வியாழன், 10 ஜனவரி, 2013

காகிதப் புலிகள் சொல்வது போல அயன் பய்ஸ்லி அரிச்சந்திரனா? அல்லது சிறீலங்கா அரசின் முகவரா?

வெறும் வாயைச் சப்பிக் கொண்டிருக்கும் சில வேலைவெட்டி இல்லாதவர்களுக்கு ஒரு பிடி அவல் கிடைத்திருக்கிறது. விடுவார்களா?

சாம்பிராணி இல்லாமலேயே சன்னதம் ஆடுகிறவர்கள் அயன் பெய்ஸ்லி, நாடாளுமன்ற உறுப்பினர் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சை வைத்து வானுக்கும் பூமிக்கும் எம்பி எம்பிக் குதிக்கிறார்கள். சம்பந்தரை சிலுவையில் அறைய ஆணி, சுத்தியலோடு வெளிக்கிட்டுள்ளார்கள்.

ஈழத் தமிழர்களின் அவலத்தைப் பணமாக்கும் கமலஹாசன்

ஈழப் போராட்டம் என்பது தமிழ் நாட்டின் சினிமா வியாபாரிகளின் மற்றொரு உணர்ச்சி மையமாகக் கருதப்படுகிறது. தமிழ் நாட்டின் ஆதிக்க சாதியினரின் ஒடுக்கு முறைக்கு ஜனநாயக முகத்தை வழங்குவதற்காக ஈழ மக்களின் அவலம் பயன்படுத்தப்படும் அதே வேளை தமிழக சினிமாவில் மக்களை உணர்ச்சியூட்டிக் கொள்ளையடிப்பதற்காகவும் பாசிச அரசினால் கொல்லப்படும் மக்களின் அவலம் பயன்படுத்தப்படுகின்றது.

றிசானா நபீக் மரணத்தை வெல்லுமா….? மனித நேயம்

(றிசானாவிற்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இக் கொடூரச் செயலை உலகமே வன்மையாக கண்டிக்கும் இவ்வேளையில் றிசானாவின் விடுதலையை வேண்டி நம்பிக்கையுடன் கார்திகை 2010இல் எழுதிய கட்டுரையை இன்று தேவை கருதி மீண்டும் பிரசுரிக்கப்படுகின்றது)

மனித நேயமும், மிருக குணமும் கலந்து படைக்கப்பட்டதுதான் மனிதன். இதில் மிருக குணத்தை அடக்கி மனித நேயத்தை மேலோங்கச் செய்வதே மனிதன் ‘மனிதன்’ ஆக வாழ்வதற்கான வழி முறையாகும். ஆனாலும் மிருக குணம் சில வேளைகளில் மேலோங்கி இருப்பதுவும் அதன் தொடர்ச்சியான செயற்பாடுகளுமே மனிதன் குற்றங்கள் புரிவதற்கும், கொலைகள் செய்வதற்கும் காரணமாக அமைகின்றது. இதே போல் மிருக குணம் அடக்கப்பட்டு மனித நேயம் மேலோங்கி நிற்கும் போது குற்றங்கள், கொலைகளை தவிர்த்து அவற்றை தடுத்து நிறுத்தும் மகாத்மாவாக மாறுகின்றான். மனித குல மீட்சிக்காக தன்னை அற்பணிக்கும் மக்கள் தொண்டனாக மாறுகின்றான் மனிதன். இதன் தொடர்சியாக அவன் மக்கள் தலைவனாக மாறுகின்றான்.

றிஸானா நபீக் என்ற ஏழைப் பெண்ணின் பரிதாப முடிவு, நாகரீக உலகம் வெட்கப் பட வேண்டிய விடயம்

2005ம் ஆண்டு வைகாசி மாதம், மூதுரைச் சொந்தவிடமாகக் கொண்ட பதினேழு வயதான றிஸானா நவிக் என்ற ஏழைப் பெண் சவுதி அரேபியாவிலுள்ள ஒரு குடும்பத்துக்குப் பணிப் பெண்ணாகச் சென்றார். வேலைக்குச் சென்ற ஒரு மாதத்திலிலேயே, அவரின் பராமரிப்பிலிருந்த நான்கு மாதக்குழந்தையைக் கொலை செய்ததாக்குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப் பட்டார். குழந்தைக்குப்பால் கொடுக்கும்போது குழந்தையின் தொண்டையில் பால் அடைத்துக்கொண்டதால் மூச்சுத்திணறி குழந்தை இறந்ததாகவும் அதற்குக்காரணம் றிஸானா என்றும் குற்றம் சாட்டப்பட்டார்.

எல்லோர் முகத்திலும் கரி...

ஓரே ஒரு ஆள், எல்லோர் முகத்திலும் கரியைப் பூசிவிட்டார். ஆம், தில்லியில் ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவியின் சகோதரர் சில உண்மைகளை அம்பலப்படுத்தி விட்டார். அவர் கூறியது, அவரது சொந்தக் கற்பனையோ, சுயநலக் கருத்தோ அல்ல.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல