புதன், 14 டிசம்பர், 2016

உலகம் புலிகளை கடுமையாகக் கையாளப்போகிறது என்பதை எல்.ரீ.ரீ.ஈ யின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் அறிந்திருந்தார். -பாகம் - 2

எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருanton சுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் சிலரால் போற்றப்பட்டும் சிலரால் தூற்றப்பட்டும் உள்ளார். இந்த எழுத்தாளருக்கு பாலசிங்கத்துடன் உள்ள உறவு கூட உயர்வுகளும் மற்றும் தாழ்வுகளையும் கொண்டது. நான் அவரை போற்றுதல்; மற்றும் விமர்சித்தல் ஆகிய இரண்டையும் செய்துள்ளேன், உண்மையில் அது அப்போது இருந்த நிலமையில் தங்கியிருந்தது. எனினும் இந்த மனிதர் மற்றும் ஸ்ரீலங்கா தமிழர் விவகாரங்களில் அவரது பங்களிப்பு பற்றி அதிகம் எழுத முடியும்.

உலகம் புலிகளை கடுமையாகக் கையாளப்போகிறது என்பதை எல்.ரீ.ரீ.ஈ யின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் அறிந்திருந்தார் . பாகம் - 1

பத்து வருடங்களுக்கு முன்பு 2006 நவம்பர் மூன்றாம் வாரமளவில் லண்டனில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு எனக்கு கிடைத்தது. அது தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரீ.ரீ.ஈ) அமைப்பின் அரசியbalasingamல் ஆலோசகரும் மற்றும் மூலோபவியலாளருமான அன்ரன் ஸ்ரனிஸ்லாஸ் பாலசிங்கத்திடம் இருந்து வந்திருந்தது. கடுமையான அரசியல் வேறுபாடுகள் காரணமாக கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக எங்களிடையே பேச்சு வார்த்தைகள் இருக்கவில்லை என்பதினால் நான் மிகவும் ஆச்சரியத்துக்கு உள்ளானேன். எனினும் எங்களில் பலரும் அன்புடன் பாலா அண்ணை என்று விளிக்கும் அவருடன் பேசுவது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது, ஏனென்றால் அவர் கடுமையான சுகவீனமுற்றிருக்கின்றார் மற்றும் அவருடைய நாட்கள் எண்ணப்படுகின்றன என்று முன்பே நான் கேள்விப்பட்டிருந்தேன்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல