புதன், 20 அக்டோபர், 2010

டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி தான்

1986 இல் சென்னை சூளைமேட்டில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேடப்படும் குற்றவாளி தான் என சென்னை நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பரஞ்சோதி தெரிவித்திருக்கிறார்.

1986 சம்பவத்தில் திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கு விசாரணை சென்னை நான்காவது கூடுதல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து 1994 இல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் சமீபத்தில் இந்தியா சென்ற டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் உரிமை கழகம் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தது. ஆனால் உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாத நிலையில் டக்ளஸ் தேவானந்தா இலங்கை திருபினார். அந்த வழக்கும் நிலுவையில் இருக்கிறது.

அரச குடும்பத்தினரை விமர்சித்ததால் டி.வி. சேனல் மீது தாக்குதல், ஊழியர்களுக்கு அடி, உதை (படங்கள் இணைப்பு)

குவைத் நாட்டில் ஒளிபரப்பை நடத்தி வரும் தனியார் டி.வி.சேனல் ஸ்கோப் டி.வி. ஆகும். இந்த சேனலில் செயின் வா ஷெயின் (நல்லதா? கெட்டதா?) என்ற பெயரில் ஒரு பேச்சரங்க நிகழ்ச்சி சனிக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சனிக்கிழமை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான பிறகு இந்த சேனலை நடத்தும் பஜர் அல் சயீத் என்ற பெண்ணுக்கு கொலை மிரட்டல் போன்கள் வந்தன. அதன் பிறகு சிலர் கையில் துப்பாக்கியோடும், கத்தியோடும் டி.வி.சேனல் அலுவலகத்துக்குள் புகுந்து தாக்கினார்கள்.

உலகின் மிகச் சிறிய உல்லாச ஹோட்டலொன்று மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது


ஒற்றை அறை கொண்ட அந்த ஹோட்டல் அண்மையில் புனரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. ஹோட்டல் திறந்த சில மணித்தியாலங்களுக்குள் அடுத்த இரண்டு வருடங்களுக்கு தேவையான  வாடிக்கையாளர்களால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.

இளவரசர் கடத்தப்பட்டது போன்று தயாரிக்கப்பட்ட ஆவணப்படத்தை ஒளிபரப்பக் கூடாது (படங்கள் இணைப்பு)


இளவரசர் ஹரி ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்டது போன்று புனையப்பட்ட ஆவணப்படம் ஒன்றை சேனல் 4 ஒளிபரப்ப இருந்தது ஏற்கனவே பல சர்ச்சைகளை உண்டாக்கியது.

ரஷியாவின் மாநிலமான செசன்யா சட்டசபையை தீவிரவாதிகள் கைப்பற்றினார்கள்

ரஷியாவின் அங்கமாக இருக்கும் செசன்யா மாநிலத்தில் முஸ்லிம்கள் அதிகமாக இருப்பதால், அந்த மாநிலத்தை தனிநாடாக மாற்ற தீவிரவாதிகள் ஆயுதப்போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

டைட்டானிக் கப்பலின் ஓவியம் 36 இலட்சத்திற்கு ஏலம்

பல உயிர்களை பலி வாங்கிய டைட்டானிக் கப்பலும் மற்றும் ஆர்.எம்.எஸ் ஒலிம்பிக் என்ற கப்பலும் சூரிய அஸ்தமத்திற்கிடையே கடலில் செல்வது போன்ற ஓவியம் அச்சடிக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை விற்பனைக்கு விடப்பட்டதில் அது 36 இலட்சத்திற்கு விற்பனையானது.

கோத்தாபய இல்லையென்றால் புலிகளை வென்றிருக்க முடியாது - பயங்கரவாத முறியடிப்பு வல்லுநர்!

பலம்வாய்ந்த பயங்கரவாத அமைப்புக்களுக்கு எதிரான போர்கள்கூட வெற்றிகொள்ளப்படலாம். அது எவ்வாறு என்பற்கு இலங்கை முன்னுதாரணமாகவுள்ளது.

இலங்கைத் தமிழர்கள் தலைப்பில் கருணாநிதியின் கண்ணீர் கட்டுரை

இலங்கைத் தமிழர்களுக்கு உரிமை பெற்றுத்தர மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

இஸ்ரேல் மீது உரிமை கோருவதை கைவிட தயார்: பாலஸ்தீன அதிபர்

பாலஸ்தீனம் என்ற பெயரில் தனி நாடு அமைந்து விட்டால் அதன் பிறகு இஸ்ரேல் மீது உரிமை கோருவதை கைவிடத் தயார் என்று பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.

இளவரசரின் புதிய காதலி (படங்கள் இணைப்பு)

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, 7 ஆண்டுகளுக்கு மேலாக ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த செல்சி டேவி என்ற பெண்ணை காதலித்து வந்தார். சமீபத்தில் அவர்களுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தார்கள். செல்சி டேவி புதிய காதலனை தேடிக்கொண்டார்.

முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் பொருட்களை சுருட்டிக்கொண்டு போய்விட்டார்

இங்கிலாந்து பிரதமராக டோனி பிளேர் இருந்தபோது, அவருக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்களில் 76 பரிசு பொருட்களை அவர் எடுத்து சென்ற விஷயம் தற்போது வெளியாகியுள்ளது.

உலகின் மிகவும் பழமையான விஸ்கி

உலகின் மிகவும் பழமையான 2 விஸ்கி பாட்டில்கள் ஒவ்வொன்றும் $ 158,000 விற்பனையாகி உள்ளன. இவற்றை வாங்கியவர்கள் இருவருமே இந்தியர்கள்.

குற்றம் நிரூபணமானால் சவூதி இளவரசருக்கு மரணதண்டனை (படங்கள் இணைப்பு)

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த வேலைக்காரனை அடித்துக் கொன்ற குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டால், சவூதி இளவரசர் அல்சவுத்துக்கு மரண தண்டனை கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சவூதி மன்னர் அப்துல்லாவின் பேரன் அல்சவுத் (34) தனது வேலைக்காரன் அப்துல் ஆசிஸுடன் (32) கடந்த பெப்ரவரி மாதம் லண்டனில் உள்ள லேண்ட் மார்க் ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது ஆசிஸ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

அபூர்வமான முறையில் மனைவியுடன் இணைந்து தோன்றிய ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புட்டின் (படங்கள் இணைப்பு)

விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புட்டின் இரகசியமாக விவாகரத்து செய்துள்ளதாக வதந்திகள் பரவி வருகின்ற நிலையில், அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புட்டின் தனது மனைவி லியுட்மிலாவுடன் இணைந்து பொது இடத்தில் தோன்றியுள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல