விடுதலைப்புலி வரதன், செட்டிப்பாளையத்தில் (கரூர் அருகே) வைத்து இயக்கிய ஒயர்லெஸ் சாதனம்!
அத்தியாயம் 54
திருச்சியில் இருந்து இயங்கிய விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவினர், திருச்சிக்கு வெளியே எங்கே அடிக்கடி போய் வருகின்றனர் என்பது தமிழக உளவுத்துறைக்கு தெரிந்திருந்தது. திருச்சிக்கு வெளியே, புலிகளின் தொடர்புகள் இருந்த நகரங்கள், கரூர், குளித்தலை, காங்கயம் என்பதை உளவுப்பிரிவு தெரிந்து வைத்திருந்தது. இது, திருச்சி சாந்தனுக்கும் தெரியும்.









