செவ்வாய், 25 ஜனவரி, 2011
உலகின் முதலாவது பேசும் சலவை இயந்திரம் இலங்கைக்கு வந்துள்ளது
உலகின் முதலாவது பேசும் சலவை இயந்திரம் சமீபத்தில் அபான்ஸ் நிறுவனத்தினால் இலங்கையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்த சலவை இயந்திரம் அதனை பயன்படுத்துபவர்களுக்கு இலகுவில் புரியக் கூடிய விதத்தில் உங்களுக்கு விளக்கம் கொடுக்கும். “சலவை இயந்திரமான என்னை நீங்கள் நான் சொல்வது போன்று இயக்கினால், உங்களுடைய உடைகள் மற்றும் ஏனைய துணிகளை தூய்மையாக சலவை செய்வதற்கு நான் உதவி செய்வேன்” என்று முதலில் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும்.
Labels:
வினோதமான செய்திகள்
குச்சவெளியில் 15 இடங்களில் தரையில் விநோத மாற்றங்கள் திடீர் நீரூற்றுடன் சாம்பல் நிற களி வெளியேற்றம்; கொழும்பிலிருந்து பூகற்பவியலாளர்கள் விரைவு !
திருகோணமலை குச்சவெளிப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் திடீரென நிலத்தைப் பிளந்து கொண்டு சாம்பல் நிற மண்ணுடன் கூடிய நீர்க்கசிவுகள் வெளிப்பட்டதையடுத்து பிரதேசத்தில் அச்சமும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சலப்பை ஆற்றுக்கு அருகிலுள்ள சதுப்பு நிலப்பகுதியிலேயே இந்த நீர்க் கசிவுகள் உருவாகியுள்ளன. சுமார் 15 இடங்களில் நிலத்தைப் பிளந்து கொண்டு சாம்பல் நிற மண்ணுடன் நீர்க்கசிவுகள் ஏற்பட்டிருக்கின்றன.
Labels:
இலங்கை
இந்திய மீனவர் இலங்கையில் தஞ்சம் கோரவுள்ளனர்
இந்திய நாகப்பட்டிண மாவட்ட வேதார்ணயத்திற்கு அருகில் உள்ள புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த 500 மீனவர்கள் இலங்கையிடம் தஞ்சம் கோரவுள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
Labels:
இலங்கை,
உலகப்பார்வை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)










