் போர்டிடம் கேரள ஐகோர்ட்டு விளக்கம் கேட்டது. எனினும், இது குறித்து விசாரிக்கப்போவதில்லை என முதல்-மந்திரி அச்சுதானந்தன் அறிவித்தார்.

த.வி.கூ, புளொட் மற்றும் த.தே.கூ ஒன்றிணைந்தது

நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சி தேர்தலிலே தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒன்றிணைந்து போட்டியிட உள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்:-

ஆசிரியையின் சடலமே புங்குடுதீவில் மீட்பு

நல்லூர் ஆனந்தா வித்தியாலத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிய துரைராஜசிங்கம் உத்தமகுமாரி (வயது 40) என்ப வருடைய சடலமே புங்குடுதீவு முனைப்புலவில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

யாழ். கொள்ளைகளின் சூத்திரதாரி ஆட்டோ சங்கர்?

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் மர்மக் கொள்ளைகளின் பின்ணணியில் ஆயுதக்குழு ஒன்றுடன் தொடர்புடைய ஆட்டோ சங்கர் என்பவர் செயற்பட்டு வந்துள்ளதாகவும், கொள்ளைகளுடன் தொடப்புடைய மேலும் பல சந்தேக நபர்களின் புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் யாழ். பொலீஸ் நிலையத்துக்குக் கிடைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆபத்தில் இருந்தவரைக் காப்பாற்றிய பாம்பு

பாம்பு கடித்து உயிரை விட்டவர்கள் பற்றித்தான் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் சீனாவிலோ பாம்பு ஒன்று ஒரு குடும்பத்தையே காப்பாற்றி இருக்கிறது. சீனாவில் உள்ள லியோனிங் எனும் மாகாணத்தில் வசித்து வரும் யூபெங் என்பவர் தனது வீட்டில் பாம்பு ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.

நிலநடுக்க சேதத்திற்கும் ஊழலுக்கும் தொடர்புண்டு ஆய்வுகளில் தகவல்

நியூசிலாந் நிலநடுக்கம்
நிலநடுக்கத்தினால் ஏற்படும் சேதங்களுக்கும், ஊழலுக்கும் தொடர்பு இருப்பதாக புதிய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இயற்கை பேரழிவான நிலநடுக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து, லண்டன் இம்பீரியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசியர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வுகளை மேற்கொண்டனர்.

அதில் கூறியிருப்பதாவது:

ரொம்ப முக்கியமான விடயம்பற்றி ஆராய உத்தவு

பூமியில் போல விண்வெளியில் ஈர்ப்பு சக்தி கிடையாது. இதனால், விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் அனைவரும் அந்தரத்தில் மிதந்த படியே பணிகளை மேற்கொள்கிறார்கள்.

இந்தியப் பயணமா? இத முதலில் படியுங்கள்

இந்தியா சென்று திரும்பி வருபவர்கள் யாராக இருந்தாலும் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் இந்தியா செல்வது ஏறத்தாழ தடை செய்யப்பட்டுள்ளது. இலங்கையர் என்றில்லாது,ஒட்டுமொத்தமாக சகல வெளிநாட்டவர்களுக்கும் இவ்வாறான ஒரு தடையை இந்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. இதனை அறியாது பிரயாணம் செய்பவர்கள் இந்திய விமான நிலையத்தை அடைந்தவுடன் புதிய விதி முறைகளுக்கு உட்பட்டு பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது என்று அண்மையில் அங்கு விஜயம் செய்து திரும்பிய ஒருவர் மேலும் கூறியதாவது:

திருமண விளம்பரம் மூலம் பெண்களை ஏமாற்றும் நபரின் லீலை தொடர்கிறது

பதுளையைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்வதாகக் கூறி, அவரை அழைத்துச் சென்ற நபர் பட்டிபொல பகுதியில் வைத்து பெண்ணை மிரட்டி அவரது நகைகளையும் கையடக்கத் தொலைபேசியையும் பறித்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளார். குறிப்பிட்ட நபர் பத்திரிகைகளில் மணமகள் தேவை என விளம்பரங்களை பிரசுரித்து அந்த விளம்பரம் மூலம் தொடர்பு கொள்ளும் குடும்பத்தாரிடம் நல்லவர் போல நடித்து பெண்களை அழைத்துச் சென்று இவ்வாறான ஏமாற்று வேலையில்
ஈடுபடுவதாக ஏமாற்றப்பட்ட பெண்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல