செவ்வாய், 15 ஏப்ரல், 2014

உன் தந்தையைக் கொன்றவன் இன்னும் உன் நண்பனா? பாகம் 3

ராஜிவ் காந்தியைக் கொன்றது எப்படி? ஏன்?

(கடந்த வாரத் தொடர்)

அது மே மாதம் 21ஆம் திகதி 1991ஆம் வருடம், மாலை மங்கிய நேரம். சென்னை பாரிமுனை பஸ் நிலையத்திலிருந்து அந்தக் குழு ஸ்ரீபெரும்புதூர் நோக்கி, பல்லவன் பஸ்ஸில் புறப்பட்டது. ஹரிபாபு ஏற்கனவே கையில் பு+ம்புகாரில் வாங்கப்பட்ட சந்தன மாலையோடு காத்து நின்றார். சுமார் 8 மணியளவில் அங்கு சென்று சேர்ந்தனர் இரு ஆண்களும், மூன்று பெண்களும்.

உன் தந்தையைக் கொன்றவன் இன்னும் உன் நண்பனா? பாகம் 2

1983 இனக்கலவரம் - கொழும்பு எரிந்தது

இக்காலகட்டத்தில், தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் ஆதரவு இருந்ததால், ஈழப் போராளிகள் தமிழகத்தில் சாதாரணமாக உலாவினர். அனைத்து இயக்கங்களும் படிப்படியாக சென்னையில் அலுவலகங்களைத் திறந்தனர். இதில் விடுதலைப்புலிகள், இலக்கம் 27, கற்பகம் அவனியு, மந்தவெளி, ராஜh அண்ணாமலைபுரம், சென்னை என்ற இடத்தில் இருந்தனர். அவர்களின் தொலைபேசி இலக்கம் 847687 என்பதாகும்.

உன் தந்தையைக் கொன்றவன் இன்னும் உன் நண்பனா? பாகம் 1

பத்மநாபா கொலை

அது செவ்வாய்க்கிழமை ஜுன் மாதம் 19ஆம் திகதி 1990ஆம் வருடம், நேரம் மாலை 06.15 மணி. வெள்ளை அம்பாசடர் கார் TNA3157, 3ஆம் தெரு, A5 பவர் அபார்ட்மெண்ட், ஜக்கரியா காலனி, கோடம்பாக்கம், சென்னை என்ற முகவரியின் வாசலில் நுழைந்து, உள்ளே வந்து நின்றது. ஒருவர் மட்டும் ஒட்டுனர் ஆசனத்தில் அமர்ந்தி ருக்க, நால்வர் இறங்கினர். அவர்கள் கைகளில் ஏ.கே.47 துப்பாக்கியும், வெடிகுண்டுகளும் இருந் தன. இருவர் காருக்கு வெளியே காவலுக்கு நிற்பது போல் நின்றனர். மற்ற இருவர் A5 அபார்ட் மெண்டை நோக்கி மாடியேறினர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல