செவ்வாய், 28 ஏப்ரல், 2015

இந்தோனேசியாவுக்கான தூதரை திரும்ப அழைத்தது ஆஸ்திரேலியா


 இரு ஆஸ்திரேலியர்களுக்கான மரண தண்டனையை நிறுத்த ஆஸ்திரேலியப் பிரமதர் டோனி அப்பாட் (இடது) கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார்.

இந்தோனேசியாவில் போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக இரு ஆஸ்திரேலியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதையடுத்து, இந்தோனேசியாவுக்கான தூதரை ஆஸ்திரேலியா திரும்பப் பெற்றுள்ளது.

இந்தோனேஷியா: எட்டுபேருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்; ஒருவருக்கு ஒத்திவைப்பு

இவர்களை மன்னிக்கும்படி இறுதிவரை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன

இந்தோனேஷிய நீதிமன்றத்தால் போதை மருந்து கடத்திய குற்றச்சாட்டின்பேரில் மரணதண்டனை விதிக்கப்பட்ட எட்டுபேரின் மரணதண்டனையும் செவ்வாய்க்கிழமை இரவு நிறைவேற்றப்பட்டுள்ளது.

அழகுக் குறிப்புகள் - மூக்கின் பரா­ம­ரிப்பு

கிளி, குடை மிளகாய், சப்பை, கோணல், கூர்மை இப்­படி பல வார்த்­தை­க­ளோடு சேர்த்து மூக்கின் தோற்­றத்­தி­னையும், அள­வி­னையும் குறிப்­பி­டு­கிறோம். ஆனால் எப்­ப­டிப்­பட்ட ஷேப் உள்ள மூக்­கி­னையும் ஒழுங்­காக பரா­ம­ரித்து, அழ­காக மேக்கப் செய்து கொண்டால் ஷேப்பைப் பற்­றிய கவலை தேவை­யில்லை.

சிசேரியன் பிரசவத்தை சாதாரண பிரசவமாக மாற்றலாமா?

கர்ப்பம் தரித்து தமது குழந்­தையை பிர­ச­வித்து எடுத்து பார்த்து வளர்க்க ஒரு தாய் எத்­தனை கன­வுகள் காண்பாள். அத்­த­னைக்கும் அவர் அனு­ப­விக்கும் துன்­பங்­களும் சோத­னை­களும் எத்­தனை என்­பது அந்தப் பெண்­ணுக்­குத்தான் தெரியும். இவற்றில் மன ரீதி­யான வேத­னைகள் உடல்­ரீ­தி­யான வேத­னைகள் என பல­வற்­றையும் கர்ப்ப காலம் முழு­வதும் சுமந்து இறு­தியில் தனது வயிற்றில் சுமக்கும் சிசுவை எப்­படி வெளியில் எடுப்­பது என்ற கேள்வி தான் மனதில் இருக்கும்.

பாட்டி சொல்லும் வீட்டு வைத்தியம்

சிலருக்கு காலில் ஆணி என நடக்கக் கூட முடியாமல் தவிப்பார்கள். அதற்கு 5 கிராம் மஞ்சள், 5 கிராம் வசம்பு இவற்றை அம்மியில் வைத்து கைப்பிடி அளவுக்கு மருதோன்றி இலையையும் சேர்த்து தண்ணீர் விட்டு மை போல அரைக்க வேண்டும்.

அதன் பிறகு கால் ஆணி இருக்கும் இடத்தில் கனமாக வைத்து அதன் மீது ஒரு வெற்றிலையை வைத்து மூடி ஒரு வெள்ளைத் துணியால் இறுக்கிக் கட்டி விடவேண்டும். இரவு படுக்கப் போவதற்கு முன்பு இந்த மருந்தைக் காலில் ஆணி இருக்கும் இடத்தில் கட்டிக் கொண்டு, மறுநாள் காலை அவிழ்த்து விட வேண்டும். இவ்வாறு இடைவெளி விடாமல் தொடர்ந்து 3 வாரங்கள் செய்து வர பூரண குணம் கிடைக்கும்.
 =============================
பெரும்பாலானவர்களின் பற்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். அதற்கு மருத்துவம் இதோ,

சாக்குக் கட்டி 100 கிராம்,

பூங்காவி மண் (தெள்ளிய செம்மண் தூள்) 10 கிராம்,

கடுக்காய் தோல்,

மிளகு,

ஓமம்,

லவங்கப்பட்டை இவை தலா 5 கிராம் எடுத்துக் கொண்டு இவைகளை வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.

பொரித்து பொடித்த வெங்காயம் இரண்டையும் சமமான அளவு (5 கிராமுக்கும் குறைவாக) எடுத்துக் கொண்டு தனித்தனியாக இடித்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.

இடித்த பொடியை சலித்து எல்லா பொடிகளையும் ஒன்றாகக் கலக்கி ஒரு போத்தலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

காலை, மாலை இரண்டு வேலைகளிலும் இந்தப் பொடியை நன்றாகப் பல்லில் வைத்து அழுத்தித் தேய்த்து இளஞ்சூடான வெந்நீரில் வாய் கொப்பளித்து வந்தால் சீக்கிரம் பற்களில் பழுப்பு நிறம் மறைந்து வெண்மை நிறம் தெரியும்.

ஈறுகளுக்கு உறுதி அளிக்கும். பல்வலி நீங்கும்.
 ==================================
அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை அதிக சூடு அல்லது இனிப்பு பலகாரங்கள் அதிக அளவு சாப்பிடுவதால் ஏற்படும் நீரிழிவுத் தொல்லைக்கு அறிகுறி.

இவர்களுக்கு இனிப்பையும், காரத்தையும் குறைப்பது நல்லது.

பாகற்காய், கோவைக்காய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அத்துடன் தான்றிக்காய், கடுக்காய் இவற்றின் தோலை உரித்து விட்டு நன்றாக இடித்து தூளாக்கிக் கொள்ள வேண்டும்.

இரண்டையும் சமமான அளவுக்கு எடுத்துக் கொண்டு வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.

இப்படி காலை,மாலை என இரண்டு வேளையும் தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட வேண்டும்.

அதன்பிறகு சிறுநீர் கடுப்பு மற்றும் நீரிழிவு ஆரம்பக் கட்டம் போன்ற தொல்லைகள் போய் விடும்.
 ===========================
தற்போது இருக்கும் காலச் சூழ்நிலைக்கு படுத்தால் தூக்கம் வருவது ரொம்ப சிரமமாக இருக்கிறது. படுத்த உடனேயே தூங்குவதற்கு பகலோ, இரவோ படுக்கைக்குப் போவதற்கு முன் உடல் களைப்பு நீங்க குளிர்ந்த நீரில் நன்றாகக் குளியுங்கள்.

 250 மில்லி அளவு பாலை நன்றாகக் காய்ச்சி அதில், சிறிதளவு கற்கண்டையும்,பேரீச்சம் பழத்தையும் போட்டுக் குடித்து விட்டுப் படுத்தால் சுகமான தூக்கம் வரும்.

சிலருக்கு அடி வயிற்றில் வலி இருக்கும்.

அதற்கு மருத்துவம், கோடைக்காலம் மற்றும் காரம் அதிகம் சாப்பிடுவதாலும் இந்த வலி ஏற்படக் கூடும்.

இவர்கள் முதலில் காரத்தை குறைக்க வேண்டும்.

தேங்காயை அரைத்து கெட்டியாகப் பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவும்.

அதில் ஒரு ஸ்பூன் சுத்தமான கசகசாவை தேங்காய்ப் பால் விட்டு அம்மியில் வைத்து அரைத்து விழுதாக்கி தேங்காய்ப் பாலுடன் கலந்து அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.

இரண்டு அல்லது மூன்று நாட்களில் உங்கள் அடி வயிற்றுவலிப் பிரச்சினை சரியாகி விடும். அல்லது நீராகாரத்தில் வெந்தயம் (தனியா) சிறிதளவு பொடியாக்கிப் போட்டு அதிகாலையில் குடிக்கலாம். அல்லது இளநீரில் வெந்தயப் பொடி போட்டும் குடிக்கலாம். இதில் எதை வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம்.
 ===========================
திடீர் என்று மூச்சுப் பிடித்துக் கொண்டு அவஸ்தைப் படுவோர்களுக்கு, இது வாயுத் தொல்லை தொடர்பாகவும் இருக்கலாம்.

ஓமத்தைப் பொடி செய்து சமமான அளவு சர்க்கரையைச் சேர்த்து மூச்சுப்பிடிப்பு அல்லது வலி ஏற்படும் சமயத்தில் சாப்பிட வேண்டும்.

இரண்டு அல்லது மூன்று வேளைகள் சாப்பிட்டாலே பூரண குணமடைந்து விடும்.

வாயு சம்பந்தப்பட்ட பதார்த்தங்களைத் தவிர்க்க வேண்டும்.

ஜீரணம்,வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் இருந்தாலும் இந்த மருத்துவம் குணப்படுத்தும்.

மேலே குறிப்பிட்ட பக்குவத்தில் மருந்தை சாப்பிடச் சொல்லவும். கண்டிப்பாக நல்ல நிவாரணம் கிடைக்கும்.

Share |
Image Hosted by ImageShack.us

யுவதி குளித்ததை படம்பிடித்த முல்லையில் மாட்டிய ஆசாமி.

முல்லைத்தீவின் உடையார்கட்டிற்கு சென்ற குறித்த நபர் , அங்கு வீடொன்றில் குளித்துக் கொண்டிருந்த யுவதியை படம்பிடித்த சமயத்தில் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளார்.

இலங்கைத் தமிழருக்கு இன்று இந்தோனேசியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது!

போதைப்பொருள் கடத்தல் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஆஸ்திரேலியரான மயூரன் சுகுமாரன் மற்றும் ஆண்ட்ரூ சான் ஆகியோருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

இந்த நிலையில் மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் இந்த நிலையிலும், ஆண்ட்ரூவிற்கும், அவரது காதலிக்கும் மனதை உருக்கும் வகையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

ராகுல் மாட்டுக்கறி சாப்பிட்டு கேதார்நாத் போனதால் நிலநடுக்கம்

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மாட்டுக் கறி சாப்பிட்டுவிட்டு கேதார்நாத் யாத்திரை மேற்கொண்டதாலேயே நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. சாக்ஷி மகாராஜ் கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நேபாள நாட்டில் கடந்த சனிக்கிழமையன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 4 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். அங்கு தொடர்ந்தும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவன் எங்­க­ளுக்கு மட்­டு­மல்­லாது உங்­க­ளுக்கும் அபா­ய­க­ர­மா­னவன்



ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு சிரிய செயற்­பாட்­டாளர் எச்­ச­ரிக்கை

கைக்­குண்டு, துப்­பாக்கி மற்றும் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால் வழங்­கப்­பட்ட பிறப்புச் சான்­றிதழ் என்­ப­வற்­றுக்கு அருகில் புதி­தாக பிறந்த குழந்­தை­யொன்று உறங்­கு­வதை வெளிப்­ப­டுத்தும் புகைப்­ப­ட­மொன்றை அந்த தீவி­ர­வாத குழு­விற்கு எதி­ரான செயற்­பாட்­டாளர் ஒருவர் இணை­யத்­த­ளத்தில் ஞாயிற்­றுக்­கி­ழமை மீள வெளி­யிட்டு, "இந்தக் குழந்தை எங்­க­ளுக்கு மட்­டு­மல்­லாது உங்­க­ளுக்கும் அபா­ய­மிக்­க­தாகும்" என எச்­ச­ரித்­துள்ளார்.

ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியும் இதுவரை மகள் விடுதலை செய்யப்படவில்லை உதய சிறியின் தாய் தகவல்

ஜனா­தி­பதி எனது மக­ளுக்கு பொது­மன்­னிப்பு வழங்­கியும் இது வரை அவர் விடு­தலை செய்­யப்­ப­டா­தது பெரும் கவ­லை­ய­ளிக்­கின்­றது என சிகி­ரியா மலையில் தனது பெயரை எழு­திய குற்­றத்­திற்­காக சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து வரும் மட்­டக்­க­ளப்பு சித்­தாண்­டியைச் சேர்ந்த சின்­னத்­தம்பி உதயசிறியின் தாய் எஸ். தவ­மணி தெரி­வித்தார்.

இந்தோனேஷியா: மரண தண்டனைக் கைதிகளின் உறவினர்கள் சிறைக்கு வந்தனர்

இந்தோனேஷியாவில் மரணதண்டனை விதிக்கப்படவிருக்கும் இரண்டு ஆஸ்திரேலியர்களின் குடும்பத்தினர் கடைசி முறையாக அவர்களைப் பார்க்க சிறைக்கு வந்தனர்.

அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் அவர்களைச் சூழ்ந்துகொண்டனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல