சனி, 29 ஜனவரி, 2011

மோ.சைக்கிள் விபத்து வயோதிபர் படுகாயம்

மோட்டார் சைக்கிள் மோதியதில் கால் முறிவடைந்த நிலையில் வயோதிபர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு 8மணிக்கு சாவகச்சேரி பெருங் குளத்தில் நடைபெற்றது. இவ்விபத்தில் கண்டிவில் லேன், தபால் கந்தோர் வீதி,சாவகச்சேரியைச் சேர்ந்த செல் லையா நமசிவாயம் (வயது 74)என்பவரே கால் முறிவடைந்து சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வயோதிபத் தம்பதியினர் மீது புங்குடுதீவில் தாக்குதல்

புங்குடுதீவு 10வட்டாரத்திலுள்ள வீட்டில் தனித் திருந்த வயோதிப தம்பதிகள் இருவர் இனந் தெரியா தோரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

மகாத்மா காந்தி நினைவு தினம்

இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.

ஈ.பி.டி.பி. முக்கியஸ்தர் சதீஷ் வாகன விபத்திலேயே உயிரிழந்தார் : யாழ் பொலிஸார்

யாழ். பருத்தித்துறையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சிக் கிழக்கு பதில் பொறுப்பாளர் இராசரத்தினம் சதீஷ் கொலை செய்யப்படவில்லை எனவும் அவர் வாகன விபத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் யாழ். பொலிஸ் தலைமையக இன்ஸ்பெக்டர் சமன் சிகேர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தமக்கு இன்னமும் உறுதியான தகவல் தெரியவில்லை எனவும் தான் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கணவனை தேடி சென்னை சென்ற பெண்

தனது கணவருக்கு அவரது பெற்றோர் வேறொரு திருமணம் செய்து வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இலங்கைப் பெண்ணொருவர் சென்னை பொலிஸாரிடம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை முறைப்பாடொன்று செய்துள்ளார்.

இது தொடர்பில் சென்னை பொலிஸார் தெரிவிக்கையில்,

ஆன்டன் செக்கோவ் பிறந்த நாள்

ஒரு ரஷ்ய சிறுகதை எழுத்தாளரும், நாடகாசிரியரும் ஆவார். இவர், உலக இலக்கியத்தில் மிகப் பெரும் சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுபவராவார். இவரது நாடகாசிரியர் பணிக்காலத்தில் இவர் கடற்புறா (The Seagull), அங்கிள் வான்யா (Uncle Vanya), மூன்று சகோதரிகள் (Three Sisters), செர்ரிப் பழத்தோட்டம் (The Cherry Orchard) ஆகிய நான்கு ஆக்கங்களை உருவாக்கினார். இவரது சிறந்த சிறுகதைகள் பிற எழுத்தாளர்களாலும், திறனாய்வாளர்களாலும் உயர்வாக மதிக்கப்படுகின்றன. தனது இலக்கியத்துறைப் பணிக்காலத்தின் பெரும்பகுதியில் அவர் மருத்துவத் தொழில் புரிந்து வந்தார். "மருத்துவம் எனது சட்டபூர்வமான மனைவி, இலக்கியம் எனது வைப்பாட்டி" என அவர் ஒரு முறை குறிப்பிட்டதாகத் தெரிகிறது.

மஹிந்தவிடம் 30 மில்லியன் டொலர் நட்டஈடு கேட்டு அமெ. தமிழர்கள் வழக்கு

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக, நீதிக்குப் புறம்பாக நடத்தப்பட்ட கொலைகளுக்காக சிறிலங்கா அதிபர் மஹிந்த ராஜபக்‌ஷ 30 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்க வேண்டும் என்று கேட்டு அமெரிக்காவில் உள்ள ஈழத் தமிழர்கள் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டீ.பி. முக்கியஸ்தர் இனந்தெரியாதோரால் சுட்டுகொலை!

யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டீ.பி. முக்கியஸ்தர் இனந்தெரியாதோரால் சுட்டுகொலை!

யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டீ.பி. )முக்கியஸ்தர் ஒருவர் இன்று காலை பகிரங்க இடத்தில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் இன்று (29) காலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிசாரின் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல