டக்ளஸ் கருணா இருவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இருவருமே தலைமையுடன் முரண்பட்டவர்கள். யாரை எதிர்த்து போராட வந்தார்களோ அவர்களிடமே பாதுகாப்பு தேடியவர்கள். போராட்டத்தில் இவர்களின் தலைமையை ஏற்று வந்தவர்களை களத்தில் பலிகொடுத்து பலி எடுத்தவர்களுடனே கைகுலுக்கி தம்மை பாதுகாத்து கொண்டவர்கள். தங்கள் இயலாமையால் எதிரியிடம் மண்டியிட்டு பதவி அரசியலுக்கு வந்தவர்கள். யாரை எதிரி என அடையாளம் காட்டி தம் தோழர்களை உறுப்பினர்களை களப்பலி ஆக்கினார்களோ அவர்களுக்கு ஊட்டி வளர்த்த ஈழக்கனவை தம்மை பாதுகாப்பதற்க்காக பலி கொடுத்தவர்கள். தாம் யதார்த்தத்தை உணர்ந்தது போல் தம் தோழர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் உணர்த்த தவறியவர்கள். இருக்கும் இடத்துக்கு விசுவாசமாக இருந்து தமது தேவைகளை பெற்றுக் கொண்டவர்கள். தாம் வளர்ந்த பாசறையை மறந்து புதுப் பரணி பாடியவர்கள்.
சனி, 12 செப்டம்பர், 2015
டக்ளஸ் கருணா எதிர்காலம் என்ன?
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ராணுவ பொறுப்பாளராக இருந்த டக்ளஸ் அவரின் தனி நபர் முடிவு, செயல்பாடு, தனிநபர் வழிபாட்டு விருப்பு, அணுகுமுறை காரணமாக இயக்கத்துடன் முரண்பட்ட நிலையில் நடந்த சென்னை சூளைமேடு கொலை சம்பவம் அதனால் ஏற்பட்ட எம் ஜி ஆர் அரசின் அழுத்தம் அவரை இயக்கத்தில் இருந்து வெளியேற்றியது. கருணாவின் வெளியேற்றத்துக்கு பல காரணங்கள் இன்றுவரை இரு தரப்பாலும் அறிக்கைகள் பேட்டிகள் மறுப்புகள் என வந்து சிதம்பர சக்கரமாகவே எம்மை குழப்புகிறது.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
தமிழ்வின் இணையத்தள பொய்ச் செய்தியை வன்மையாகக் கண்டிக்கிறேன்
பரந்தன் சிவபுரம் குடியிருப்புப் பற்றிய செய்தி உண்மைக்குப் புறம்பானது.
முன்னாள் பா.உ சந்திரகுமார் கண்டனம்.
பரந்தன் சிவபுரம் மக்கள் குடியிருப்பு கடந்த காலத்தில் பல்வேறு அபிவிருத்தித்தி10ட்டங்களிலும் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் இதற்குக் காரணம், இது மாவீரர் குடும்பங்களைக் கொண்ட குடியிருப்பு என்றும் இதனால்தான் இங்கே பாரபட்சம் காட்டப்பட்டதாகவும் இந்தப் பாதிப்புகளுக்கு நானும் காரணம் எனவும் தமிழ்வின் என்ற இணையத்தளம் வழமையான பொய்ச் செய்தியை வெளியிட்டுள்ளது. இதை நான்; வன்மையாகக் கண்டிக்கிறேன்.
முன்னாள் பா.உ சந்திரகுமார் கண்டனம்.
பரந்தன் சிவபுரம் மக்கள் குடியிருப்பு கடந்த காலத்தில் பல்வேறு அபிவிருத்தித்தி10ட்டங்களிலும் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் இதற்குக் காரணம், இது மாவீரர் குடும்பங்களைக் கொண்ட குடியிருப்பு என்றும் இதனால்தான் இங்கே பாரபட்சம் காட்டப்பட்டதாகவும் இந்தப் பாதிப்புகளுக்கு நானும் காரணம் எனவும் தமிழ்வின் என்ற இணையத்தளம் வழமையான பொய்ச் செய்தியை வெளியிட்டுள்ளது. இதை நான்; வன்மையாகக் கண்டிக்கிறேன்.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
தமிழர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


