செவ்வாய், 22 பிப்ரவரி, 2011
பூகம்பம் எப்போது எங்கு ஏற்படும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள உதவும் செயற்கைக்கோள்கள்
பூகம்பம் எப்போது எங்கு ஏற்படும் என்பதை செயற்கைக்கோள் மூலம் முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்கான திட்டத்தில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதற்கான ஒப்பந்தத்தில் இங்கிலாந்து மற்றும் ரஷிய விஞ்ஞானிகள் கையெழுத்திட்டு இருக்கிறார்கள். இந்த திட்டத்தில் மாஸ்கோ நகரில் இருந்தபடி இரு நாட்டு விஞ்ஞானிகளும் ஈடுபட இருக்கிறார்கள். இதற்காக 2 செயற்கைக்கோள்களை ரஷியா - இங்கிலாந்து விஞ்ஞானிகள் விண்ணுக்கு அனுப்ப இருக்கிறார்கள்.
Labels:
உலகப்பார்வை
கற்பழிப்பில் இருந்து சிறுமியை காப்பாற்றிய நாய்
மாதிரிப்படம்
இத்தாலி நாட்டில் உள்ள மிலன் நகரை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருத்தி, ஒரு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது ஒரு நாயுடன் 40 வயது ஆசாமி ஒருவர் அந்த பூங்காவுக்கு வந்தார். அந்த நாயை பார்த்ததும் அதன் அழகில் கவரப்பட்டு அந்த சிறுமி அந்த நாயுடன் விளையாடினாள். அந்த பெண்ணை கவனித்த நாயின் எஜமானர் அந்த சிறுமியை தேநீர் அருந்த அழைத்தார். அதற்கு சம்மதித்து வந்த சிறுமியை அவர் கற்பழிக்க முயன்றார்.
Labels:
வினோதமான செய்திகள்
லிபிய தலைவர் கேர்ணல் முஹம்மர் அல் கடாபிக்கு பாதுகாப்பு வழங்க தயார்- மகிந்த ராஜபக்ஷ!
லிபிய தலைவர் கேர்ணல் முஹம்மர் அல் கடாபிக்கு தேவையான எந்த சந்தர்ப்பத்திலும் பாதுகாப்பு வழங்க இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளிவிவகார அமைச்சில் உள்ள சிரேஷ்ட அதிகாரி ஒருவர் மூலம் லிபிய தலைவருக்கு இராஜதந்திர மட்டத்தில் அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Labels:
இலங்கை,
உலகப்பார்வை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)










.jpg)


