உலகெங்கும் பல தேசங்களில் யுத்தம் நடக்கிறது. புரட்சி நடக்கிறது. கலவரம் நடக்கிறது. சில புரட்சிகள் நியாயமானவை. பல உள்நோக்கம் கொண்டவை. ஆட்சி மாற்றம், அதிகார மாற்றம், பதவிப் பித்து தலைக்கேறி கவிழ்ப்பு முயற்சிகளில் ஈடுபடுவோர் தூண்டிவிட்டு பல்லாயிரக் கணக்கான மக்கள் கிளர்ச்சியில் ஈடுபடுகிறார்கள்.