புதன், 8 பிப்ரவரி, 2012

ஈழப் போரின் இறுதி நாட்கள்: அத்தியாயம் 9

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நார்வே மற்றும் அமெரிக்காவின் அவசர சேதியுடன் சந்திப்பதற்கான ஆலோசனை கோலாலம்பூர் ஹில்டன் ஹோட்டலில் முடியும் கட்டத்தில் இருந்தது. வன்னியில் புலிகளுக்கும், ஸ்ரீலங்கா ராணுவத்துக்கும் இடையே யுத்தம் இறுதிக் கட்டத்தில் நடந்துகொண்டு இருந்த பகுதிக்கு தாமே நேரில் சென்று பிரபாகரனைச் சந்திக்க தயார் என்று நார்வே தூதரிடம் கூறியிருந்தார் கே.பி.

ஈழப் போரின் இறுதி நாட்கள்: அத்தியாயம் 8

யுத்தம் முடிவதற்கு 3 மாதங்களுக்கு முன், “விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்தால்தான் மேற்கொண்டு ஏதாவது செய்ய முடியும்” என்று கூறிய நார்வேயுடன் எதற்காக பேசணும்? இந்த தொடரின் கடந்த அத்தியாயத்தை (கடந்த அத்தியாயங்களைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்) படித்த சிலர் எம்மிடம் கேட்ட கேள்வி இது. இந்த கேள்விக்கு ஒரு பதில் உள்ளது.

ஈழப் போரின் இறுதி நாட்கள்: அத்தியாயம் 7

உருத்திரகுமாரனின் ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்டுக்கு விசா கொடுப்பதற்கு 24 மணி நேரம் கால அவகாசம் தேவை என்று கூறிவிட்டது தாய்லாந்தில் இருந்த மலேசிய தூதரகம். அதன்படி, நார்வே குழுவினருடன் பேச்சுவார்த்தை நடைபெறும் 26-ம் தேதிதான் விசா கிடைக்கும் என்றாகிவிட்டது. 26-ம் தேதி காலை 9 மணிக்கு கோலம்பூர் ஹில்டன் ஹோட்டலில் இவர்களைச் சந்திக்க நார்வே குழு சகல ஏற்பாடுகளையும் செய்துவிட்ட நிலையில், அதிலும் மாற்றங்கள் ஏதும் செய்ய முடியாது.

ஈழப் போரின் இறுதி நாட்கள்: அத்தியாயம் 6

பாங்காக்கில் இந்திய உளவுத்துறை றோ ஒரு பக்கமாக கே.பி.-யைத் தேடிக் கொண்டிருக்க, இந்தியாவின் அன்றைய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி எப்படியாவது கே.பி.-யை இந்திய அரசிடம் ஒப்படைக்குமாறு தாய்லாந்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார். தாய்லாந்து வெளியுறவு அமைச்சுக்கு கே.பி. பற்றி எந்தத் தகவலும் தெரிந்திராத நிலையில், பிரணாப் முகர்ஜி, தாய்லாந்து பிரதமரிடம் இது தொடர்பாக நேரில் பேசினார்.

ஈழப் போரின் இறுதி நாட்கள்: அத்தியாயம் 5

ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா?
கே.பி., தாய்லாந்து உளவுத்துறை கூறியபடி உடொன்-தானி விமான நிலையம் ஊடாக தாய்லாந்தில் இருந்து வெளியேறி லாவோஸ் நாட்டுக்குள் செல்வது என்பதே திட்டம். அதிலும் ஒரு சிக்கல் உள்ளது என்பதை தாய்லாந்து உளவுத்துறைக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. அந்த சிக்கல் கே.பி. வைத்திருந்த பாஸ்போர்ட்!

ஈழப் போரின் இறுதி நாட்கள்: அத்தியாயம் 4

உருத்திரகுமாரன் அமெரிக்காவில் இருந்து விமானம் ஏறி போய் இறங்கிய இடம் பாங்காக் என்று கடந்த பாகத்தை முடித்திருந்தோம். கேப்பிட்டலுக்கு வாருங்கள் என்று மலேசியாவின் தலைநகருக்கு வருமாறு கூறினால், தாய்லாந்தில் தலைநகர் பாங்காக் விமான நிலையத்தில் போய் இவர் எதற்காக இறங்கினார்?

ஈழப் போரின் இறுதி நாட்கள்: அத்தியாயம் 3

ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா?
வன்னியில் ரொம்பவும் ஆபத்தான சிறிய பகுதிக்குள் சிக்கியிருந்த புலிகளின் தலைவர், தளபதிகள், போராளிகள் மற்றும் பொதுமக்களை காப்பாற்றும் முயற்சிகள் தொடங்கின. இந்த முயற்சியில் அமெரிக்காவும் நார்வேயும் ஒன்றாகவே இறங்கியிருந்தாலும், அமெரிக்கா சைலன்ட் பார்ட்னர் போல நார்வேயை முன்னிறுத்தியே காரியங்களைச் செய்தது.

ஈழப் போரின் இறுதி நாட்கள்: அத்தியாயம் 2

ஈழப் போரின் இறுதி நாட்கள்: உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா?
நார்வேயும் அமெரிக்காவும் புலிகளை ஆயுதங்களை கீழே வைக்கச் செய்யும் முயற்சியில் தமக்குள்ளே திட்டம் போடத் தொடங்கியது பிப்ரவரி மாத நடுப்பகுதியில். இது நடைபெற்ற காலப்பகுதியில் ராணுவத்தினால் முற்றுகையிடப்பட்ட பகுதிக்குள் புலிகளின் முக்கியஸ்தர்கள் பலர் (தளபதிகள், பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள்) உயிருடன் இருந்தார்கள்.

ஈழப் போரின் இறுதி நாட்கள்: அத்தியாயம் 1

The Sri Lankan government declares a limited ceasefire from 1 to 3 February 2009 to allow civilians to leave, but the LTTE restricts the number of people allowed to depart and uses the lull to launch a counter strike. At the same time, two foreign nations crafted a plan on a government guaranteed amnesty for LTTE cadres other than the top leadership.

நார்வேயின் Pawns of Peace அறிக்கையில் வெளியாகியுள்ள சில விஷயங்கள் ஏற்படுத்திய சர்ச்சைகள் ஓயவில்லை. மாறாக, முன்பைவிட அதிகமாகின்றன. சர்வதேச அரசியல் நகர்வுகள் பற்றிய அன்டர்ஸ்டான்டிங் இருந்தால், இந்த அறிக்கை இவ்வளவு நாட்களின் பின் இப்போது ஏன் வெளியிடப்படுகின்றது என்பது சுலபமாக புரியும்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல