சனி, 5 பிப்ரவரி, 2011

அரசியல் நோயாளிகள் மத்தியில் தான் சுகதேகி என்கிறார் மஹிந்த

வதந்திகளைப் பரப்பும், சேறுபூசும் பிரசாரங்களை மேற்கொள்ளும் அரசியல் நோயாளிகளுக்கு மத்தியில் மிகவும் சுகதேகியாக தான் இருக்கிறார் என்று ஜனாதிபதி நேற்றுக் கூறினார். 63 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி புத்தலையில் "தேசத்துக்கு மகுடம்" கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தாவது:

கணவனின் சம்பளப் பணத்துடன் கைப்பையை இழந்தார் பெண்

கடையில் பொருள்கள் வாங்கும் போது நெருக்கமாக நின்ற பெண்ணிடம் உடமைகளையும், பணத்தையும் பறிகொடுத்தனர் தம்பதியர்.இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றது.கணவனின் சம்பளப்பணத்துடன் வங்கியிலிருந்தும் பணம் பெற்று அவற்றினை சிறிய கைப்பையில் வைத்து அதனை தோளில் போடும் கைப்பைக்குள் வைத்துக்கொண்டு சென்ற தம்பதியினர் நகர்ப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் பொருள்கள் கொள்வனவு செய்வதில் ஈடுபட்டனர்.அவ்வேளையில் இவர்களுக்கு மிக நெருக்கமாக நின்று பொருள்கள் கொள்வனவு செய்வதில் பெண் ணொருவர் ஈடுபட்டிருந்தார்.கொள்வனவு முடிந்து பணம் செலுத்தும் இடத்துக்கு வந்து பார்த்தபொது தோளில் போடப்பட்டிருந்த கைப்பை வெட்டப்பட்டு அதனுள்ளிருந்த சிறிய கைப்பை காணாமற் போய் இருந்தது. நெருக்கமாக நின்ற பெண்ணையும் காணவில்லை. தென்மராட்சி தெற்கு மறவன் புலோவைச் சேர்ந்த தம்பதியினரே உடைமைகளைப் பறிகொடுத்தவர்களாவர்.

குவைத்தில் கொள்ளை: இலங்கை காதல் ஜோடி கைவரிசை

குவைத்தின் கையிபானில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் ஒன்றுடன் குவைத்திலிருக்கும் இலங்கைப் பணிப்பெண்ணும் அவருடைய இலங்கைக் காதலனும் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளதாக குவைத்தின் குற்றத் தடுப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அபிஷேக் பச்சனின் பிறந்த நாள்

அபிஷேக் பச்சன் ஒரு இந்திய நடிகர் ஆவார் மற்றும் இந்திய நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சன் ஆகியோரது மகனுமாவார். இவர் முன்னாள் உலக அழகி மற்றும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்யைத் திருமணம் செய்துள்ளார்.

இரத்தம் குடிக்கும் மசாய்கள்

விஞ்ஞான உலகை விரும்பாத மக்கள் கூட்டம்

ஆபிரிக்க கறுப்பினத்தர்களில் மசாய் என்னும் இனக்குழு கென்யாவின் தெற்குப் பகுதியிலும் தன்சானியாவின் வடக்குப் பகுதியிலும் வாழ்கிறார்கள். இவர்களுடைய வண்ணமயமான உடைகள், காடுகளுக்குள் இயற்கையோடு ஒன்றித்த அரைநாடோடித்தனமான வாழ்க்கை, விசித்திரமான பழக்க வழக்கங்கள் போன்றவை காரணமாக, மசாய் இனத்தவர்கள் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார்கள். அவர்களைப் பார்த்து, அவர்களுடன் ஒருசில நாட்களைக் கழிப்பதற்காக உல்லாசப் பயணிகள் மசாய் லான்ட் வெளிப் பகுதிக்குச் செல்கின்றனர்.

யார் இவர்கள்?

தவறவிட்ட சீரியலை தவறாமல் கண்டுகளிக்க ஒரு தளம்

மக்களின் அன்றாட வாழ்வில் கலந்துவிட்ட நிகழ்வுகளாக, சின்னத்திரையில் காட்டப்படும் சீரியல் நிகழ்ச்சிகள் ஆகிவிட்டன. தங்களின் அன்றாடச் செயல்பாடுகளை, இந்த தொடர் திரைப்படங்களின் ஒளிபரப்பு நேரத்திற்கேற்ப மாற்றிக் கொள்வது பலரின் வழக்கமாகிவிட்டது.

முட்டாள்தனமான தீர்ப்பு

கள்ளத் தொடர்பைப் பேணியதாக சொல்லப்படும் சிறுமி அடித்துக்கொலை

பங்களாதேஷ் டாக்காவில் திருமணமான ஆண் ஒருவருடன் கள்ளத் தொடர்பைப் பேணியதாகக் கூறப்படும் 14 வயது சிறுமியொருவர் பிரம்பால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொகஞ்சதாரோ: அழிந்து போனோரின் நகரம்

உலகில் முதல் முதலில் உயிர்கள் எங்கே தோன்றியிருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மனிதனை ஆராய்ந்து கொண்டிருந்தனர். அவன் எப்படி உருவானான்? எங்கே உருவானான்? என்கிற ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த போது “உலகின் நடு மையப் பகுதியும் நிலநடுக் கோட்டிற்கு ((Equator) அருகில் இருந்திருக்கும் பகுதியில் முதலில் சூடு குறைந்து இறுகி வெட்ப தட்ப விளைவுக்கு ஏற்ப உயிர் தோன்றக் கூடிய இடமாக இருந்திருக்க வேண்டும் என்றும் குமரிக் கண்டத்தில் முதன் முதலாக உயிர்கள் தோன்றியிருந்த போது ஆபிரிக்க, அவுஸ்திரேலியா, கிழக்கிந்தியத் தீவுகள் உட்பட இந்நிலப்பரப்பு பகுதிகள் ஒன்றாக இணைந்திருந்தன என்றும் உயிர்கள் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் இப்பெரும் நிலப்பரப்பு சிதைந்து போயிருக்கக்கூடும் என்றும் சொல்கின்றனர்.
கி.மு. 10.000 முதல் கி.மு. 5.000 – வரையில் மனித இனங்கள் தோன்றி பல்வேறு இடங்களில் பரவலாயின என்றும் தெரிவித்த போது ஆதாரங்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைக்கவில்லை.1922 ல் பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிந்து மாகாணத்தில் சிந்து ஆற்றின் அருகே தொல்லியலாளர்களால் மொகஞ்சதாரோ நகரம் கண்டுபிடிக்கப்பட்ட போது வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

தனி அறையில் அடைத்து மனைவி சித்ரவதை: கணவன், மாமியார், நாத்தனார் கைது

தனி அறையில் மனைவியை அடைத்து, பற்களை உடைத்தும், சிகரெட்டால் சூடு வைத்தும் கொடுமைப்படுத்திய கணவன் மற்றும் அவரது மாமியார், நாத்தனாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல