ஞாயிறு, 15 நவம்பர், 2015

சுமந்திரனின் பதில் என்ன?

தமிழ்த் தேசிய அரசியலில் ஆக்கபூர்வமான விடயங்கள் நடைபெறுகிறதோ இல்லையோ, ஆனால் அவ்வப்போது சர்ச்சைகளுக்கு மட்டும் குறைவில்லை. அண்மைக்காலமாக இப்படியான சர்ச்சைகள் பெரும்பாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான இலங்கை தமிழரசு கட்சியில், சம்பந்தனுக்கு அடுத்த நிலையில் நோக்கப்படுபவரும், கூட்டமைப்பின் சார்பில் அதன் சர்வதேச விவகாரங்களை கையாளும் அதிகாரம்மிக்கவருமான ஆபிரகாம் மதியாபரணம் சுமந்திரனின் கருத்துக்களை அடியொற்றியே வட்டமிடுகின்றன. இதற்கு என்ன காரணம்?

சற்று முன் யாழ்ப்பாணத்தைப் புயல் தாக்கத் தொடங்கியது (photos)

இன்று மாலையில் இருந்து வடபகுதியில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களில் கடும் மழை பெய்து கொண்டிருப்பதாகவும் சற்று முன் அங்கு கடும் காற்று வீசி வருவதாகவும் தெரியவருகின்றது. தென்மராட்சியின் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

வடக்கு முதல்வரை விலக்கினால் என்ன நடக்கும்?

'தமிழ் மக்­க­ளுக்­கான காத்­தி­ர­மான நிலைப்­பாட்டை முத­ல­மைச்சர் எடுத்­துள்ளார். ஆகவே இலங்கை அர­சாங்­கத்­தின்பால் தான் கொண்­டுள்ள பிர­சா­ரத்­துக்கு உத­வி­யாக இருக்க வேண்­டு­மென்ற நோக்கம் கரு­தியே முத­ல­மைச்­சரை கட்­சி­யி­லி­ருந்து விலத்த வேண்­டு­மென்று சுமந்­திரன் கோரு­கிறார். எனவே ராஜி­னாமா செய்ய வேண்­டி­யவர் முத­ல­மைச்சர் அல்லர். தமிழ் மக்­களின் நல­னுக்கு விரோ­த­மாக பேசி­வரும் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­துக்கு மாறாக பேசி­வரும் சுமந்­தி­ரனே ராஜி­னாமா செய்ய வேண்­டு­மென்­பதை புரிந்து கொள்ள வேண்டும்.


'அண்­மையில் கூட்­ட­மைப்பின் கூட்டம் நடை­பெற்ற வேளையில் சுமந்­திரன் ஒரு விட­யத்தை புட்டுக் காட்­டினார். முத­ல­மைச்சர் இரண்­டரை வரு­டங்­களின் பின் தனது பத­வியை விட்­டுக்­கொ­டுப்பேன் எனக் கூறி­யி­ருந்தார். அதை இப்­பொ­ழுது அவ­ருக்கு நினைவு படுத்­து­கின்றேன் என பூட­க­மாக சுட்­டிக்­காட்­டினார். இதில் நாம் சுட்­டிக்­காட்ட வேண்­டிய விடயம் என்­ன­வெனில் ஆகா­யத்தில் பறந்து கொண்­டி­ருந்த விக்­னேஷ்­வரன் அவர்­களை ஏணியை வைத்து இறக்கி விட்­ட­வர்கள் ஐயா சம்­பந்­தனும் சுமந்­தி­ர­னு­மாகும். ஆகவே முத­ல­மைச்­ச­ருக்கும் உங்­க­ளுக்கும் இடையே தோன்­றி­யுள்ள முரண்­பாடு உங்­க­ளு­டைய பிரச்­சி­னையே தவிர எங்­க­ளு­டைய பிரச்­சினை இல்­லை­யென நான் சுமந்­தி­ர­னுக்கு தெரி­வித்தேன். –தர்­ம­லிங்கம் சித்­தார்த்­தன்

வட­மா­காண முத­ல­மைச்­சரை கட்­சி­யி­லி­ருந்து விலக்­கு­வ­த­னாலோ அல்­லது பதவி வில­கும்­படி கோரு­வ­த­னாலோ எந்த நன்­மையும் கிடைக்கப் போவ­தில்லை. மாறாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இரண்­டாக உடையும் நிலையே உரு­வாகும். இப்­போ­தைக்கு அமைதி காப்­பதே சிறந்­தது. இவ்­வாறு தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் தெரி­வித்­தனர்.

மாலைதீவுச் சிக்கலுக்குள் மாட்டிக்கொள்ளுமா இலங்கை?

இந்­தியப் பெருங்­க­டலில் சுமார் 1,192 தீவு­களைக் கொண்ட சிறிய நாடான மாலை­தீவில் அண்­மையில் நடந்து வரும் சம்­ப­வங்கள், அயல் நாடான இந்­தி­யாவை மட்­டு­மன்றி, இலங்­கைக்கும் கூட சில ஆபத்­தான சமிக்­ஞை­களை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

மாலை­தீவு ஜனா­தி­பதி அப்­துல்லா யாமீன் பயணம் செய்த படகில் கடந்த செப்டெம்பர் மாதம் நிகழ்ந்த வெடிப்புச் சம்­பவம் அங்கு பாது­காப்பைக் கேள்­விக்­கு­றி­யாக்­கி­யி­ருக்­கி­றது.

அரசியல் கைதிகளின் விடுதலையும் தமிழ் கட்சிகளின் குடும்பிபிடிச் சண்டையும்

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்­பாக முன்­வைக்­கப்­பட்­டுள்ள கோரிக்­கைகள் குறித்து தமக்குப் பூரண விப­ரங்கள் நாளை திங்­கட்­கி­ழமை தெரி­ய­வ­ரு­மெ­னவும், அதன் பின்னர் அது தொடர்­பான முடிவு எடுக்­கப்­ப­டு­மெ­னவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னிடம் உறு­தி­ய­ளித்­துள்ளார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் கடந்த வியா­ழக்­கி­ழமை சந்­தித்து நீண்ட நேரம் உரை­யா­டினார். இதன்­போதே ஜனா­தி­பதி இந்த உறு­தி­மொ­ழியை வழங்­கி­யுள்­ள­தாக அவர் தெரி­வித்தார்.

தமிழ் அர­சியல் கைதிகள் விடு­தலை

'24 தமிழ் அர­சியல் கைதிகள் கொழும்பு நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டனர். இருந்தும் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தி­ட­மி­ருந்து தமக்கு எது­வித அறி­விப்பும் கிடைக்­க­வில்லை என்று அரச தரப்பு சட்­டத்­த­ரணி நீதி­மன்­றத்தில் தெரி­வித்­ததை அடுத்து 24 கைதி­களும் மீண்டும் சிறைச்­சா­லைக்கு அழைத்துச் செல்­லப்­பட்­டனர். நீதி­மன்­றத்­தி­லி­ருந்து இந்த அர­சியல் கைதிகள் சிறைச்­சாலை பஸ் வண்­டிக்கு அழைத்துச் செல்­லப்­பட்ட போது அங்கு கூடி நின்ற ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் பல்­வேறு வகை­யான விமர்­ச­னங்­களை தெரி­வித்­தனர். இந்த விமர்­ச­னங்கள் அவர்­க­ளது உள்ளக்கிடக்­கை­களை வெளி­யி­டு­வ­தாக அமைந்­தி­ருந்­தது.

புதன்­கி­ழமை மாலை கொழும்பு நீதவான் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்டும் பிணை பெற முடி­யாமல் மீண்டும் சிறைச்­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்ட 31 தமிழ் அர­சியல் கைதி­களில் 24 கைதிகள் நேற்று முன்­தினம் வெள்­ளிக்­கி­ழமை பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ள னர். இவர்கள் தங்­க­ளது உற­வி­னர்­க­ளுடன் சொந்த இடங்­க­ளுக்கு திரும்பிச் சென்­றனர்.

காதலின் நகரத்தில் இரத்தக்களரி - பாரிஸ் நகரத் தாக்குதல்கள்

அதனைக் காதலின் நகரம் என்றும் கூறு­வார்கள். அழ­கி­யலின் உச்­சத்தைத் தொட்ட புராதனக் கட்­ட­டங்கள். செவிக்­கி­னிமை தரும் பிரெஞ்சு மொழி. நடுத்­தெ­ருவில் தயக்க ­மின்றி முத்­த­மிட்டு அன்பை வெளிப்­ப­டுத்தும் காதல் சிட்­டுக்கள்.

பிரான்சின் தலை­நகர் பாரிஸ். அதில் வெள்­ளிக்­கி­ழமை இரவு என்­றாலே கொண்­டாட்டம். ஆடல், பாடல், நாடகம், சினிமா என்று கலை­களின் கொண்­டாட்டம் ஒரு­புறம். ஒரு­வார கால உழைப்பின் சலிப்பை ஓரங்­கட்டச் செய்யும் விளை­யாட்டுப் போட்­டிகள் மறு­புறம்.

எவன்கார்ட் சர்ச்சை. என்னதான் நடக்கிறது?

அர­சாங்­கத்தை ஆட்டிப் படைத்துக் கொண்­டி­ருக்கும், எவன்ட்கார்ட் விவ­கா­ரத்தில் என்ன தான் நடந்து கொண்­டி­ருக்­கி­றது என்ற குழப்பம் பல­ருக்கும் ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

முன்­னைய அர­சாங்­கத்தின் காலத்தில் உரு­வாக்­கப்­பட்ட எவன்ட்கார்ட் மரிரைம் சேவிசஸ் நிறு­வ­னமே, இந்தச் சர்ச்­சைகள் எல்­லா­வற்­றுக்கும் கார­ண­மா­கி­யுள்­ளது. இதன் தாய் நிறு­வனம், எவன் கார்ட் பாது­காப்பு சேவைகள் நிறு­வனம். இது இலங்­கையில் உள்ள மிகப் பெரிய தனியார் பாது­காப்பு நிறு­வனம் என்­பதும் இதில் 6,500க்கும் வரை­யானோர் பணி­யாற்­று­கின்­றனர் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது. இப்­போது சர்ச்­சைக்­குள்­ளா­கி­யி­ருக்கும் எவன்கார்ட் மரிரைம் நிறு­வனம், போர் முடி­வுக்கு வந்த பின்னர், 2011ஆம் ஆண்டு, இலங்­கையின் கம்­ப­னிகள் சட்­டத்­துக்கு அமைய உரு­வாக்­கப்­பட்­டது.

நீங்களும் அழைக்கலாம் 1929

"நீங்கள் ஏதே­னு­மொரு வித­மாக பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு இலக்­கா­கு­மி­டத்து அது ஒரு போதும் உங்கள் தவ­றன்று. நீங்கள் தவறு செய்­த­தாக ஒரு போதும் எண்ண வேண்டாம். பாலியல் துஷ்­பி­ர­யோ­க­மா­னது எப்­பொ­ழுதும் வளர்ந்­த­வர்­க­ளினால் அல்­லது பலம் மிக்­க­வர்­க­ளினால் புரி­யப்­ப­டு­கின்ற தவ­றான செய­லாகும். நீங்கள் வருந்­து­வதன் மூலம் குற்ற உணர்ச்­சிக்கு இட­ம­ளிக்­கா­தீர்கள். மேலும் மற்­ற­வர்கள் உங்கள் மீது குற்றம் சுமத்த இடமளிக்கவும் வேண்டாம்"

தற்­போது நாட்டில் அதி­க­ரித்து வரும் சிறுவர் பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு பல அணு­கு­மு­றைகள் காணப்­ப­டு­கின்­றன. இருந்­த­போ­திலும் அவை எந்­த­வி­த­மான பிர­தி­ப­லிப்­பையும் காட்­டு­வ­தாக தெரி­ய­வில்லை. ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு வகையில் சிறு­வர்கள் பாதிக்­கப்­ப­டு­கின்­றார்கள். அவற்­றிலும் சில சம்­ப­வங்­களே வெளிச்­சத்­துக்கு கொண்­டு­வ­ரப்­ப­டு­கின்­றன.

முகத்தில் ஏற்­படும் தழும்­பு­க­ளுக்கு

முத்தம் கொடுத்­தாலும் சிவப்பு நிறத்தில் தழும்­புகள் விழும் என்­பது தெரி­யுமா? குறிப்­பாக, இம்­மா­தி­ரி­யான நிலை திரு­ம­ண­மான புதுத்­தம்­ப­தி­யர்­க­ளுக்கு அதிகம் ஏற்­படும். இத்­த­ழும்­பு­க­ளா­னது நீல நிறத்­திலோ அல்­லது சிவப்பு நிறத்­திலோ மற்றும் சில நேரங்­களில் வீக்­கத்­து­டனோ இருக்கும். முத்­தத்தால் ஏற்­படும் தழும்­பு­களை எளிதில் போக்­கலாம். இங்கு உங்கள் துணையின் முத்­தத்தால் ஏற்­பட்ட தழும்­பு­களைப் போக்க சில எளிய இயற்கை வழிகள் கொடுக்­கப்­பட்­டுள்­ளன. அதைப் படித்து அவற்றை முயற்­சித்து அந்த தழும்­பு­களைப் போக்­குங்கள்.

என்ர மகள் தமிழினி நாட்டுக்காகவே வாழ்ந்து அந்த ஏக்கத்துடனேயே போனாள் தாயாரான சின்னம்மா கூறுகிறார்

"தமி­ழினி தடுப்­பால வந்­த­வு­டனும் சிலர் அவ கேட்­கிற மாதி­ரியே கதைச்­சி­ருக்­கினம் பிள்­ளை­களை பிடிச்சி கொண்டு போய் கொன்று போட்டு அவ மட்டும் உயி­ரோட வந்­திட்டா என்று. இப்­படி பலர் கதைப்­பினம். இதால தமி­ழி­னிக்கு இங்க வாழ விருப்பம் இல்­லாமல் போயிட்டு வெளிய வெளிக்­கிட்டு போக முடி­யாது விடு­த­லை­யாகி வந்தும் சிறைக்குள் இருக்­கிற மாதிரி இருக்க அவ விரும்­ப­யில்ல அதால தான் அவ கொழும்­புக்கு போயிட்டா. பூந்­தோட்டம் தடுப்பில் இருந்து வந்த பிறகு கொழும்­பில்தான் அதிகம் இருந்­தவ. அவ­வுக்கு இங்க (பரந்­தனில்) இருக்­கவே விருப்பம் இல்லை" என்­கிறார் தமி­ழி­னியின் தாய் சின்­னம்மா.

யாழ்.கொடி­கா­மத்தில் சம்­பவம்

"பிள்­ளையை அர­சாங்­கத்­தி­லேயே வைச்சு அவங்­களே படிப்­பிச்சு பாத்­துக்­கி­னமாம், அதுக்கு நாங்க மாசம் மாசம் கொஞ்ச காசு கட்­டினா சரியாம், இது எங்­க­ளுக்கும் கஷ்­ட­மில்­லாத வேலை தானே" என்றார் சிறு­மியின் தந்தை.

கடந்த முதலாம் திகதி காண­ாம­லாக்­கப்­பட்டு பின்னர் பொலி­ஸாரால் மீட்­கப்­பட்டு தற்­போது அரச பொறுப்பில் இருக்கும் சிறுமி நிரஞ்­சி­னியின் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) தந்­தையின் கருத்தே இது.

கர்ப்ப காலத்தில் தோன்றும் நீரிழிவு

பெண்கள் கர்ப்ப காலத்­தின்­போது இரு வகை­யான நீரி­ழிவு நோயை எதிர்­கொள்­ளக்­கூடும். அதா­வது அப்பெண் கர்ப்­பந்­த­ரிப்­ப­தற்கு முன்­பி­ருந்தே நீரி­ழிவு நோயா­ளி­யாக இருத்தல் அல்­லது சாதா­ரண ஒரு பெண்­ணாக இருப்­ப­வர்க்கு கர்ப்ப காலத்­தின்­போது மட்டும் நீரி­ழிவு நோய் தோன்றி பிர­ச­வத்தின் பின்னர் அது மறைந்து போதல்.

ஜோதிடம் கூறும் பரிகாரங்கள்

திருமண தோஷம் இருப்பவர்கள் என்ன பரிகாரம் செய்யலாம்?

ஜோதி­டத்தில் திரு­மண தோஷத்தை இரண்டு வகை­யாகப் பார்க்க வேண்டும். அதா­வது ஒரு சில ஜாத­கங்­க­ளுக்கு திரு­ம­ணமே தேவை­யில்லை என்ற அமைப்பு இருக்கும். அதற்கு காரணம் சூரியன், செவ்வாய், புதன், சனி ஆகிய கிர­கங்கள், 10ஆம் வீட்டில் சேர்க்கை பெற்­றி­ருந்தால் அவர் சந்நியாசம் செல்வார் என ஜோதி­டத்தில் கூறப்­பட்­டுள்­ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல