செவ்வாய், 6 செப்டம்பர், 2016

புனிதப் பயணத்தின் பொன்னான தருணம்!

அன்னை தெரசா 1997 செப்டம்பர் 5-ல் காலமானதற்குப் பிறகு, குறைந்த கால அவகாசத்தில், அதாவது 19 ஆண்டுகால இடைவெளியில், செப்டம்பர் 4-ல், அவருக்குப் ‘புனிதர்’ பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. குணப்படுத்தவே முடியாத அளவுக்கு மூளையில் ஏற்பட்டிருந்த தொற்றால் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சையை எதிர்நோக்கிக் காத்திருந்த பிரேசிலைச் சேர்ந்த நோயாளி ஒருவரைத் தனது பிரார்த்தனையின் மூலம் அன்னை தெரசா குணப்படுத்தினார் என்று சொல்லி, அதை அவரது இரண்டாவது அற்புதச் செயலாக போப் பிரான்சிஸ் சமீபத்தில் அங்கீகரித்தார். 2003 அக்டோபர் 19-ல் அன்னை தெரசாவுக்கு ‘ஆசீர்வதிக்கப்பட்டவர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டு, 13 ஆண்டுகாலத்துக்குப் பிறகு, வாடிகன் நகரின் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் அவருக்குப் புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல