சவுதி அரேபியாவில் வீட்டுப்பணிப் பெண்ணாக பணிபுரிந்து வந்த இலங்கைப் பெண்ணொருவர், வேலை வழங்குனர் குடும்பத்துடன் சுற்றுலாவிற்கு சென்றிருந்த வேளையில் 25 ஆயிரம் அமெரிக்க டொலர்களையும் மற்றும் மின் உபகரணங்களையும் திருடிச் சென்றுள்ளார்.
குறித்த பெண் ஜித்த மேற்கு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரிடமிருந்து கையடக்க தொலைபேசி, மடிக்கணனி மற்றும் பணம் என்பன ஆகியன மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
வெள்ளி, 28 ஜனவரி, 2011
என் பராமரிப்பில் வளரும் குழந்தை ரஷ்ய பிரதமருக்கும் எனக்கும் பிறந்ததல்ல
ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புட்டினுடனான இரகசிய காதல் தொடர்பில் குழந்தையொன்றுக்கு தாயாகியிருப்பதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள முன்னாள் உடற்பயிற்சி வீராங்கனையான அலினா கபயெவா, தனக்கும் விளாடிமிர் புட்டினுக்கும் குழந்தை எதுவும் பிறக்கவில்லையெனவும், தன் பராமரிப்பிலுள்ள குழந்தை தனது குழந்தையே அல்ல எனவும் தெரிவித்தார்.
Labels:
உலகப்பார்வை
ஜோர்தானில் இலங்கை பணிப்பெண்களின் ஆர்ப்பாட்டம்
மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்வாய்ப்பைப் பெற்றுச் செல்வோர் அந்நாட்டு வேலை வழங்குநர்களினால் மிகவும் மோசமாக அடிமைகளைப் போன்று நடத்தப்படுவதாக புகார்கள் மலிந்துவருகின்றபோதிலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை தேடிச்செல்வோரின் தொகையில் வீழ்ச்சியேற்பட்டதாகத் தெரியவில்லை.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்
தொலைக்காட்சியில் இடம்பெற்ற பாலியல் குற்றச்சாட்டு விவாதத்தின் போது இத்தாலிய பிரதமன் அதிரடி குறுக்கீடு
இத்தாலிய பிரதமர் சிவ்வியோ பெர்லுஸ்கொனி விலைமாதுகளுடன் கட்டணம் செலுத்தி பாலியலில் ஈடுபட்டாரா இல்லையா என்பது தொடர்பில் திங்கட் கிழமை இரவு தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்ட விவாத நிகழ்ச்சியின் போது இடை நடுவே தொலைபேசியில் தொடர்பு கொண்ட பெர்லுஸ்கொனி, நிகழ்ச்சியை நடத்தியவரை அவதூறு செய்து பார்வையாளர்களை அதிர வைத்துள்ளார்.
Labels:
உலகப்பார்வை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)









