படம்: இணையத்திலிருந்து பெறப்பட்டது
திங்கள், 24 செப்டம்பர், 2012
உலக முஸ்லிம்களை உசுப்பிவிட்டுள்ள ஒரு திரைப்படம் அமெரிக்காவிற்கு எதிராக அணிதிரளும் முஸ்லிம்கள்
Labels:
இஸ்லாம்,
உலகப்பார்வை
கடாஃபியின் காமலீலைகள்
லிபிய அதிபர் கடாஃபி , மக்கள் புரட்சி காரணமாக சென்ற வருடம் ஆட்சியில் இருந்து கவிழ்க்கப்பட்டார். பின்னர் கிளர்ச்சியாளர்களின் கைகளில் சிக்குண்டு பரிதாபமாக இறந்தார் என்ற விடையத்தைப் பலரும் அறிவோம். இரும்புக்கரம் கொண்டு லிபியாவை கடாஃபி ஆட்சிசெய்தார் என்று அமெரிக்கா சொல்லிவந்தாலும், இறுதி நேரத்தில் அவர் கொல்லப்பட்ட விதம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியதோடு கடாஃபி தொடர்பாக ஒரு பரிதாபத்தையும் தோற்றுவித்தது. என்ன தான் இருந்தாலும் ஒரு நாட்டுத் தலைவரை இப்படியா கொல்வது என்று பலராலும் கடாஃபி பரிதாபமாகப் பார்க்கப்பட்டார். ஆனால் அவர் பின்னால் மறைந்திருக்கும் பல விடையங்களை பிரெஞ்சு பத்திரிகை நிரூபர் அனிக் கோஜீன் (Annick Cojean) முதல் முதலாக வெளிச்சத்துக்கு கொண்டுவருகிறார்.
Labels:
இஸ்லாம்,
உலகப்பார்வை
அதிசயம் ஆனால் உண்மை... (காணொளி இணைப்பு)
இந்த வீடியோவைப் பார்த்தால் இப்படியும் நடக்குமா என்று எண்ணத்தோன்றும். ரஷ்யாவில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் ஏற்பட்ட விபத்து இது. சுமார் 60 மைல் வேகத்தில் சென்ற பார ஊர்தி ஒன்று இடதுபக்கமாக திரும்பியுள்ளது. ஆனால் இந்த வீதியில் நேராக வந்த வாகனம் ஒன்று பார ஊர்தியோடு மோதியுள்ளது. அதன் ஓட்டுனர் அப்படியே தூக்கி வீசப்பட்டுள்ளார். விபத்தின் விசை காரணமாக தூக்கி வெளியே வீசப்பட்ட நபர் முன் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே வரும்போது, தனது கைகளால் எதனையோ இறுக்கப் பிடித்துவிட்டார். இதனால் அவர் தூக்கி வீசப்படும்போது வீதியில் விழாமல் தப்பித்துவிட்டார். வீடியோவைப் பாருங்கள் விடயம் புரியும் !
Labels:
காணொளிகள் (Videos),
வினோதமான செய்திகள்
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது: பின் கதவால் தப்பியோடிய அதிகாரிகள் !
அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட திரைப்படம் என்று சொல்லப்படும், மற்றும் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்தைக் கண்டித்து உலகெங்கும் உள்ள முஸ்லீம்கள் கொதித்துப்போயுள்ளனர். பல உலக நாடுகளில் உள்ள அமெரிக்க தூதுவராலயங்கள் தாக்கப்பட்டதோடு, மேலும் பல நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு முன்பாக முஸ்லீம்கள் போராட்டங்களை நடத்தி தமது எதிர்ப்பைக் காண்பித்து வருகின்றனர். இதேவேளை இலங்கையில் உள்ள முஸ்லீம்களும் கடந்த வெள்ளிக்கிழமை தமது எதிர்ப்பைக் காண்பித்திருந்தனர். இதனை அடுத்து இன்று திங்கட்கிழமை காலையும் ஒரு பாரிய போராட்டம் வெடித்துள்ளது. கிழக்கு மாகான கவர்னர் அலவி மெளலானா தலையில் இக்கண்டனப் போராட்டம் அமைதியாக இடம்பெற்றது.
மம்முட்டியின் மனசு
சமீபத்தில் சிவகாசியில் நடந்த வெடி விபத்தில் காயம் அடைந்தவர்களுக்காக 35 லட்சத்திற்கு மருந்து வாங்க சென்ற போது கொஞ்சம் குறையுங்கள் என்று கேட்டபோது, மருத்துவ நிறுவன நிர்வாகி முதலாளிக்கு தொலைபேசியில் சொல்ல ,எதற்காக மருந்து வாங்கப்படுகிறது என்று விசாரித்து இருக்கிறார். சிவகாசியில் காயம் அடைந்தவர்களுக்கு என்று சொன்னதும், “அவர்களிடம் பணம் எதுவும் வாங்க வேண்டாம். மருந்து கொடுத்துவிடுங்கள் அதை என் கணக்கில் வைத்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டார் மருந்து கம்பெனி முதலாளி. அந்த மருத்துவ நிறுவன அதிபர் நடிகர் மம்முட்டி. இதுவே தமிழ்த்திரைப்பட நடிகர்களாக இருந்தால் பிரஸ்மீட் வைத்து தங்கள் கருணை உள்ளத்தை வெளிச்சம் போட்டிருப்பார்கள். ஆனால் மம்முட்டி இதை வெளியிடவில்லை. மம் முட்டியின் பெரிய மனதை பாராட்டலாம்.
Labels:
சினிமா,
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)






