வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

பிழைப்பில் மண் போட்ட சிங்களமும் பிழைப்புக் கெட்டவர்களும்!

 யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது சிங்களம் செய்த தவறு! யார் இந்தச் சிங்களம்? ஜனாதிபதி ராஜபக்சாவேதான். நாளாந்தம் கொலைகள் நடக்கலாம். சிறுவர்கள் கடத்திச் செல்லப்பட்டு பலாத்காரமாக யுத்தம் புரியவைத்டு அழிக்கப்படலாம். பின்னர் கல்லறை கட்டி ஒவொரு வருடமும் மாவீரர் விழாக்கள்,கரும்புலி விழாக்கள் கொண்டாடலாம்.

லண்டன்: கனவுகளின் தேசம் அல்ல

வந்தாரை வாழவைக்கும் நகரம் என்ற பெயரை லண்டன் தற்போது இழந்திருக்கிறது.

மட்டக்களப்பிலிருந்து எனது நீண்ட கால நண்பர் தொலைபேசி எடுத்துச் சொன்னார். “உங்கை லண்டனுக்கு எனது சொந்தக்காரப் பொடியன் (இளைஞன்) ஒருத்தன், ஸ்ருடன்ற் (ஸ்டூடண்ட்) விசாவில் வாறான். ஒரு வேலை எடுத்துக் கொடுங்கோ”. இப்படியான தொலைபேசி அழைப்புகள் சிலோனிலிருந்து அடிக்கடி எனக்கு வரும். லண்டன் பெரும் சீமை என்று ஒரு பெருமை அந்தக் காலத்தில் இருந்தது. பொருளாதாரச் சிக்கல்களுக்கான தீர்வின் இடமாகவும் லண்டன் முன்பு ஒரு காலத்தில் இருந்ததுதான். ஆனால், இப்போது அப்படி இல்லை.

அமிர்தலிங்கம் கொலையின் பின்னர், புலிகள் மேற்கொண்ட நடவடிக்கை: உண்மையின் பின்னணியென்ன? (பகுதி-2)

அமிர்தலிங்கம் படுகொலைக்குப் பிறகு அந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்துக் கொள்ள எல்.ரீ.ரீ.ஈ முயற்சி மேற்கொண்டது. (2) - டி.பி.எஸ்.ஜெயராஜ்

குழப்பமடையச் செய்யும் தந்திரங்கள்

பிரேமதாஸ ஆட்சியும் கூட குழப்பமடையச் செய்யும் தந்திரங்களை தொடர்ந்தன. 1989ல் அமைச்சர் ரஞ்சன் விஜேரட்ன ஒரு பத்திரிகையாளர்கள் மாநாட்டை நடத்தினார். அதில் அப்போதைய காவல்துறை கண்காணிப்பாளர் நாயகம்(ஐ.ஜி.பி) ஏணஸ்ட் பெரேராவும் பங்கு பற்றியிருந்தார்.

அமிர்தலிங்கம் கொலையின் பின்னர், புலிகள் மேற்கொண்ட நடவடிக்கை: உண்மையின் பின்னணியென்ன? (பகுதி-1)

அமிர்தலிங்கம் படுகொலைக்குப் பிறகு அந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்துக் கொள்ள, எல்.ரீ.ரீ.ஈ முயற்சி மேற்கொண்டது. (1) - டி.பி.எஸ்.ஜெயராஜ்

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் மற்றும் அவரது சகாவான வெற்றிவேலு யோகேஸ்வரன் ஆகியோர் 1989 ஜூலை 13ல், புலிகளின் தாக்குதல் பிரிவு ஒன்றினால் படுகொலை செய்யப்பட்டபோது,தமிழீழ விடுதலைப் புலிகளைப் பிரதிநிதித்துவ படுத்தும் உத்தியோகபூர்வ தூதுக்குழு ஒன்று ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் அரசாங்கத்துடன் கொழும்பில் பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்டிருந்தது.

புலிகளின் அழிவுக்கு காரணம் பெண் தெய்வம் கண்ணகியா?...

த‌மிழ்ப்பெண் க‌ண்ண‌கியைக் க‌ட‌வுளாக‌ வ‌ழிபடும் முறை த‌மிழ்நாட்டில் வ‌ழ‌க்கொழிந்து போனாலும் அது ஈழத்த‌மிழ‌ர்க‌ளிட‌மும், முன்னாள் சேர‌நாட்டுத் த‌மிழ‌ர்க‌ளாகிய‌ ம‌லையாளிக‌ளிட‌மும், சில‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ளிட‌மும் இன்றும் காணப்ப‌டுகிற‌து. த‌ம‌து முன்னோர்க‌ள் த‌மிழ‌ர்க‌ள் என்ப‌தை ஒப்புக்கொள்ள‌ ம‌றுக்கும் சிங்க‌ள‌வ‌ர்க‌ள் கூட‌ த‌ம‌து தமிழ் முன்னோர்க‌ள் வ‌ழிப‌ட்ட‌ க‌ண்ண‌கியை 'பத்தினி தெய்யோ' இன்றும் வ‌ண‌ங்குவ‌தைக் காண‌லாம்.

சீமானின் பிரபாகரன் புராணம்

சீமானை இன்று வரை நாம், ஒரு நடிகனாக, இயக்குனராக மற்றும் ஈழ உணர்வாளராக ஏற்க முடியும். ஆனால் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளியாக ஏற்க முடியாது. புலத்தில் இருந்து, சமாதான காலப் பகுதியில் வன்னிக்கு வருவோரை சாதாரணமாக சந்திப்பது மாதிரித் தான், எம் தேசியத் தலைவரையும் சீமான் சந்திப்பதற்கு வாய்பு கிடைத்தது. சீமான் வன்னிக்கு வந்த காலத்தில், இரண்டு முறை தான் தேசியத் தலைவரை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இரண்டு முறையும் விருந்து அளித்த பொழுது, பக்கத்தில் இருந்த முக்கிய போராளிகள் இன்று வரை உயிரோடு தான் இருக்கின்றார்கள். சீமான், எம் தேசியத் தலைவர் தன்னிடம் "ஜங்கரன் இன்டநஷனலைக்கு" படம் செய் என்று சொன்னதாக, பொய்யான தகவல்களை பிரச்சாரமாக செய்வதை அவர்கள் கேள்விப்படும் போது ஏன் சீமான் இப்படியெல்லாம் செய்கின்றார் என்று வேதனையடை கின்றார்கள்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல