புதன், 22 செப்டம்பர், 2010

டிமென்ஷியா குறித்து எச்சரிக்கை

ஞாபக மறதி நோய்

இந்த நூற்றாண்டில் உலகம் சந்திக்கப்போகும் மிகப்பெரும் மருத்துவ மற்றும் சமூக நெருக்கடியாக டிமென்ஷியா என்கிற நினைவிழப்பு நோய் உருவாகியிருப்பதாக அல்சைமர்ஸ் நோய்க்கான உலக அமைப்பு எச்சரித்துள்ளது.

கல்முனையில் வாகன விபத்து ஒருவர் பலி இருவர் படு காயம்!

இச்சம்பவம் நேற்று அதிகாலை கல்முனை போலீஸ் நிலையமருகில் இடம்பெற்றது .

பாதணிகளில் ஹிந்து கடவுள் படங்கள்!!! (படங்கள் இணைப்பு)

ஹிந்து கடவுள் படங்களுடன் வெளியிடப்பட்ட பாதணிகளின் விற்பனையைத் திரும்பப் பெற்றது அமெரிக்க நிறுவனம்.

அமர்ந்த நிலையில் உயிரிழந்த துறவி


தாய்லாந்தில் தனது தங்குமிடத்தில் சென்ற ஞாயிற்றுக்கிழமை அமர்ந்த நிலையில் உயிரிழந்து காணப்பட்ட 72 வயதான பௌத்த துறவியின் உடலை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுவதை படத்தில் காணலாம்.

இரத்தினபுரி மாவட்டத்தின் நோயாளி நிவித்திகலை

நிவித்திகலைச் சம்பவங்கள் பத்திரிகைகளில் பெரிதாக எதிரொலிக்கின்றன. இதற்கு முன்னரும் மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்ற போதெல்லாம் பத்திரிகைகள் பரபரப்பாக எழுதின. தொழிற்சங்க அரசியல் தலைமைகள் அறிக்கைகள் விடுத்தன. கண்டனம் தெரிவித்தன. இப்போதும் அதுதான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எல்லாம் கொஞ்ச நாளில் அடங்கிப் போகும். பிறகு வேறு எங்காவது ஏதாவது நடக்கும். பிறகு “யூஷூவல் போர்முலா' வேறு என்னதான் செய்ய முடியும் என்று ஒருவர் நியாயமான கோபத்துடன் கேட்கலாம். சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இராணுவக் கவசத்திற்குள் கட்டுண்டுள்ள வன்னிப் பெண்கள்

இராணுவ மயமாக்கப்ப்ட்டுள்ள தனிச்சூழலில் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்

யுத்தம் முடிந்து விட்டது. இடம்பெயர்ந்தோர் மீளவும் சொந்த இடங்களுக்குச் சென்று விட்டார்கள்: நாட்டில் எவரும் எந்த இடத்திற்கும் சுற்றுலா செல்லலாம். வடக்கு கிழக்கைப் பார்த்து இரசிக்கலாம். மலிவான பொருட்களை வாங்கலாம். இதுதான் இன்று தலைநகரில் உள்ள பெரும்பான்மை யினத்தோர் பலரின் மனநிலையாகும். ஆனால் யுத்தம், அவை எம்மீது குறிப்பாகப் பெண்கள் மீது செலுத்திய தாக்கம் எவ்வளவிற்குப் பாதிப்பைக் கொடுத்ததோ அதே அளவிற்கே இடப்பெயர்வும் அதன் பின்னரான இராணுவ மயமாக்கலுக்குட்பட்ட மீளக் குடியமர்தலும் தொடர்ச்சியான மற்றும் புதுமாதிரியான சிக்கல்களைத் தோற்றுவிக்கின்றன.

பில்கேட்ஸின் முடிவு

உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவரான பில்கேட்ஸ், தனது செல்வத்தை தனது பிள்ளைகளுக்கு விட்டுச் செல்லப் போவதில்லை என தெரிவித்தார்.

பிச்சையெடுக்கும் பாவப்பட்ட நிலை

டுபாயில் அண்மையில் பிச்சையெடுத்துக்கொண்டிருந்த வேளை கைது செய்யப்பட்ட ஆசியநாட்டுப் பிச்சைக்காரர் ஒருவர் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வசிப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த டுபாய் பொலிஸார் அங்கு பிச்சையெடுப்பது அதிகளவு வருமானத்தை தரும் தொழிலாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

டுபாயில் மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் இலங்கையர்

டுபாயில் தனது காதலியின் கணவரை கத்தியால் குத்திக் கொன்ற 23 வயதான இலங்கையர் ஒருவர் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல