திங்கள், 12 ஜனவரி, 2015
பிரான்ஸை உலுக்கிய அல்கைதா தாக்குதல்கள்
சார்ளி ஹெப்டோ என்ற பத்திரிகையின் பாரிஸ் அலுவலகம். அந்த அலுவலகத்தில் ஆசிரியர் பீடக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இரு ஆயுதபாணிகள் அலுவலக வளாகத்திற்குள் நுழைகிறார்கள். தாம் ஏந்தியிருந்த துப்பாக்கிகள் மூலம் அங்குள்ளவர்களை சரமாரியாக சுடுகிறார்கள். சுவர்களிலும் மேசைகளிலும் இரத்தம் தெறிக்கிறது. பத்து பேர் மரணத்தைத் தழுவுகிறார்கள். அவர்களில் எட்டுப் பேர் பத்திரிகையின் செய்தியாளர்கள்.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்
எப்படி வீழ்த்தப்பட்டார் மஹிந்த? அடுத்த கட்டம் என்ன??
இலங்கையின் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக அதிகாரத்திலிருந்து கொண்டு மீண்டும் போட்டியிட்ட, ஜனாதிபதி ஒருவர், மக்களால் தோற்கடிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்பட்ட சம்ப வம் கடந்த வாரம் நிகழ்ந்தது.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான திருப்பமாக இந்த தேர் தல் அமைந்திருந்தது.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான திருப்பமாக இந்த தேர் தல் அமைந்திருந்தது.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்
கழுத்துப் பிடிப்பு, தோள்பட்டை வலிகள் ஆபத்தானவையா?
“பஸ்சாலை இறங்கி நேரை உங்களிட்டைத்தான் வாறன்” என்று ஒரு கையை மடக்கிக் கழுத்தைத் தடவியபடி சொன்னார்.
மழை நீரால் நிறைந்து கிடக்கும் வயல்களையும், போரினால் சிதைந்து இன்னமும் திருத்தப்படாது கிடக்கும் கட்டடங்களையும் பார்த்துக் கொண்டே பகல் முழுவதும் பயணம் பண்ணியிருக்கிறார். ஒரே பக்கமாகக் கழுத்தைத் திருப்பிப் பார்த்தபடி வந்ததில் பிடித்துவிட்டது.
மழை நீரால் நிறைந்து கிடக்கும் வயல்களையும், போரினால் சிதைந்து இன்னமும் திருத்தப்படாது கிடக்கும் கட்டடங்களையும் பார்த்துக் கொண்டே பகல் முழுவதும் பயணம் பண்ணியிருக்கிறார். ஒரே பக்கமாகக் கழுத்தைத் திருப்பிப் பார்த்தபடி வந்ததில் பிடித்துவிட்டது.
Labels:
மருத்துவம்
நீங்கள் இணையத் தளத்தின் அடிமையா..?
புதிய போதை
இணையம்... கேட்டதைக் கொடுக்கும் அலாவுதீன் பூதம். மெகா சைஸ் புத்தகங்களைப் புரட்டாமலே, சீனியர் ஜீனியஸ்களிடம் சந்தேகம் கேட்காமலே விரலசைவில் தகவல் சுரங்கத்தைத் திறக்கும் தங்கச் சாவி. அப்படிப்பட்ட சூப்பர் பவர் பூதம் நம் கட்டுப்பாட்டை மீறினால் என்ன ஆகும்? மனிதகுல மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பம், பூமராங் ஆகி அவனையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ‘சயின்ஸ் ஃபிக்ஷன்’ கதைகளைப் படித்திருப்போம். அப்படித்தான் இன்று இணையம் தன்னுடைய அடிமையாக மனிதனை மாற்றிக் கொண்டிருக்கிறது. சரி... இதனால், என்ன ஆகிவிடப் போகிறது? ‘‘இணைய அடிமைத்தனம் என்பது தனிப்பட்ட பிரச்னையல்ல. வேறு ஏதோ ஒரு மனநலக் கோளாறின் அடையாளமாகவோ, தீவிரமான பிரச்சினையின் வடிகாலாகவோ இருக்கலாம். அதனால், உடனடியாகக் கவனிக்க வேண்டியது அவசியம்’’ என்கிறார் மனநல மருத்துவர் மோகன் வெங்கடாசலபதி.
Labels:
கட்டுரைகள்,
கணணி மையம் (Internet),
பலதும் பத்தும்
எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் புகையிலைப் பாவனை!
இழந்தவை எதுவானாலும் இழப்புக்களை ஈடுசெய்வதென்பது எவராலும் முடியாது. அது உயிராக இருந்தால் வேதனைகள் ஒருவருக்கு மட்டுமல்ல, அனைத்து உறவுகளுக்கும் அது உறுத்தலே. அந்தவகையில், புகையிலைப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும், புற்றுநோயினால் ஏற்படும் இறப்புகளைக் குறைக்கவும் புகையிலை எதிர்ப்பு தினமானது 1987ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. இதனடிப்படையில், புகையிலையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 31 ஆம் திகதி இத்தினம் உலகளவில் நினைவு கூரப்படுகின்றது. புகையிலைப் பாவனை எனும்போது வெறுமனே புகைத்தலை மட்டும் நாம் முன்னிலைப்படுத்த வில்லை. புகையிலையை உபயோகித்து தயாரிக்கப்படும் அனைத்து விதமான பொருட்களுமே இதில் உள்ளடங்குகின்றன.
Labels:
நோய்கள்
புதிய வருடம் யாருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரப் போகிறது?
சோதிடமும் எண் சோதிடமும் கலந்து ஓர் இலகுவான ஆய்வு
தத்தம் அன்றாட வாழ்வின் எதிர்பார்ப்புகள் எதிர்கால முன்னேற்றம் பற்றிய கனவுகள் மெய்ப்பட வேண்டுமென விரும்புவது ஒவ்வொருவரினதும் இயல்பு. ஆனால் எதிர்பார்த்தது போல அவை கைவசமாகின்றனவா என்பது தான் கேள்விக்குறி. அதிலும் கடந்தாண்டிலோ அதற்கு முன்போ எத்தனையோ கஷ்டங்களைச் சுமந்து பல இடர்பாடுகளைக் கடந்து இளைத்துக் களைத்துப் போன பலரின் எதிர்பார்ப்பு புதிதாய் மலர்ந்துள்ள புத்தாண்டிலாவது தங்களது ஒரு சில எதிர்பார்ப்புக்களோ குறைந்தபட்ச ஆசை அபிலாஷைகளோ நிறைவேற வாய்ப்புக் கிட்டுமா என்பதே. சென்ற ஆண்டில் ஏழாம் எண்காரர்கள் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை சந்தித்திருப்பார்கள். அவர்களை விட இரண்டாம் எண்காரர்களுக்கு அவர்களை அறியாமலே தேங்காய்க்குள் இளநீர் சேருமாப்போல சில அல்லது பல அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கிட்டியிருக்கும். அப்படியானால் இந்த ஆண்டு எந்த எண்காரர்களுக்கு நன்மைகள் செய்யும் ஆண்டாக மலர்ந்துள்ளது என்பதையறிய ஆவல் உந்துகிறதல்லவா?
தத்தம் அன்றாட வாழ்வின் எதிர்பார்ப்புகள் எதிர்கால முன்னேற்றம் பற்றிய கனவுகள் மெய்ப்பட வேண்டுமென விரும்புவது ஒவ்வொருவரினதும் இயல்பு. ஆனால் எதிர்பார்த்தது போல அவை கைவசமாகின்றனவா என்பது தான் கேள்விக்குறி. அதிலும் கடந்தாண்டிலோ அதற்கு முன்போ எத்தனையோ கஷ்டங்களைச் சுமந்து பல இடர்பாடுகளைக் கடந்து இளைத்துக் களைத்துப் போன பலரின் எதிர்பார்ப்பு புதிதாய் மலர்ந்துள்ள புத்தாண்டிலாவது தங்களது ஒரு சில எதிர்பார்ப்புக்களோ குறைந்தபட்ச ஆசை அபிலாஷைகளோ நிறைவேற வாய்ப்புக் கிட்டுமா என்பதே. சென்ற ஆண்டில் ஏழாம் எண்காரர்கள் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை சந்தித்திருப்பார்கள். அவர்களை விட இரண்டாம் எண்காரர்களுக்கு அவர்களை அறியாமலே தேங்காய்க்குள் இளநீர் சேருமாப்போல சில அல்லது பல அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கிட்டியிருக்கும். அப்படியானால் இந்த ஆண்டு எந்த எண்காரர்களுக்கு நன்மைகள் செய்யும் ஆண்டாக மலர்ந்துள்ளது என்பதையறிய ஆவல் உந்துகிறதல்லவா?
Labels:
ஜாதகம்
கண்ணாடி அணியும் பெண்களுக்கான மேக்கப் டிப்ஸ்
கண்ணாடி என்பது உப்புக்கு சப்பாக இருப்பவர்கள் அணியும் ஒரு பொருள் கிடையாது. இது அவசியமான ஒரு பொருளாக மாறி விட்டது. கண்ணாடியின் ஃப்ரேம் சின்னதாக, சிக்கென, கவர்ச்சியாக வந்துவிட்டது. அதனால் கண்ணாடி அணியும் பெண்கள், அவர்களின் கண்களுக்கு மேக்-கப் போடுவது முக்கியமானதாக மாறிவிட்டது. நீங்கள் காண்டாக்ட் லென்ஸை நிரந்தரமாக தூக்கி எறிந்து விட்டீர்களா அல்லது அதனை சீரான முறையில் அணிய சோம்பேறித்தனமாக உள்ளதா? எப்படி இருந்தாலும் அழகான கண்கள் வேண்டாம் என எந்தப் பெண்ணும் கூற மாட்டார்கள். அதற்கு காரணம் முகத்தின் அழகை மிகைப்படுத்தி காட்டுவதில் முக்கிய பங்கை கொண்டுள்ளது கண்கள். கண்ணாடி அணியும் பெண்கள் தங்கள் கண்களுக்கு எவ்வாறு மேக்-கப் போட வேண்டும் என்ற டிப்ஸ்கள் கூறப்பட்டுள்ளன. அவைகளைப் பின்பற்றி பயனைப் பெறுங்கள்.
Labels:
பெண்கள் பக்கம்
மாணவர்களைத் தாக்கும் மன அழுத்தம்!
பொதுவாகவே பெற்றோரும் ஆசிரியர்களும் மாணவர்கள் - எப்போதும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது வழக்கம். படிக்காவிட்டால் அவர்கள் எதிர்காலமே இருண்டு போய்விடுமே என்ற எண்ணத்தால்தான் இத்தனை எதிர்பார்ப்பும். ஆனால், இப்படி அவர்களை இடைவெளியில்லாமல், எந்தப் பொழுதுபோக்கும் இல்லாமல் கட்டாயப்படுத்தி படிக்க வைத்தால் நிச்சயம் மன அழுத்தம் ஏற்படும். இதனால், பரீட்சையில் தோல்வியடையவில்லை என்றாலும், வாழ்க்கையில் தோல்வியை தழுவுவார்கள் எனப் பல ஆராய்ச்சி முடிவுகள் உரைக்கின்றன.
Labels:
கட்டுரைகள்,
பலதும் பத்தும்
மணப்பெண்ணுக்கான சந்தன பேஸ் பெக்
அழகான தோற்றத்தைப் பெறவும் சருமத்தை பளபளவென வைத்திடவும் பல விதமான ஃபேஸ் பெக்குகள் வந்து விட்டன. சந்தையிலும் வகை வகையாக ஏராளமான பொருட்கள் கிடைக்கிறன. ஆனால் அதில் பல்வேறு ஃபேஸ் பேக்குகளில் இரசாயன பொருட்கள் பல கலக்கப்பட்டுள்ளன. அதனால் இயற்கையான ஃபேஸ் பேக்குகளையும் பலர் பயன்படுத்தி வருகின்றனர். ஃபேஸ் பெக்குகளை நாம் அன்றாடம் பயன்படுத்தி வந்தாலும், அவை குறிப்பாக சில நிகழ்வுகளுக்கு கண்டிப்பாக தேவைப்படும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு தான் திருமணம். பிறகு என்ன அலங்காரம் இல்லாத மணப்பெண் இருக்க முடியுமா என்ன? மணப்பெண்ணாகப் போகும் பெண்கள் தினமும் விலை உயர்ந்த அழகு நிலையத்திற்கு செல்வது கஷ்டமான ஒன்று. ஆனால் அங்கே கிடைக்கும் அனைத்து பயன்களும் வீட்டிலேயே கிடைத்தால் மகிழ்ச்சி தானே! உங்களின் அனைத்து விதமான சரும பிரச்சினைகளுக்கும் சந்தனம் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.
Labels:
அழகு குறிப்புகள்,
பெண்கள் பக்கம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)












