சனி, 20 நவம்பர், 2010

நாய்க்குட்டிக்கு பெயர் வைக்க அழைப்பு

பல்கேரிய பிரதமர் பரிசளித்த நாய்க்குட்டிக்கு பெயர் வைக்க ஆலோசனை அளிக்குமாறு ரஷ்ய மக்களுக்கு பிரதமர் விளாடிமிர் புடின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

3ஜி ஒரு பார்வை

1. லைவ் டிவி – கூடவே வரும் செய்திகள்: 3ஜி மூலம் மொபைல் போனில், ஒரு கிரிக்கெட் மேட்ச் விளையாடப்படுவதை லைவ்வாக, எங்கு சென்றாலும் பார்த்துக் கொண்டே செல்லலாம். அதே போல, டிவி ஒன்றை நாடித்தான், செய்திகளைப் பெற வேண்டும் என்பதில்லை. எந்த நேரத்திலும் செய்திகள் ஒளிபரப்பப் படுவதனை, மொபைல் மூலம் பெறலாம்.

மஞ்சள் காமாலை

1.மஞ்சள்காமாலை ஹெபடைட்டிஸ் என்றால் என்ன?

மஞ்சள் காமாலை என்பது கல்லீரலில்(LIVER) கிருமித்தொற்று ஏற்படுவதைக் குறிக்கிறது.

2.பொதுவாக மஞ்சள் காமாலை எதனால் ஏற்படுகிறது?

கலிலியோ

கலிலியோ... இன்றைய அறிவியல் புரட்சிக்கு 15 ஆம் நூற்றாண்டிலேயே வித்திட்டவர். நவீன வானியலின் தந்தை எனக் குறிப்பிடப்படுகின்றார்.

சார்லி சாப்ளின் படத்தில் செல்போன் காட்சி இடம்பெற்றுள்ளது (வீடியோ இணைப்பு)

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்புதான் செல்போன் கண்டுபிடிக்கப்பட்டதாக நாம் அனவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், மறைந்த நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் படத்திலேயே செல்போன் காட்சி இடம்பெற்றிருப்பது, ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு அபலையின் அகிம்சைப் போராட்டம்

மகாத்மா காந்தி மனித குலத்திடம் கையளித்துவிட்டுச் சென்ற அரசியல் ஆயுதம் அகிம்சை. அந்த ஆயுதமே இந்தியாவுக்கு பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலையைப் பெற்றுக்கொடுத்தது என்று நம்புகிறோம். ஆனால், இன்றைய உலகச் சூழ்நிலையில் அகிம்சையை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதில் இருக்கக்கூடிய நடைமுறைச் சாத்தியப் பிரச்சினை குறித்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்படவே செய்கின்றன.

யாழ். பிரபல தனியார் பாடசாலை மாணவி தவறான நடத்தை காரணமாக பாடசாலையை விட்டு இடைநிறுத்தம்

யாழ் நகர்ப்பகுதியில் உள்ள பிரபல தனியார் பாடசாலை மாணவி பாடசாலையை விட்டு இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
நகர்ப் புறத்தைச் சேர்ந்த தனியார் பாடசாலை மாணவனை இவர் காதலித்து வந்ததாகவும் இந் நிலையில் இவர்கள் இருவரும் முத்தங்கள் பரிமாறி சேர்ந்திருக்கும் படங்கள் சில தவறான இணையத்தளங்களிலும் முகப் பக்கங்களிலும்  வந்துள்ள நிலையில் இதனை அந்த  பெண்கள் பாடசாலை அதிபர்களுக்கு சில நலன்விரும்பிகள் தெரிவித்தவுடன் விசாரனைகளை ஆரம்பித்த அதிபர் சம்பவம் உண்மை என்று அறிந்து அம் மாணவியை பாடசலையில் இருந்து இடைநிறுத்தியுள்ளார்.

கடத்தப்பட்டவர்களுக்காக கப்பம் செலுத்தியும் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை

காணாமல் போன மற்றும் கடத்தப்பட்ட தமது உறவுகளை விடுவிப்பதற்காக நாம் பல ஆயிரங்களைக் கப்பமாகச் செலுத்தியும் எமது உறவுகள் இதுவரை எம்மிடம் வந்து சேரவில்லை. அவர்களை விடுவியுங்கள் அல்லது கண்டு பிடித்துத் தாருங்கள் என திருகோணமலை மாவட்டத்தில் காணாமல் போன மற்றும் கடத்தப்பட்டோன் பெற்றோர் சங்கத்தினர் கண்ணீர் மல்க மன்றாடிக் கேட்டுள்ளனர்.

கட்டாரில் இலங்கைதமிழர் கொலை

மத்திய கிழக்கு நாடான டோகா கட்டாரில் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய சந்திரன் என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இலங்கைத்தமிழருக்கு பிரான்ஸில் சிறையும் அபராதமும்

போலி விஸாவில் பிரான்ஸ் நாட்டுக்குள் நுழைய முயன்ற வவுனியாவைச் சேர்ந்த சின்னையா தேவலிங்கம் என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒரு வருடத்துக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரு வருடகால கடூழிய சிறைத்தண்ட னையும் 50,000 ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இவர் குற்றத்தை ஒப்புக் கொண்டமையையடுத்து இந்தக் குறைந்த பட்சத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2008 ஆண்டில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அந்நாட்டுப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இவரை விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தார்.

அறிவோம்

o கனடா என்ற பிரெஞ்ச் மொழிச் சொல்லுக்கு, பெரிய கிராமம் என்று பெயர்,
o இஸ்ரேல் நாட்டில் மூன்று பேருக்கு ஒருவர் செல்போன் வைத்திருக்கிறார்.

சவுதியில் நடந்த சித்ரவதை கொடுமை

இந்தோனேசியாவில் இருந்து சவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலைகளுக்காகச் செல்பவர்கள் மீது நடத்தப்படும் சித்ரவதைகளுக்கு, இந்தோனேசிய அதிபர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இரட்டைச் சகோதரிகள் ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கிப்பிரயோகம் - தற்கொலை முயற்சி?

அமெரிக்காவில் வசிக்கும் அவுஸ்திரேலிய இரட்டைச் சகோதரிகள் தற்கொலை செய்து கொள்ளும் முகமாக ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒபாமாவை நடராஜாவாக சித்தரித்ததால் இந்துக்கள் கண்டனம்!

அமெரிக்காவின் பிரபல செய்தி சஞ்சிகையான 'Newsweek',இந்துக்களின் கடவுள் நடராஜரை அவமதிக்கும் விதத்தில் தனது அட்டைப்படத்தை உருவாக்கியுளதாக அமெரிக்க இந்துக்கள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

சூரிய ஆற்றலில் பறக்கும் விமானம்

சூரிய ஆற்றலில் இயங்கக் கூடிய விமானத்தை சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் உருவாக்கி வெற்றிகரமாக பறக்கச் செய்துள்ளனர். சோதனை அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த சிறிய ரக விமானம் முற்றிலும் சூரிய ஆற்றலில் செயல்படக் கூடியதாகும். பகலில் சூரிய ஆற்றலைப் பெற்று அதன் மூலம் இரவிலும் செயல்படக்கூடிய விமானத்தை வெற்றிகரமாக பறக்கச் செய்துள்ளனர்.

புற்று நோய்க்கு தீர்வு

மருத்துவ உலகில் தண்டுக்கலம் முறை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பல்வேறு வியாதிகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அந்த வரிசையில் இரத்தப் புற்று நோய்களான அனீமியா, தலசீமியா போன்வற்றையும் குணப்படுத்தலாம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டது. ஜப்பானைச் சேர்ந்த ரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆய்வுக் குழு இதை கண்டுபிடித்து உள்ளது.

லஸ்கர் இ தொய்பா மிக ஆபத்தான இயக்கம்

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாத இயக்கங்களில் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்பாடுகளில் ஆர்வம் காட்டி வரும் இயக்கம் லஸ்கர் இ தொய்பா. சமீப காலமாக அது அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த இயக்கம் பாகிஸ்தானில் சமூகசேவை செயல்களில் ஈடுபட்டு வருவதால் அதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் நிதி உதவி அளித்து வருகிறது. அதோடு இந்த இயக்கத்துக்கு எதிராக பாகிஸ்தான் அரசாங்கம் ஒருபோதும் நடவடிக்கை எடுக்காது.

மிதக்கும் நகரங்களை கடலில் உருவாக்குகிறது ஜப்பான்

பசுபிக் சுற்றுச்சூழல் மாசுபாட்டிலிருந்து தப்பிக்கவும், நகர்ப்புற நெருக்கடியைக் குறைக்கவும் கடலில் மிதக்கும் நகரங்களை உருவாக்குகிறது ஜப்பான்.

செக்ஸ் ரோபோட்

அமெரிக்காவை சேர்ந்தவர் டக்ளஸ் ஹைன்ஸ். 48 வயதான இவர் ஒரு செக்ஸ் ரோபோட்டை உருவாக்கி இருக்கிறார். இந்த ரோபோட்டுக்கு ராக்சி என்று பெயர் சூட்டி இருக்கிறார். இது 5 அடி 6 அங்குலம் உயரம் உள்ளது. சிலிகானை கொண்டு தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த ரோபோட் பேசவும் செய்யும். இந்த ரோபோட்டை இங்கிலாந்து நாட்டுக்கு விநியோகிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

காதல் அறை கேட்கும் அகதிகள்

இந்தோனேஷியாவில் மெராபி எரிமலை சீற்றத்துக்கு கிட்டத்தட்ட 250 பேர் பலியானார்கள். இந்த சீற்றத்தில் இருந்து அதை சுற்றி உள்ள பகுதிகளில் வசித்த மக்களை காப்பாற்றுவதற்காக அரசாங்கம் அவர்களை அங்கு இருந்து அகற்றி பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து உள்ளது.

தூக்கு தண்டனை பெற்ற பெண்ணை விடுவிக்க வேண்டும்

பாகிஸ்தானை சேர்ந்த கிறிஸ்தவ பெண் ஆசியா பீபீ. இவர் ஒரு விவசாய கூலி. 5 குழந்தைகளுக்கு தாயான இவர் முஸ்லிம் மதத்தை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அவருக்கு கோர்ட்டு மரண தண்டனை விதித்து உள்ளது. இதையடுத்து போப் ஆண்டவர் பெனடிக்ட் பாகிஸ்தான் அரசுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

ஒபாமாவை தோற்கடிப்பேன்

கடந்த முறை நடந்த ஜனாதிபதி தேர்தலில் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்த சாரா பாலின் ஒரு பேட்டியில் அடுத்த முறை நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஒபாமாவை தோற்கடிப்பேன் என்று கூறி இருக்கிறார்.

மூன்று வயது குழந்தையை கற்பழித்து கொன்ற காமுகனுக்கு சாகும் வரை சிறை தண்டனை!

மூன்று வயது குழந்தையை கற்பழித்து கொலை செய்த காமுகனுக்கு, விழுப்புரம் கோர்ட் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. அவன் சாகும் வரை தண்டனை அனுபவிக்க வேண்டுமென நீதிபதி தீர்ப்பளித்தார்.

புலிகளின் இராணுவ தலைவர்கள் சரணடைந்ததாக அவர்களின் மனைவிமார் வெளியிட்டுள்ள தகவல்களை முற்றாக நிராகரிப்பதாக சவேந்திர சில்வா தெரிவிப்பு!

புலிகளின் இராணுவ தலைவர்கள், இலங்கை இராணுவத்திடம் சரணடைந்ததாக அவர்களின் மனைவிமார் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் வெளியிட்டுள்ள தகவல்களை முற்றாக நிராகரிப்பதாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்டனி, யாழ்ப்பாணத்திற்கான புலிகளின் கட்டளைத் தளபதி தீபன் உள்ளிட்ட தலைவர்கள் சிவில் உடையில் இருந்தவாறே போரிட்டதாகவும் தீபனின் சடலத்தை தாம் தனிப்பட்ட ரீதியில் அடையாளம் கண்டதாகவும் இவர் சாதாரண உடையில் காணப்பட்டதாகவும் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

பயங்கரவாத விசாரணை பிரிவினர் எனக் கூறி தமிழ் வர்த்தகர்களை அச்சுறுத்தி கப்பம் பெற்று வந்த குழு கைது!

பயங்கரவாத விசாரணை பிரிவினர் எனக் கூறி தமிழ் வர்த்தகர்களை அச்சுறுத்தி கடந்த காலத்தில் கோடிக்கணக்கில் கப்பம் பெற்று வந்த குழுவொன்றை சேர்ந்த தலைவர் உள்ளிட்ட 7 பேர் கடந்த 18 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.இவர்களிடம் இருந்து இரண்டு கைதுப்பாக்கிகள், ஒரு கிளைமோர், இராணுவத்தினரின் இலச்சினையுடன் கூடிய கார் மற்றும் மோட்டார் சைக்களில் என்பவற்றை காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

புலிகளின் சர்வதேச வலையமைப்பின் நடவடிக்கைகளை முடக்கும் வகையில் புதிய வலையமைப்பு செயற்படும் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது!

புலிகளின் ஈழ வலையமைப்பை தகர்த்தெறிவதற்காக இலங்கையில் விசேட வலையமைப்பொன்று உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுற்றுலா பயணிகள் நாடு கடத்தப்பட்டனர்

இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்த இரு லெபனான் குடியேற்றவாசிகள் இன்று காலை நாடு கடத்தப்பட்டிருந்தனர். அரசிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதானாலேயே அவர்கள் நாடு கடத்தப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த யுவதியை உங்களுக் தெரியுமா?

வன்னியில் இறுதி யுத்தத்தின் போது மீட்கப்பட்ட யுவதி ஒருவர் தற்போது பூந்தோட்டம் பொலி ஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

3 தமிழர்களையும் நாடு கடத்துமாறு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

மெக்ஸிக்கோவில் இருந்து அமெரிக்காவுக்குள் பிரவேசித்து சட்டவிரோதமாக குடியேறமுற்பட்ட 3 இலங்கை தமிழர்களையும் நாடு கடத்துமாறு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாய்லாந்தில் கடந்த புதன்கிழமை 30 இலங்கை தமிழர்கள் உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

தாய்லாந்தின் சொங்க்லா பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்புத் தேடுதலின் போது, மொத்தமாக கைதுசெய்யப்பட்ட 50 பேரில் 30 தமிழர்களும் உள்ளடங்குவதாக த ஆசியன் ட்ரிபியூன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

உதவி கோருகிறார்

கொழும்பு 13ஐச் சேர்ந்த சுப்பிரமணியம் குகநாதன் எனும் 21 வயதுடைய இளைஞர் சிறு வயது முதல் சிறுநீர் கோளாறினால் பாதிக்கப் பட்டுள்ளார்.

உண்ணாவிரதத்தை முடித்தார் மகசின் சிறைச்சாலை கைதி தேவதாசன்

வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தக் கோரி, கடந்த ஐந்து நாட்களாக உண்ணாவிரதம் இருந்த, கொழும்பு மகசின் சிறைச்சாலைக் கைதியான கனகசபை தேவதாசன் (வயது 53), இன்று பிற்பகல் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டுள்ளார்.

இறுதிகட்ட யுத்தின் போது பொது மக்களை புலிகள் சுட்டனர்

இறுதிகட்ட யுத்தின் போது கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளியேறிய பொது மக்களை புலிகள் சுட்டதாக முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வி. சண்முகராஜா தெரிவித்துள்ளார்.

நேர்த்தி கடனை நிறைவேற்ற வந்த தம்பதி இராணுவ வாகனத்தில் மோதி பலி

நேர்த்தி கடனை நிறைவேற்ற வந்த தம்பதியினர் இராணுவ வாகனத்தில் மோதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

மன்னாரில் அநாதைச் சடலம் மீட்பு : அரச செலவில் அடக்கம் செய்ய நீதிபதி உத்தரவு

மன்னார் புனித செபஸ்தியார் தேவாலய வளாகத்தினுள் கடந்த 06ஆம் திகதி நஞ்சருந்தி, உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க வயோதிபர் மீட்கப்பட்டார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல