ஒரு மனிதனின் மரணம் என்ற வகையில் மட்டும் மணிவண்ணனின் மரணம் வருந்தத்தக்கது. அதற்காக அவர், இவரைப் போன்றவர்கள் ஈழத்தமிழ் மக்களின் மீட்போர், மனித குலத்தின் விடிவிற்காக பாடுபட்ட தியாகிகள், 'மாவீரர்கள்' என்று புகழ்பாடும் அளவிற்கு இவர்கள் ஒன்றும் மாமனிதர்கள் அல்ல. ஈழத்தமிழ் மக்களுக்கு அரசியல் பிரச்சனையுண்டு. இதனைத் தீர்த்து வைப்பதில் இலங்கையை மாறிமாறி ஆண்டு வரும் அரசுகள் உள சுத்தியுடன் செயற்படவில்லை, செயற்படுவதும் இல்லை.
செவ்வாய், 18 ஜூன், 2013
மணிவண்ணனுக்கு போர்த்திய புலிக்கொடியிலும் சர்ச்சை?
தமிழின உணர்வாளர், இயக்குனர், நடிகர் எனப் பல பரிமாணங்களை கொண்ட மனிதர்களுள் ஒருவரான மணிவண்ணனின் மறைவு ஒட்டு மொத்த தமிழினத்தையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது என்றால் அது மிகையாகாது. மறைந்த தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான மணிவண்ணனின் உடல் நேற்று மாலை சென்னை போரூரில் தகனம் செய்யப்பட்டது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகளும் , திரையுலகினரும் , தமிழார்வலர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் என பல தரப்பட்டவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
Labels:
தமிழர்கள்,
பித்தலாட்டங்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


