“ராஜீவ் காந்தியோட அந்த சாவுதான் எங்களோட வாழ்க்கையையும் சூறையாடப் போவுதுன்னு அப்ப தெரியல்ல” என்கிறார் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள். இந்த நாட்டில் சர்வவல்லமை பொருந்திய அமைப் புக்களோடு 23 வருடங்கள் போராடி உங்கள் மகனைத் தூக்குக் கொட்டடியிலிருந்து மீட்டிருக்கிறீர்கள். இந்தப் போரா ட்டத்துக்கான மனோபலம் எங்கிருந்து உருவானது?
பெரியார்க்கிட்டே இருந்துதான்பா உருவானுச்சு. நான் பொறந்தது தி.மு.க. குடும்பத்துல. எங்கப்பா டி.எ.திருவேங்கடம் கட்சியில எந்தக் கூட்டம், போராட்டம்னாலும் எங்களையும் கூடவே அழைத் துக்கிட்டுப்போயிடுவார். குரல் ஒப்பிக்கிறது. கூட்டங்கள்ல பேசுறதுன்னு வாய்ப்புக் கிடச்சப்பல்லாம் போய்க்கிட்டுத்தான் இருந்தேன். ஆனால் உண்மையான அரசியலை பெரியார்க்கிட்டேயிருந்துதான் கத்துக்கிட்டேன்.
பெரியார்க்கிட்டே இருந்துதான்பா உருவானுச்சு. நான் பொறந்தது தி.மு.க. குடும்பத்துல. எங்கப்பா டி.எ.திருவேங்கடம் கட்சியில எந்தக் கூட்டம், போராட்டம்னாலும் எங்களையும் கூடவே அழைத் துக்கிட்டுப்போயிடுவார். குரல் ஒப்பிக்கிறது. கூட்டங்கள்ல பேசுறதுன்னு வாய்ப்புக் கிடச்சப்பல்லாம் போய்க்கிட்டுத்தான் இருந்தேன். ஆனால் உண்மையான அரசியலை பெரியார்க்கிட்டேயிருந்துதான் கத்துக்கிட்டேன்.





