சனி, 23 ஜனவரி, 2010

பிரான்சுக் கலாசாரத்தில் மூழ்கிப் போயுள்ள மொரீஷியஸ் தீவு மக்கள்!


இந்து சமுத்திரத்தில் பரிணமித்துள்ள ஒரு சிறு தீவுதான் மொரீஷியஸ் ஆகும். இத்தீவு இந்திய பெருங்கடல், பசுபிக் மற்றும் அட்லாண்டிக் ஆகிய கடல்களால் சூழப்பட்டுள்ளது என்றும் கூறலாம்.

மடகஸ்கருக்கு அருகில் நிலை கொண்டுள்ள மொரீஷியஸ் தீவு மிகவும் குறுகிய கால வரலாற்றைக் கொண்டுள்ளது எனலாம். அதன் தொன்
 மை நாணூறு ஆண்டுகளுக்குட்பட்டது என்று ஆய்வாளர்கள்
 கூறுகின்றனர்.

வேட்டைக்காரனை ஓட்டுவதற்காக தியேட்டர்கள் படும் பாடு!


தசாவதாரம் படத்தில் பல்ராம் நாயுடுவின் மொழித் திறமை குறித்து அவரது உதவியாளர் வெள்ளைக்கார அதிகாரிகளிடம் கூறுகையில், சார், நான்கு மொழிகளில் தெலுங்கு பேசுவார் என்று பிரமாதப்படுத்திக் கூறுவார்.

அந்தக் கணக்காக ஆகியுள்ளது வேட்டைக்காரன் பட விளம்பரங்கள்.

வேட்டைக்காரன் படம் வெளியாகி 30 நாட்களையே எட்டியுள்ள நிலையில் 40 நாட்கள் என்று கூறி போஸ்டர் அடித்துக் கலக்கியுள்ளனர் சென்னையில்.

டிசம்பர் 18ம் திகதி வேட்டைக்காரன் ரிலீஸானது நேற்றுடன் அப்படம் 30 நாட்களைத் தொட்டுள்ளது. ஆனால் அதற்குள் 40 நாட்கள் போஸ்டரை ஒட்டி விட்டனர். சென்னையில் இதைப் பார்த்து விஜய் ரசிகர்களுக்கே கொஞ்சம் போல குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இது மட்டுமா... வேட்டைக்காரன் படத்துக்கு ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் என்று ஆடித்தள்ளுபடி ரேஞ்சுக்கும் போஸ்டர்களை ஒட்டி அசத்தி வருகின்றனர் விஜய் ரசிகர் மன்றத்தினர்.

மேலும், குறைந்த கட்டணத்தில் என்ற புது பிட்டையும் வேட்டைக்காரன் பட போஸ்டர்கள் மீது ஒட்டி வருகின்றனராம் தியேட்டர்காரர்கள்.

எப்படியோ வேட்டைக்காரனை ஓட்டுவதற்காக இவர்கள் படும்பாடு வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.

காணாமல் போன பூஜா


பூஜாவை முன்பு போல திரைப்படங்களில் காண முடியவில்லை. இதுகுறித்துக் கேட்டால் பூடகமாகப் பேசுகிறார்.

நான் கடவுள்தான் பூஜா நடித்து வந்த கடைசித் தமிழ்ப்படம். இதற்குப் பிறகு பூஜாவை ஒரு படத்திலும் காண முடியவில்லை. அவர் எந்தப் படத்திலும் நடிப்பதாகவும் தெரியவில்லை.

அதைவிட முக்கியமாக இப்போது அவரை இந்தியாவிலும் கூட அதிகம் காண முடியவில்லை. தாய் மண்ணான இலங்கையிலேயே அதிகம் இருக்கிறாராம்.

இதுகுறித்து பூஜாவிடம் கேட்டால், இலங்கையிலேயே அதிக நேரத்தை இப்போது நான் செலவிடுகிறேன். எனக்கு ரகசிய கல்யாணம் நடந்து விட்டதாக வதந்திகள் கிளம்புகின்றன. அதுவல்ல உண்மை.

நான் எதையும் ரகசியமாக செய்பவள் அல்ல. எது செய்தாலும் சொல்லிவிட்டுத்தான் செய்வேன்.

இலங்கையில் அதிக நேரத்தை செலவிடுவதால் அடிக்கடி என்னால் பெங்களூருக்கோ சென்னைக்கோ வர முடியவில்லை. அதுதான் நான் படங்களில் அதிகம் நடிக்காமல் இருப்பதற்குக் காரணம் என்கிறார் பூஜா.

இலங்கையிலேயே அதிக நேரத்தை கழிப்பதாகக் கூறும் பூஜா அதற்கான காரணத்தை விளக்கவில்லை. ஒருவேளை சிங்களப் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரத் தொடங்கி விட்டாரா என்ற கேள்வியும் எழுகிறது. சமீபத்தில் 2 சிங்களப் படங்களில் பூஜா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரேயாவின் துணிச்சல்


சுஜாதா நாவலின் தலைப்பு அல்ல இது. ஸ்ரேயா ஏறக்குறைய நிர்வாணமாகவே போஸ் தந்திருக்கும் கலண்டருக்கான தலைப்பு ஹொலிவூட் நடிகைகளையே மல்லுக்கு அழைக்கும் அளவுக்கு முன்னேறி விட்டார் ஸ்ரேயா.

சமீபத்தில் 2010 கலண்டருக்காக ஹைதராபாத்தில் ஸ்டுடியோ ஒன்றில் அவர் கொடுத்த போஸ்கள்தான் இன்றைய செய்தி. தென்னிந்திய சினிமா மாத இதழ் ஒன்றுதான் ஸ்ரேயாவை இப்படி அப்பட்டமாக துகிலுரிந்துள்ளது.

முன்பு மாக்சிம் இதழுக்கு இதழுக்கு அவர் கொடுத்த போஸ்களை விட இரண்டு மடங்கு அதிக கவர்ச்சி காட்டியுள்ளார். இந்த முறை இந்த கலண்டரை சமீபத்தில் ஸ்ரேயாவே அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படங்களில் நடித்த முன்னணி கதாநாயகிகள் எவரும் இவ்வளவு துணிச்சலாக அழகைக் காட்டியதில்லையாம்.

அட அவ்வளவு ஏன்... இதே காலண்டரில் ரீமா சென்னின் படமும் உள்ளது. ஆனால் ஸ்ரேயாவிடம் அவர் படுதோல்வியைத் தழுவியிருக்கிறாராம். காட்டும் விஷயத்தில்...

ஊரையெல்லாம் சிரிக்க வைத்த வடிவேலு, இப்போது தாங்க முடியாத சோகத்தில்!


காமெடி என்றால் இன்று கவுண்டமணிக்குப் பிறகு கொடிகட்டிப் பறப்பவர் வடிவேலுதான்.

மனிதர் திரையில் தோன்றினாலே மனசு லேசாகி சிரிக்க ஆரம்பித்துவிடுவோம். ஒரு வெள்ளந்தியான கிராமத்து மனிதராக திரையில் சேட்டைகள் செய்யும் வடிவேலு, கிட்டத்தட்ட நிஜத்திலும் அதே வெள்ளந்தித்தனத்தோடு இருந்து விட்டார்.


அதன் விளைவு பெரும் நஷ்டத்தில் தவிக்கிறார். கூட இருந்த கூட்டாளி நடிகர்களே வடிவேலுவின் அறியாமையைப் பயன்படுத்தி பல கோடி ரூபாயைச் சுருட்டிக் கொண்டு ஓடியிருக்கிறார்கள்.

இதன் விளைவு இன்று கண்ணீரில் தவிக்கிறார் மனிதர்.

இதற்கு முன்பே கூட இதுபற்றி மீடியாவில் பேசிக்
 கொண்டார்கள் என்றாலும், வருமான வரித்துறையினர் சமீபத்தில் வடிவேலு வீட்டிலும் அலுவலகத்திலும் சோதனை நடத்தியபோதுதான் இந்த விஷயம் வெளியே தெரிய வந்துள்ளது.

ஹபரணத் தாக்குதல், நாவற்குழி சம்பவம், கிட்டு மீதான தாக்குதல்!


அது – 1987 ம் வருடம் ஏப்ரல் மாதத்தின் இரண்டாவது வாரமாகும். தமிழ் - சிங்களப் புத்தாண்டு நிறைவுற்றிருந்தது. எனினும் புத்தாண்டின் ஆரவாரம் இன்னும் முற்றாக நீங்கியிருக்கவில்லை.

குயில்களின் கூவல்களும் பட்டாசுகளின் ஓசைகளும் முற்றாக ஒய்ந்துவிடவில்லை.

ரெலோ – சிறிசபாரட்ணம் மீதான தாக்குதல்!


திம்புப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன. இதன் பிரகாரம் நான்கு அமைப்புக்களின் இணைவான ஈழத் தேசிய விடுதலை முன்னணி (நுNடுகு) தொடர்பில் பிரபாகரனுக்குள் ஆரம்பத்தில் இருந்த வெறுப்பு வெளியில் வருவதற்கான சந்தர்ப்பம் வாய்த்தது.

இந்த இணைவு உருவாக்கப்பட்டிருந்த ஆரம்ப காலகட்டத்தில் அதன் கூட்டங்களில் கலந்து கொண்ட பிரபாகரன் பின்னர் அக்கூட்டங்களில் கலந்து கொள்வதைத் தவிர்த்து வந்தார்.

ட்ரை ஸ்டார் விமானத்தாக்குதல்!


அக்கால கட்டத்தில் தமிழ் விடுதலை இய்ககங்களை ஒன்றிணைப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

தமிழர் அமைப்புக்கள் மத்தியிலான ஒற்றுமை முயற்சி எனும் போது முதலாவதாக வல்வெட்டித்துறை ஞானமூர்தி, வேற்பிள்ளை, சபாரட்ணம் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டது.

அனுராதபுரம், வில்பத்து படுகொலைகள்!


அரச மரத்து இலைகளால் வானம் மறைக்கப்பட்டிருந்தது. காலை நேரச் சூரியன் அரச மர இலைகளினூடாக பூமியை நோக்கி வெளிச்சத்தைப் பாய்ச்சிக் கொண்டிருந்தான்.

சில்லென்ற காற்று அங்கிருக்த பக்தர்களின் மேனிகளை வருடிச் சென்றது. அந்த ஸ்பரிசம் பக்தர்களுக்கு மிகவும் இதமாக இருந்தது. பக்தர்கள் பௌத்த தர்ம சுலோகங்களை உச்சரித்துக் கொண்டிருந்தனர். எங்கு பார்த்தாலும் வெள்ளை உடைகளில் காட்சி தந்த பக்தர்களின் பக்தி பரவசமான நிலையில் அப்பகுதி மெய்மறந்திருந்தது.

யாழ் தேவி மீதான தாக்குதல்!


பிரகாசமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்த வானம், மெல்ல… மெல்ல… செந்நிறமாக மாறிக் கொண்டிருந்தது.

சூரிய வெப்பத்தால் சூடேறி தகதகத்துக் கொண்டிருந்த பூமி, சற்று ஆறுதல் அடைந்து காணப்பட்டது.

பஸ்தியாம் பிள்ளையினதும், 13 இராணுவத்தினரதும் கொலைச் சம்பவங்கள்!


1977 ம் வருடம் ஜூலை மாதம் 21ம் திகதி நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற்றது. இத் தேர்தலில் 140 தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி அமோக வெற்றியைப் பெற்று வரலாற்றில் பெரும்பாண்மை அங்கத்தவர்களைக் கொண்டு ஆட்சிபீடமேறியது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு 7 ஆசனங்கள் மட்டுமே கிடைக்க தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு 18 ஆசனங்கள் கிடைத்தன. இதன் மூலம் இலங்கை வரலாற்றில் ஒரு தமிழர் எதிர்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இதனால் தமிழ்பேசும் மக்களிடையே பெரிதும் மகிழ்ச்சி காணப்பட்டது.

யாழ்.மேயர் அல்பிரட் துரையப்பா கொலை!


கொலையாளிகள் அங்கிருந்து சென்றதன் பின்னர், கடை உரிமையாளரான அந்தப் பெண், “அவர்கள் சென்று விட்டார்கள்……. வெளியில் வாருங்கோ” என அங்கு மறைந்திருந்த யோகநாதனுக்குக் கூறினார்.

ஆபாசப்படம்: ஷகீலாவிடம் கோர்ட்டில் ரகசிய விசாரணை


நெல்லையில் ஆபாச படம் திரையிடப்பட்ட வழக்கில் நடிகை ஷகீலா நேற்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜாரானார். நீதிமன்றத்தில் அவரிடம் ரகசிய விசாரணை நடந்தது.

இறந்த கணவரின் உயிர் அணுவைப் பயன்படுத்தி இரட்டைக் குழந்தை பெற்ற பெண்


லண்டன் : பிரிட்டனில், திருமணம் ஆன இரண்டாவது நாளே கணவனை இழந்த பெண், இரண்டு ஆண்டுகளுக்கு பின், தற்போது இரட்டைக் குழந்தைகளை பெற்றுள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல