ஸ்ரீதேவிக்கு எதற்காக அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற இடத்தில் மதுபோதையில் குளியல் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி உயிர் இழந்தார் நடிகை ஸ்ரீதேவி. மும்பை கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நேற்று நடந்தது.