வியாழன், 18 ஏப்ரல், 2013

குக்கர் குண்டுகள் என்றால் என்ன? தீவிரவாதிகள் அதை ஏன் பயன்படுத்துகிறார்கள்?

பாஸ்டனில் பயன்படுத்தப்பட்ட பிரஷர் குக்கர் குண்டுகள் தெற்காசியாவில் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்படுகிறது என்றும், அவற்றை தயாரிப்பதும் எளிது, அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம் என்றும் இந்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

"ஏஞ்சலினா ஜூலியின் டாப்லெஸ் படம் ரூ. 21 லட்சத்திற்கு ஏலம்!"

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலியின் டாப்லெஸ் புகைப்படம் ஒன்று 21 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தயா இடைக்காடார் தள்ளி வைக்கப்படுகிறாராம் !!!!

தயா இடைக்கடாரை லேபர் கவுன்சிலர் தலைமைப் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என அனைத்து லேபர் உறுப்பினர்களும் முடிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது .

ஏன் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பது வெளியாகவில்லை .

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் – பகுதி 34

அன்ரன் பாலசிங்கம் சம்பந்தனிடம் நக்கலாகக் கேட்ட பெண் வேறுயாருமல்ல இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கதான் அவர். உங்கட ஆள் என்ன செய்கிறா இப்ப? என்று சம்பந்தனிடம் பாலசிங்கம் நக்கலாகக் கேட்டது சந்திரிகாவையே. அரசியல் தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுடன் உரையாடுகின்ற விடுதலைப் புலிகளின் உயர்மட்ட அரசியல் தலைவர்களாக இருந்தாலும் சரி அல்லது மத்தியகுழு உறுப்பினர்களாக இருந்தாலும் சரி மிகுந்த அவதானத்துடனேயே தங்களது உரையாடல்களை மேற்கொள்வார்கள். பிற அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனோ அல்லது வெளிநாட்டு பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள் போன்றோருடன் உரையாடுகின்ற பொழுது தங்களது கருத்தாடல்களில் ஏதாவது பிழைகள் இருந்துவிட்டால் பிறகு அதனால் ஏற்படும் விளைவுகள் பாதிப்புகள் என்பனவற்றிற்கான முழுப் பழியையும் தங்கள் மீதே போட்டுவிடுவார்கள் என்ற அச்சம் அவர்களிடையே இருந்தது. தண்டனை எப்படியிருக்கும் என்பதும் அவர்கள் அறிந்ததே. ஆனால், அன்ரன் பாலசிங்கத்தைப் பொறுத்தவரையில், எவருடனும் நக்கல் நையாண்டியுடனேயே தனது இராஜ தந்திர உரையாடல்களையும் நடத்துவார். ஆட்களுக்குத் தக்கபடி கொச்சைத்தன்மையின் அளவும் கூடிக் குறையும்.

சிங்களரை தாக்கிய தமிழ் இளையோருக்கு பிரிட்டனில் சிறை!

சிங்களவரை காட்டுமிராண்டித்தனமாக அடித்த குற்றத்துக்காக தமிழ் இளைஞர்கள் இருவர் பிரித்தானியாவில் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு உள்ளனர்.

தாக்குதல்தாரிகளில் ஒருவருக்கு வயது 30. மற்றவருக்கு வயது 32.

'பாலியல் 'துன்புறுத்தல் காரணமாகவே சிறுவர் இல்லத்திலிருந்து வெளியேறினோம்''

கைதடி சிறுவர் இல்ல சிறார்கள் வாக்குமூலம்

பொறுப்பாளர் கைது; விளக்கமறியல்

ஸாதிக் ஷிஹான்

யாழ்ப்பாணம், கைதடி சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுவர்களை துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் அதன் பொறுப்பாளர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 30ம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு சிறுவர் நீதிமன்ற நீதிபதி கருப்பையா ஜீவராணி உத்தரவிட்டுள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல