செவ்வாய், 18 மார்ச், 2014

மலேசிய விமானத்தை கடத்தவில்லை:தலிபான் பயங்கரவாதிகள் மறுப்பு

கோலாலம்பூர்:'காணாமல் போன மலேசிய விமானத்தை நாங்கள் கடத்தவில்லை' என, தலிபான் பயங்கரவாதிகள் மறுத்துள்ளனர். மலேசியாவின்,கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து, இம்மாதம், 7ம்தேதி, சீனாவுக்கு புறப்பட்ட விமானம், வியட்நாம் நாட்டின் எல்லைக்குள் சென்ற போது மாயமானது. விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், அந்த விமானத்தின் நிலை குறித்து, 12 நாட்களாகியும், இதுநாள் வரை, எந்த தடயமும் கிடைக்கவில்லை.சென்னையை சேர்ந்த ஒரு பெண் உட்பட ஐந்து இந்தியர்களும், கனடா நாட்டு தமிழர் ஒருவர் உட்பட, 239 பேர் இந்த விமானத்தில் பயணித்துள்ளனர்.

கருணாநிதிக்காக அழகிரியிடம் சமாதானம் பேசிய ரஜினி... அழகிரி அமைதி காப்பதன் பின்னணி!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டதால்தான் முக அழகிரியை தன் வீட்டுக்கு அழைத்து ரஜினி சமரசம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் போயஸ் கார்டன் சென்று சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்துப் பேசினார் அழகிரி. இந்த சந்திப்பு அரசியல் உலகில் பரபரப்பைக் கிளப்பியது. காரணம் அதற்கு முன்புதான் பிரதமர் மன்மோகன் சிங்கை டெல்லியில் சந்தித்திருந்தார்.

மலேசிய மாஜி பிரதமரின் சொந்தக்காரர் மாயமான விமானத்தின் பைலட்.. தமிழ் எம்.பியின் நண்பரும் கூட!

கோலாலம்பூர்: மாயமாகியுள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பைலட் ஜகாரி அகமது ஷா, தனது நெருங்கிய உறவினர்தான் என்று முன்னாள் பிரதமரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான அன்வர் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

பயங்கர சத்தத்துடன் விமானம் மிகத் தாழ்வாக பறந்ததை பார்த்தோம்: மாலத்தீவு வாசிகள்

மலேசிய விமானம் எம்.ஹெச்- 370 மாயமான அன்று (கடந்த 8ம் தேதி ) காலை ஒரு விமானம் மிகவும் தாழ்வாகப் தங்கள் தீவின் மீது பறந்ததைப் பார்த்ததாக மாலத் தீவின் ஹுதா ஹுவாதூ தீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவுடனான போரில் இந்தியா ஏன் தோல்வியை தழுவியது? ஆவணவம் சொல்வது இதுதான்..

டெல்லி: 1962ஆம் ஆண்டு சீனாவுடனான யுத்தத்தில் இந்தியா போரில் இறங்கியதற்கும் சரியான கணிப்புகளின்றி போரில் ஈடுபட்டதற்கும் அப்போதைய பிரதமர் நேருதான் காரணம் என்கிறது சர்ச்சைக்குரிய ரகசிய ஆவணங்கள். மத்திய அரசு வசம் உள்ள ரகசிய ஆவணங்களை அப்போதைய போரின் போது டெல்லியில் பணியாற்றிய ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் மேக்ஸ்வெல் திடீரென தமது இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேக்ஸ்வெல் வெளியிட்ட ராணுவ ரகசிய ஆவணங்களில் அப்படி என்னதான் கூறப்பட்டுள்ளது?

மாயமான மலேசிய விமானம் கீழே விழவும் இல்லை, வெடித்துச் சிதறவும் இல்லை: ஐ.நா. அமைப்பு

நியூயார்க்: மாயமான மலேசிய விமானம் எங்கும் விழவும் இல்லை, வெடித்துச் சிதறவும் இல்லை என்று ஐ.நா.வின் சி.டி.பி.டி.ஓ. அமைப்பு தெரிவித்துள்ளது.

'விமானம் காணாமல் போனதில் விமானிகளுக்கு தொடர்பு இருக்காது'

விமானத்தை கண்டு பிடிக்கக் கோரும் வாசகத்தில் சிறார்கள் கையெழுத்திடுகிறார்கள்

மலேசியன் ஏர் லைன்ஸ் விமானம் காணாமல் போனதற்கு அதன் விமானிகள் காரணமாக இருக்கலாம் என்ற சாத்தியத்தை அந்த விமானத்தின் இரு விமானிகளின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நம்ப மறுத்துள்ளார்கள்.

காணாமல்போன விமானம்: என்ன செய்துகொண்டிருந்தது மலேசிய இராணுவம்?

காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370 சம்பந்தமாக தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தரவுகள், தேடுதலிலும் விசாரணைகளிலும் பெருமளவிலான மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது.

பேஸ்புக்கில் இமெயில் இனி இல்லை...!

இன்றைக்கு நாம் பயன்படுத்தும் பேஸ்புக்கில் இ மெயில் சேவை இருந்ததா என்று கேட்டால், இல்லை என்று தான் நாம் சொல்லுவோம் ஆனால் உண்மையில் அப்படி ஒரு சேவை இருந்தது பேஸ்புக்கில்.

மலேசிய விமானம் எங்கு தான் உள்ளது?, என்ன தான் ஆனது?: 19 சாத்தியங்கள்

கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்திற்கு என்ன ஆகியிருக்கும், அல்லது எங்கு இருக்கும் என்பது தான் உலக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மலேசியாவில் இருந்து சீனாவுக்கு கடந்த 8ம் தேதி கிளம்பிய விமானம் மாயமானது. அதில் பயணித்த 239 பேரின் குடும்பத்தார் அவர்களுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் விமானம் எங்கு இருக்கக்கூடும் அல்லது அதற்கு என்ன ஆகியிருக்கக்கூடும் என்று பார்க்கலாம்.

'மலேசியா பொய் சொல்கிறது'- சோமாலியா அல்லது மங்கோலியாவில் விமானம் இருக்கலாம்: புதிய தகவல்

கோலாலம்பூர்: மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமாகியுள்ளது குறித்து மலேசிய அரசு தொடர்ந்து பொய் சொல்லி வருவதாகவும், விமானம் கடத்தப்பட்டு சோமாலியா அல்லது மங்கோலியாவில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல