சனி, 11 பிப்ரவரி, 2017
கருணா அம்மான் புதிய கட்சியைத் தொடங்கினார்!
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்கிற பெயரில் புதிய கட்சியொன்றை முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என்று அழைக்கப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் ஆரம்பித்துள்ளார்.
இதன் ஆரம்ப கட்டம் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப கட்டம் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Labels:
இலங்கை,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
புதிய யுகத்துக்கான இரு சகுனங்கள்
தமிழகத்தின் சிறுவர்களும் அரசியல் பேசுகிறார்கள். அடுத்த முதல்வராகப் பதவியேற்கவுள்ள சசிகலா நாட்டையே பேசவைத்திருக்கிறார். தன் காலத்தில் தமிழக அரசியல் களத்தின் ஒவ்வொரு வரலாற்று நிகழ்விலும் தன்னுடைய பேச்சுகளால் தன்னையும் உள்ளடக்கிக்கொண்ட ஒருவர், இதுபற்றி இன்றைக்கு என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்ள முடியவில்லை. கருணாநிதி அமைதியானதற்கு முதுமை, தள்ளாமை, நினைவிழப்பு என்று மருத்துவரீதியாக எவ்வளவோ காரணங்களை அடுக்கலாம். நான் இந்தச் சூழலைத் தர்க்கரீதியாக அணுக முயலவில்லை. ஜெயலலிதாவின் மறைவு வரை அரசியலில் வெளிப்படையாக எந்தப் பெரிய பொறுப்பிலும் இல்லாதிருந்த சசிகலா, அடுத்த இரண்டு மாதங்களில் படிப்படியாக விஸ்வரூபம் எடுப்பதையும், அதே காலகட்டத்தில் கருணாநிதி படிப்படியாக முடங்கிப்போவதையும் உருவாகிவரும் ஒரு புதிய யுகத்துக்கான இரு சகுனங்களாகவே பார்க்கிறேன்.
Labels:
கட்டுரைகள்,
தமிழ்நாடு,
தமிழர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)








