திங்கள், 18 ஜூன், 2012

கட்டாய கருக்கலைப்பு சம்பவம்: மன்னிப்புக்கோரியது சீனா

சீனாவில் 7 மாத நிறை கர்ப்பிணியாக இருந்த பெண் ஒருவருக்கு கட்டாய கருக்கலைப்பு செய்யப்பட்ட சம்பவத்திற்கு அந்நாடு மன்னிப்புக்கோரியுள்ளது. சீனாவின் ஷாங்க்ஷி மாகாணத்தில் ஃபென்ங் ஜிமேய் எனும் 7 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு ஒரு குழந்தை திட்டத்தின் கீழ் கட்டாய கருக்கலைப்பு செய்யப்பட்டது.

உயிர் அச்சுறுத்தல் என அகதி தஞ்சம் கோரியோருக்கு இலங்கையில் இரட்டை குடியுரிமை இல்லை

இரட்டைக் குடியுரிமை தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் தமக்கு அச்சுறுத்தல் அல்லது உயிராபத்து என வெளிநாடுகளில் அகதி தஞ்சம் கோரி பின்னர் அந்நாடுகளில் குடியுரிமை பெற்றுக்கொண்டவர்களுக்கு இலங்கையில் இரட்டை குடியுரிமை வழங்கப்படமாட்டாது என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூளானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல