சனி, 23 அக்டோபர், 2010

பெண்களுக்கு சவாலாக அமையும் கர்ப்பப்பை புற்றுநோய்

இன்றைய காலக்கட்டத்தில் பெண்களை தாக்கும் முக்கிய நோயாக புற்று நோய் காணபப்டுகிறது.இது குறித்து பெண்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, அதிநவீன பரிசோதனை முறைகள் மற்றும் சிகிச்சை முறையில் தோன்றியுள்ள புதிய முறைகள், முன்னேற்றங்களால் இது சாத்தியமானது.இதில் கர்ப்பப்பை புற்றுநோய் பெண்களிடையே பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

கருப்பை புற்று நோய்

கருப்பை புற்று நோய் .,மார்பகப் புற்று நோய் போன்றவை பெண்களுக்கு மட்டுமே வரும் புற்று நோய்கள் இந்தப் புற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள், அறிகுறிகள், சிகிச்சைக்கான வழிமுறைகள்.... கர்ப்பப்பை புற்று நோய்.

மயக்கமா...? மரணமா...?

போதையில் மயக்கமுற்றிருக்கிறார் என நினைத்து உயிரிழந்த ஒருவரை தனி மண்டபத்திற்குள் விட்டுவிட்டுச் சென்ற சம்பவமொன்று ஹொரணை, புளத்சிங்ஹள பகுதியில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

மீண்டும் விக்கிலீக்ஸில் ரகசியக் கசிவுகள்

விக்கி லீக் ஸ்தாபகர் ஜூலியன் அஸாங்கே வயது 39

விக்கிலீக்ஸ் குற்றச்சாட்டுக்கள்

விக்கிலீக்ஸ் இணையதளம் கிட்டதட்ட 4 லட்சம் அமெரிக்க இராணுவ ரகசிய பதிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த பதிவுகள் மூலம் இராக்கிய அதிகாரிகளின் சித்ரவதைகள் பற்றி தெரிந்து இருந்தும் அமெரிக்க இராணுவத்தினர் அதனை கண்டுகொள்ளவில்லை என அறிய வருகிறது. அத்தோடு அமெரிக்க இராணுவத்தின் சோதனை சாவடிகளில் பல நூற்றுக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பதிவுகள் கூறுகின்றன.

மேலும் ஒரு தொகுதி முன்னாள் புலி போராளிகள் வவுனியாவில் விடுதலை!

புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டு, புனர்வாழ்வு பயிற்சியளிக்கப்பட்டு வந்த மேலும் ஒரு தொகுதி முன்னாள் புலி போராளிகள் 306 பேர் நேற்று சனிக்கிழமை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு பாடசாலை மண்டபத்தில் வைத்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் யுத்தத்தின் வடுக்கள்

இரண்டு தடவைகள் காயமடைந்த சிவனேஸ்வரன் செல்வமதி
இலங்கையில் மோசமான இறுதி யுத்தத்தின் போது பாதிக்கப்பட்டவர்கள் பலர் அந்தப் பாதிப்புகளில் இருந்து இன்னும் விடுபட முடியாமலும், அதற்குத் தேவையான உதவிகளைப் பெற முடியாதவர்களாகவும் இருக்கின்றார்கள்.

ஆண் பெண்

* ஆண் பெண் நேசம் புனிதமானது. ஆனால் யார் நம் மேல் அன்பு செலுத்துகிறார்கள் என்று புரிந்து கொள்வ தில் பலரும் தவறு செய்து விடுகிறார்கள். குறிப்பாக ஒரு ஆண் தன்னை நெருங்கி வந்தாலே, பெண்கள் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார்கள். ஒதுங்கிக் கொள்கிறார்கள். ஆண்கள் பெண்களிடம் பேச விரும் புவது மோகத்தால் அல்ல. அது ரகசிய உறவுக்கான அழைப்பும் அல்ல. உண்மையில் பெரும்பாலான ஆண் கள் பெண்களிடம் நல்ல நட்பு பாராட்டவே விரும்பு கிறார்கள். பிரச்சினைக்குரிய பெண்களின் பிடியில் இருந்து விலகியிருக்கவும் விரும்புகிறார்கள்!

ஜாலியாக வாழ்ந்த ஜுலியா

பிரான்ஸில் நண்பர்கள் புடைசூழ ஜாலியாக வாழ்ந்த ஜுலியா, இருபதாவது வயதில் அயர்லாந்து வந்தார். அதன் பின்னர் ஹாலிவுட்டில் நுழைந்தார். புகழ், பணம் எல்லாவற்றையும் வாரிக்குவித்தார். தனது கணவர் டேனியல் மோடர் மற்றும் தனது மூன்று குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் ஜுலியா, அதிரடியாக இந்து மதத்திற்கு மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கள்ளத்தொடர்பால் பிறந்த பெண் குழந்தை: ரூ.5,000க்கு விற்பனை

திருச்சியில் கள்ளத்தொடர்பால் பிறந்த குழந்தையை வளர்க்க விரும்பாமல் குழந்தையை விற்ற தாய், அதை வாங்கியவர் மற்றும் குழந்தைகளை வாங்கி விற்கும் புரோக்கர் என, மூன்று பெண்களை போலீசார் கைது செய்தனர்.

புலிகளின் குண்டுத் தாக்குதல்களினால் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல்-திவயின தகவல் வெளியிட்டுள்ளது!

புலிகளின் குண்டுத் தாக்குதல்களினால் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக திவயின ஞாயிறு இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

கிளிண்டனின் பதவிக்காலத்தில் காணாமல்போன அணுவாயுத குறியீட்டு அட்டை

அணுவாயுதத் தாக்குதல்களை ஆரம்பிப்பதற்காக அமெரிக்க ஜனாதிபதிக்கு வழங்கப்படும் இரகசிய குறீடுகள் அடங்கிய அட்டை பில் கிளிண்டனின் பதவிக் காலத்தில் சில மாதங்கள் காணாமல் போயிருந்ததாக முன்னாள் இராணுவ உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியையின் அதிக கவர்ச்சியால் பாடசாலையிலிருந்து மாணவர்களை வாபஸ் பெறும் பெற்றோர்கள் (ப‌ட‌ங்க‌ள் இணைப்பு)

இத்தாலி பாடசாலையொன்றில் ஆசிரியை அதிக கவர்ச்சியாக இருப்பதால் அப்பாடசாலையிலிருந்து மாணவர்களை அவர்களின் பெற்றோர்கள் வாபஸ்பெற்றுக் கொண்டிருக்கின்றனராம்.

மன்னிப்பு கோரும் அமெரிக்க நடிகை

சஞ்சிகையொன்றுக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்தமைக்காக ரசிகர்களிடமும் பொதுமக்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார் அமெரிக்க சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகையான டியன்னா ஆக்ரோன்.

யாழில், வெடிப்பொருட்களுடன் மூவர் கைது

யாழ்ப்பாணம் மண்டைத்தீவு பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் வெடிபொருட்கள் சிலவற்றுடன் 3 சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை தடுத்து வைத்து விசாரணை செய்வதாகவும் யாழ், பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

யோகா மாஸ்டர் போல் நடித்து பெண்களிடம் சில்மிஷம் செய்த இன்ஜினியருக்கு சிறை

கைனோ ஹன்ட் வயது 33
லண்டனைச் சேர்ந்த பாய்லர் இன்ஜினியர் கைனோ ஹன்ட். வீடுகளுக்கு சர்வீஸ் செய்ய செல்லும் போது, தனியாக இருக்கும் பெண்களிடம் யோகா செய்தால் உடம்புக்கு நல்லது என அறிவுரை கூறுவார். இது பற்றி ஆர்வமாக கேட்பவர்களிடம், குனிந்து நிமிர்ந்து சில யோகாசனங்களையும் செய்து காட்டுவார். அவர்களையும் அதேபோல் செய்யும்படி கூறுவார். இலவசமாக கற்றுக்கொள்ளலாம் என நினைத்து சில பெண்களும், மெக்கானிக் சொன்னபடி செய்துள்ளனர்.

ஷரபோவாவுக்கு திருமணம்

ரஷ்யாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, ஸ்லோவேனியாவின் கூடைப்பந்து வீரர் சஷா வுஜாசிக்கை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார். 23 வயதாகும் ஷரபோவா 2004ம் ஆண்டு விம்பிள்டன், 2006ல் யுஎஸ் ஓபன் மற்றும் 2008ல் ஆஸ்திரேலிய ஓபன் என மூன்று கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை பெற்று, தர வரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். இப்போது 18ம் இடத்தில் உள்ளார்.

மைக்கேல் ஜாக்சனின் முன்னாள் மனைவி உருக்கம்

பாப் இசை உலகின் சக்கரவர்த்தியாக திகழ்ந்த பாடகர் மைக்கேல் ஜாக்சன், ஒரு ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். அதிகப்படியான போதை மருந்து பழக்கத்தால் இறந்ததாகவும், விஷ ஊசி காரணமாக இறந்ததாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், `மைக்கேல் ஜாக்சனின் இறுதிக் காலத்தில் அவருடன் இருந்திருந்தால், நிச்சயமாக அவரை நான் காப்பாற்றி இருப்பேன்` என அவருடைய முன்னாள் மனைவி லிசா மேரி பிரஸ்லி தெரிவித்து இருக்கிறார்.

8 மாத கர்ப்பிணிக்கு கட்டாய கருக்கலைப்பு

சீனாவில் 130 கோடிக்கு அதிகமாக மக்கள் தொகை உள்ளது. எனவே, ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற கொள்கையை அந்த நாட்டு அரசு மிகவும் கண்டிப்புடன் அமல் படுத்தி வருகிறது. இந்த நிலையில், சீனாவின் தெற்கு பகுதியை சேர்ந்த லு யாங்குவான் என்ற கட்டிடத் தொழிலாளியின் மனைவி 8 மாத கர்ப்பமாக இருந்தார். அவருக்கு ஏற்கனவே 9 வயதில் மகள் உண்டு.

நடிகைகள் சீதா, மாயா பகிரங்க மோதல் - ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு


நடிகைகள் சீதாவும், மாயாவும் நேரடியாக களத்தில் இறங்கி பகிரங்க மோதலில் ஈடுபட்டுள்ளனர். சீதா மீது நடிகை மாயா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றையும், பரபரப்பான பேட்டியும் கொடுத்தார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல