திங்கள், 5 ஜனவரி, 2015

மனிதம் மரித்­துப்­போன ஒரு நாளில்

தலிபான் அமைப்பின் கொலை­வெறித் தாண்­ட­வத்­துக்குப் பின்னர், பெஷாவர் நகர இராணுவப் பள்­ளிக்­கூ­டமே இரத்­தத்தை உறை­ய­வைக்­கும்­படி காட்சி தந்­தது. பள்ளிக் கட்­டி­டங்­களின் தாழ்­வா­ரங்­க­ளிலும் வகுப்­ப­றை­க­ளிலும் துப்­பாக்­கி­க­ளி­லி­ருந்து சீறிப் பாய்ந்த குண்­டுகள் ஏற்­ப­டுத்­திய வடுக்­களும், மாண­வர்­களின் உடல்­க­ளி­லி­ருந்து பீறிட்டு அடித்த இரத்­தமும், உட­லி­லி­ருந்து பிய்ந்த தசை­களின் துணுக்­கு­களும், சித­றிய பைகளும், புத்­த­கங்­களும், கரு­வி­க­ளு­மாகக் காட்­சி­தந்­தன.

என்ன தொழில் செய்யலாம் எப்படிப் பிழைப்பு நடத்தலாம்?

 கையில் கோடுகளாக வரையப்பட்டுள்ள அவரவர் ஜீவனேபாய வழிமுறைகள்

ஜீவ­னோ­பாயம் அனை­வ­ருக்கும் அவ­சியம். உயிர்­வாழ அதுவே ஆதா­ர­மா­னது. ஆனால் ஒரு­வ­ருக்­கொ­ருவர் வித்­தி­யா­ச­மா­னது. அதற்கு அந்­தந்த துறை­களில் அவ­ர­வர்க்­குள்ள ஆர்­வமும் ஆற்­ற­த­லுமே கார­ண ­மாகும். அவர் ஈடு­ப­டு­கிறார். கொள்ளை கொள்­ளை­யாகப் பணம் சம்­பா­திக்­கிறார் என்­ப­தற்­காக, அவரைப் பின்­பற்றி அத்­து­றையில் சற்றும் ஈடு­பா­டில்­லாத இன்­னொ­ரு­வரும் அத்­து­றையில் முயன்றால் வெற்றி பெற முடி­யாது. அது புலியைப் பார்த்து பூனை சூடு­போட்டுக் கொண்ட கதை­யா­கி­விடும். ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் ஒவ்­வொரு விதி­யுண்டு. அவ்­வி­திக்­கேற்ப வெவ்­வே­றான வாழ்க்­கை­யுண்டு. அது­போல தொழில் வழி­க­ளிலும் ஒன்­றுக்­கொன்று வித்­தி­யா­ச­மா­னவை.

குடும்பக் கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்­சை­; அதன் விளை­வு­களும் தீர்­வு­களும்

குடும்ப தம்­ப­திகள் தமது குடும்­பத்தில் இருக்கும் பல பிரச்­சி­னை­களை வெற்றி கொண்டு தமது குடும்­பத்­தை எவ்­வாறு அமைக்க வேண்டும் என திட்­ட­மிட வேண்­டி­யது அவ­சியம். அதா­வது தமக்கு இரண்டு பிள்­ளைகள் போதுமா அல்­லது மூன்று பிள்­ளைகள் போதுமா என திட்­ட­மிட்டு கொள்­வது சிறந்­தது. இன்­றைய கால கட்­டத்தில் அதி­க­ரித்து வரும் வாழ்க்கை செல­வினால் பல குடும்­பங்கள் தடு­மாறும் போது குடும்­பத்தை திட்­ட­மிட்டு அமைத்து கொள்­வது தங்­க­ளுக்கு இருக்கும் பிள்­ளை­களை நன்கு கற்­பித்து ஆரோக்­கி­ய­மாக வளர்க்க உதவும். இவ்­வாறு குடும்­பத்தை சரி­யாக திட்­ட­மி­டாது கர்ப்பம் தரித்து பிள்­ளைகள் பிறக்கும் போது குடும்­பங்கள் தடு­மா­று­வது தவிர்க்க முடி­யாமல் போகின்­றது. இந்­நி­லையில் இருக்கும் பிள்­ளை­க­ளையும் சரி­யாக கவ­னிக்­காமல் போகும் நிலை ஏற்­ப­டு­கின்­றது. இதனால் குடும்­பங்­களை திட்­ட­மிட உதவும் குடும்ப கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்சை பற்றி அறிந்­தி­ருப்­பது அவ­சி­ய­மாகும்.

குடும்­பக்­கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்சை நிரந்­த­ர­மா­னதா?

மணிக்­கட்டில் வலி

கத்­தியைப் பிடிச்சு மரக்­க­றி­தன்னும் வெட்ட முடி­யுதே. இந்தக் கையாலை பெருந்­தொல்லை” என்­றவர் ஒரு பெண்­மணி என்­பதைப் புரிந்து கொண்­டி­ருப்­பீர் கள்.

கை என்று பொது­வாகச் சொன்­னாலும் மணிக்­கட்­டைத்தான் குறிப்­பிட்டார். அது வும் ஒரு பக்­கத்தில் மட்­டுமே. இன்னும் தெளி­வாகச் சொன்னால் மணிக்­கட்டின் வெளிப்­பு­ற­மாக கட்டை விரலும் மணிக்­கட்டும் சந்­திக்கும் இடத்­தில்தான் வலி.

உயிரைக் கையில் பிடித்தவாறு விமானங்களில் பயணிக்க வேண்டிய நிலை

உலகில் அண்­மைக்­கா­ல­மாக அதி­க­ரித்­து­வரும் விமான விபத்­துக்­களால் உல­க­ளா­விய ரீதியில் மக்கள் மத்­தியில் ஒரு­வித பீதி நில­வு­கின்­றது. உயிரைக் கையில் பிடித்­த­வாறு மர­ண­ப­யத்­து­ட­னேயே விமானப் பய­ணங்­களை மேற்­கொள்ள வேண்­டிய நிலை இன்று ஏற்­பட்­டுள்­ளது. மறு­புறம் இது நவீன தொழில்­நுட்­பத்­துக்கு சவா­லா­கவும் மாறி­யுள்­ளது. மேலும், விமானப் போக்­கு­வ­ரத்துத் துறையில் பல்­வேறு நவீன தொழில்­நுட்ப வச­திகள் மேற்­கொள்­ளப்­பட்ட போதிலும், அவற்றால் விபத்­துக்­களை தடுக்க முடி­ய­வில்லை. அதுவும், அண்­மைக்­கா­ல­மாக இவ்­வா­றான சம்­ப­வங்கள் அடுத்­த­டுத்து நிகழ்ந்து வரு­கின்­றன. அதில் ஓர் அங்­க­மாக ஏர் ஏசியா விமான விபத்தும் இடம்­பெற்­றுள்­ளது.

அல்­சரும் அதன் உண்­மையும்

நேரத்திற் குச் சாப்­பி­டா­விட்டால் அல்சர் வரும் என்று உங்­க­ளுக்கு இத்­தனை நாளும் போதிக்­கப்­பட்­டுள்­ளது. அல்சர் பெரும்­பாலும் சரி­யான நேரத்­திற்குக் கடி­கா­ரத்தைப் பார்த்துச் சாப்­பி­டு­ப­வர்­க­ளுக்கே வரு­கி­றது என்­பதைத் தெரிந்து கொள்­ளுங்கள். ஒரு பாத்­தி­ரத்தில் தயிர் சாதமோ அல்­லது சாம்பார் சாதமோ எடுத்து வைத்து ஒரு பத்து பதி­னைந்து நாட்கள் கழித்துப் பாருங்கள். இப்­போது அந்தச் சாதம் கெட்­டுப்போய் நாற்றம் எடுக்கும். சில சமயம் புழுக்­கள்­கூட வந்­தி­ருக்­கலாம். மீண்டும் அந்தப் பாத்­தி­ரத்தை மூடி அப்­ப­டியே வைத்து விடுங்கள்.

லியோனாடோ டாவின்ஸி ஒரு சிறுகுறிப்பு

லியோனாடோ டாவின்சி என்றதும் முதலில் நினைவுக்கு வருவது அவர் வரைந்த உலகப் புகழ்பெற்ற ஓவியங்களான மோனாலிசா (MONALISA) மற்றும் கடைசி இராப்போசன விருந்து (THE LAST SUPPER) என்பவைகளாகும். அவர் உலகப் புகழ்பெற்ற ஓவியர் மட்டுமல்ல புகழ்பெற்ற கட்டடக் கலைஞரும் கண்டுபிடிப்பாளரும் பொறியியலாளரும் சிற்பியும் ஆவார்.

நெற்­றியில் ஏற்­படும் சுருக்­கங்­களை நீக்க...

கவலை இல்­லாத மனி­தனே இருக்க முடி­யாது. இன்பம் என்ற ஒன்று இருந்தால் கண்­டிப்­பாக துன்­பமும் இருக்­கவே செய்யும். உல­கத்தில் வாழும் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் ஒவ்­வொரு விதத்தில் கவ­லைகள் இருக்கும். பல­ருக்கு பண கஷ்டம் என்றால், இன்னும் பல­ருக்கு உடல் ரீதி­யான கஷ்­டங்கள். இன்னும் சில­ருக்கு மன ரீதி­யான கஷ்­டங்கள். இந்த ஒவ்­வொரு வகை­யான கஷ்­டங்­களையும் மேலும் பல வகை­யாக பிரிக்­கலாம். மனி­த­னுக்கு அவ்­வ­ளவு கஷ்­டங்கள் உள்­ளன. இப்­படி அவன் சந்­திக்கும் பல கஷ்­டங்­களில் ஒன்று தான் தனக்கு வய­தாகும் கஷ்டம்.

பட்டுப் போன்ற கால்­க­ளுக்கு ....

அழ­கிற்கு அதிகம் முக்­கி­யத்­துவம் கொடுக்கும் பெண்கள், முகம் மற்றும் கைக­ளுக்கு அள­வுக்கு அதி­க­மாக கவனம் செலுத்­து­வார்கள். ஆனால் அழகு என்­பது வெறும் முகம் மற்றும் கைகளில் மட்டும் இல்லை, கால்­க­ளிலும் தான் உள்­ளது. ஆம், சில­ருக்கு கால்கள் மிகவும் மென்­மை­யா­கவும், பட்டுப் போன்றும் இருக்கும். அத்­த­கை­ய­வர்கள் எந்த ஒரு ஆடை­யையும் கூச்­ச­மின்றி அணி­யலாம். ஆனால் சில­ருக்கு கால்­களில் அதி­கப்­ப­டி­யான முடி இருக்கும்.

எண்ணெய்ப் பசைக் கூந்­தலை என்­னதான் செய்­வது?

எண்ணெய் பசை­யான, பிசு­பி­சுப்­பான கூந்தல் என்­பது பர­வ­லாகப் பல­ரி­டமும் காணப்­ப­டு­கிற ஒரு பிரச்சினை. எண்ணெய் பசை­யான மண்டைப் பகு­தி­யி­லி­ருந்தே எண்ணெய் பசைக் கூந்தல் உரு­வா­கி­றது. மண்டைப் பகு­தியில் உள்ள செபே­ஷியஸ் சுரப்­பி­களின் தூண்­டலே இதற்குக் காரணம். செபே­ஷியஸ் சுரப்பி சுரக்கும் சீபம், கூந்தல் ஆரோக்­கி­யத்­துக்கு மிக அவ­சி­ய­மா­னது. அது ஈரப்­ப­தத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். அதுவே இந்த சீப­மா­னது அள­வுக்­க­தி­க­மாக சுரந்தால், கூந்தல் அதை கிர­கித்துக் கொண்டு, எண்ணெய் பசை தோற்றம் பெறும். சில­ருக்கு எண்ணெய் பசை கூந்­தலின் விளை­வினால், எண்ணெய் வழி­கிற சருமப் பிரச்­சினையும் சேர்ந்து கொள்­வ­துண்டு.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல