அத்தியாயம் 06
ஆகஸ்ட் 3-ம் தேதி, மதியம் 2 மணிக்கு மூதூர் டவுன், முழுமையாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. மூதூர் ராணுவ முகாம் புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது. கடற்படை தளம் மீது புலிகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர். கடற்படை தளத்துட் ஒட்டியிருந்த போலீஸ் நிலையம், அந்த நிமிடம்வரை தாக்குதலுக்கு உள்ளாகவில்லை.




