காவல்துறை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் யுத்தம் முடிவடைந்ததின் பின்னர் இராணுவ புலனாய்வு பிரிவினருடன் இணைந்து பணியாற்றிய நான்கு உயர்மட்ட முன்னாள் புலித் தலைவர்களை கைது செய்துள்ளார்கள்.
பாகம் - 3
வெள்ளைவான் கலாச்சாரம் பற்றிய பயத்தை புதுப்பித்தல்
இந்தக் கைதுகளின் முறைமை மற்றும் அளவு என்பன குடும்ப அங்கத்தவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளன. பலருக்கும் அவர்களது கைதுகளுக்கான காரணங்கள் அறிவிக்கப் படவில்லை. மாறாக அவர்கள் வெறுமே சிவில் உடைகளில் வரும் அதிகாரிகளால் கடத்தப்பட்டு வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகிறார்கள். இந்த செயல்முறை ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் நிலவிய வெள்ளைவான் கலாச்சாரம் ஜனாதிபதி சிறிசேனவின் யகபாலனய ஆட்சியிலும் மீண்டும் ஆரம்பமாகி விட்டதோ என்கிற ஒரு அச்சத்தை மீண்டும் புதுப்பிக்கிறது.

