ஞாயிறு, 7 டிசம்பர், 2014

எனக்கு ரஜினியைப் பற்றித் தெரியாது, கமல் பற்றித்தான் நன்கு தெரியும்... சொல்கிறார் குஷ்பு!

சென்னை: ராகுல் காந்தியின் அத்தியாயம் முடிந்து விட்டதாக யாரும் கருதக் கூடாது. அவருக்கு இன்னும் அவகாசம் தர வேண்டும். பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று சமீபத்தில் காங்கிரஸில் இணைந்த நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

மேலும் ரஜினியை அரசியலுக்கு இழுக்க நடக்கும் முயற்சிகள் குறித்து அவர் கூறுகையில், எனக்கு ரஜினியைப் பற்றி அவ்வளவாக தெரியாது. கமல்ஹாசன் குறித்துத்தான் நன்றாக தெரியும் என்றும் அவர் பதிலளித்துள்ளார்.

புலிகளின் முல்லைத்தீவு அல்பா சிறையில் நடந்த அதிரவைக்கும் கொடூரக் கொலைகள் அம்பலம்

மூன்று தசாப்தங்கள் நீடித்த யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து நாளுக்கு நாள் பல மர்மங்கள் துலங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தீர்க்கமாக விசாரிக்கப்பட்டு வந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் நால்வர் ஊடாக பல்வேறு தகவல்கள் கசிந்துள்ளன. சுமார் ஒருவருட காலத்துக்குள் கைது செய்யப்பட்ட குறித்த நான்கு சந்தேக நபர்களில் வெளிநாட்டில் கைதானோரும் அடங்குவர். இவர்கள் கொழும்பிலுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவரும் நிலையில் ஒரு பொலிஸ் பரிசோதகர், ஒரு இராணுவ அதிகாரி உள்ளிட்ட 80 தமிழர்களின் கொலை, தமிழீழ விடுதலைப் புலிகளால் நடத்திவரப்பட்ட அல்பா 2, அல்பா 5 சிறை கூடங்கள் தொடர்பில் திகிலூட்டும் பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

நேதாஜி: நடந்தது என்ன?.. டிச. 23ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக வைகோ அறிவிப்பு!

சென்னை: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த முழு உண்மைகளையும் மத்திய அரசு வெளியிடக் கோரி டிசம்பர் 23ம் தேதி அறப்போர் நடத்தப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல