புதன், 24 அக்டோபர், 2012

எரிக் சொல்ஹெய்மிற்கு எதிராக இலங்கை அரசு செயற்பட்டதாக விக்கி லீக்ஸ் தகவல்

இலங்கைக்கான நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மிற்கு எதிரான சக்திகளுக்கு இலங்கை அரசு ஊக்கமளித்து வந்ததாக விக்கி லீக்ஸ் தகவல் வெளியிட்டிருக்கிறது. நோர்வேயிலும், இலங்கையிலும் காணப்பட்ட இந்தச் சக்திகளுக்கு இலங்கை அரசு உற்சாகம் ஊட்டியதாகவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபாகரன் உயிரோடு இருப்பதாக வை.கோ பொய் பிரச்சாரம் செய்கிறார்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு இருப்பதாக வை.கோ போலிப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாகவும், முன்னாள் புலி உறுப்பினர் என்ற ரீதியில் தாம் பிரபாகரனின் சடலத்தை அடையாளம் காட்டியதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் புலிப்படை பூனைப்படையாகிய கதைதான் இது (படங்கள் இணைப்பு)

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் போராளிகளில் 350பேர் பாதுகாப்பு படையில் இணைக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களைச் சேர்ந்த முன்னாள் போராளிகளில் 350பேரே இவ்வாறு படையில் இணைக்கப்பட்டதாக சிவில் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இவர்கள் கிளிநொச்சியில் விவசாய நடவடிக்கைகளிலும் இராணுவத்தினர் தலைமையில் ஈடுபட்டனர்.

தூங்குகின்ற தமிழனை தட்டி எழுப்பியவன் யார்?

உலகத் தமிழ் இனமே எண்ணிப் பார்... நீ உறங்கினால் வரலாற்றில் யார் உன்னை மன்னிப்பார் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புரட்சிப் பாடல் ஒன்று உள்ளது.

தூங்குகின்ற தமிழனை தட்டி எழுப்பியவன் யார்? என்று எவரேனும் கேட்கின்ற பட்சத்தில் நம் எல்லோரும் சட்டென்று நமக்குப் பிடித்த தலைவர்களை சொல்லி விடுவோம்.

இன்று நேற்றல்ல, தமிழர் அரசியல் வரலாறெங்கும் இக்கேள்வி இருந்தே வந்திருக்கிறது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல