நம்முடைய எண்ணங்களை செயலாக்க வேண்டுமென்றால் நமது உடல் அதற்கு ஒத்துழைக்கவேண்டும். உடலின் செயல் பாட்டில் நமது வேகத்தையும், தன்மையை யும் உறுதி செய்வது எலும்புகள். உடலில் உள்ள எந்த உறுப்புகளில் பிரச்சினை ஏற்பட் டாலும், நம்முடைய இயக்கம் பாதிக்காது. ஆனால் எலும்பு பாதிக்கப்பட்டால் மட்டும் நமது இயக்கம் முழுவதுமாக முடங்கிவிடும். இந்த நிலையில் நமது எலும்புகளில் இயற்கையாக ஏற்படக்கூடிய சிக்கல்கள் குறித்தும், இயற்கையற்ற முறையில் ஏற் படும் பிரச்சினைகள் குறித்தும் எம் மிடையே உள்ள சந்தேகங்களை வினாக் காளக்கி, விளக்கம் கேட்க, அதற்குரிய விடையை விரிவாக வழங்குகிறார், எலும்பு மருத்து வத்தில் நீண்ட அனுபவம் பெற்ற வரும், தமிழக நகரான திருநெல்வேலியில் இயங்கி வரும் அன்னை வேளாங்கண்ணி மருத்து வமனையின் நிர்வாக இயக்குநருமான டாக்டர் பிரான்சிஸ் ஏ.ராய். ""எலும்புகளில் ஏற்படக் கூடிய பல பிரச்சினைகளில் ஒன்று, ஓஸ்டியோ பெரெசிஸ் என்கிற எலும்புக் கரைவு நோய். மற்றொ ன்று, அதிக எடை, உடற்பயிற்சி இல்லாதவ ர்க ளுக்கு வரக்கூடியது "எலும்புத் தேய்மா னம்' என்கிற பிரச்சினை. நடைப்பயிற்சியின் மையாலும், மேற்கத்திய கலாசார வாழ்க் கை முறையை கண்மூடித் தனமாக பின்பற் றுவதன் காரணமாகவும், தற்போது 4045 வயதிலே இந்த பிரச்சினை, அதிக மாக வர ஆரம்பித்துவிட்டது... '' என்று தம்மை நாடி வந்த நோயாளியிடம் விளக்கிக் கொண்டி ருந்த டாக்டர் பிரான்சிஸ் ஏ. ராயை சந்தித் தோம்.
வியாழன், 19 ஆகஸ்ட், 2010
குறைபாடுள்ள குழந்தைப்பிறப்பை தடுக்கலாம்
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள் ளிட்ட தெற்காசிய நாடுகளில் மருத்துவம் படிக்கும் பெரும்பாலான பெண்கள், மகப் பேறு துறையினை தெரிவு செய்வதாக ஆய்வு தெரிவிக்கிறது. ""மேற்கத்திய தேசங்களை காட்டிலும் தெற்காசியர்களுக்கு குழந்தைகள் மீது தனி ஈடுபாடும், தணியாத ஆர்வமும் உண்டு. அத்துடன் குடும்பம் என்கிற சமூக அமைப்பின் மீதும் தெற்காசியர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு'' என்று விளக்கமளிக்கிறார்கள் இத்துறையை தெரிவு செய்து, மகப்பேறு மருத்துவர்களாக செயல் படுபவர்கள். இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் படித்த மற்றும் படிக்காத இளம் தலைமுறையினருக்கு மாறிவரும் கால சூழலுக்கேற்ப குழந்தை பெற்றெடுப்பதில் ஏராளமான சந்தேகங்கள் இருந்து கொண்டே யிருக்கின்றன. இவர்களது தற்கால சந்தேகங்களுக்கு தமது நீண்ட நெடிய அனுபவத்தின் மூலம் பதிலளிக்கிறார் டாக்டர் திருமதி. ஆக்னஸ்.
Labels:
பெண்கள் பக்கம்
ஈரலின் (Liver) பணி என்ன?
உடலில் அதிகமாகப் பணிபுரியும் உறுப்புகளுள் ஈரலும் ஒன்று. வயிறு, குடல்கள், இதயம் அல்லது தசைகள் போன்று இது நெளிவதோ புரள்வதோ இல்லை. இதன் செயல்பாடுகள் வெளிப்படையாகத் தெரிவதில்லை; ஈரல் உடலின் மிகப் பெரிய உள் உறுப்பாக விளங்குகிறது; இதன் எடை 2-3 பவுண்டுகளாகும். அடி வயிற்றின் மேல் வலப் பகுதியில் நிறைந்திருப்பது இது. உடல் வேதியியலில் பல்வேறு வகையான, முக்கியமான, குறைந்தது 500 பணிகளை இவ்வுறுப்பு கொண்டுள்ளது.
Labels:
அறிவுக்களஞ்சியம்
கருப்பை கட்டிகள் !
பைவ்ரோயிட்(Fibroid) எனப்படும் கட்டிகள்
இது கருப்பைப் பையின் சுவற்றிலே இருக்கும் தசையில் இருந்து உருவாகும் கட்டியாகும்.இது தனியாக இருக்கலாம் அல்லது ஒரு கருப்பையிலேயே பல கட்டிகள் இருக்கலாம்.
இது கருப்பைப் பையின் சுவற்றிலே இருக்கும் தசையில் இருந்து உருவாகும் கட்டியாகும்.இது தனியாக இருக்கலாம் அல்லது ஒரு கருப்பையிலேயே பல கட்டிகள் இருக்கலாம்.
Labels:
பெண்கள் பக்கம்
கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன?
இந்த சத்திரசிகிச்சை, ஒரு பெண் கருத்தரிப்பது தடைசெய்கிறது. இது மிகவும் விளைவுகளை ஏற்படுத்தும் முறையாகும். 50 சதவீத பெண்கள், தங்களுக்கு குழந்தை பிறந்தவுடனே கருத்தடை சத்திரசி கிச்சை செய்து கொள்கிறார்கள். கருத்தடை சத்திரசிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று யோசிப்பவர்கள், அந்த முடிவை குழந்தை பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே எடுத்து விடுங்கள்.
Labels:
பெண்கள் பக்கம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




