புதன், 26 ஜனவரி, 2011
லெனின் உடலை அடக்கம் செய்ய ஆதரவு
ரஷியாவின் மாபெரும் புரட்சி தலைவரான லெனின், கடந்த 1924-ம் ஆண்டு மரணம் அடைந்தார். அவருடைய விருப்பத்துக்கு ஏற்ப மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் அவருடைய உடல் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. தற்போது, சோவியத் யூனியன் உடைந்து ரஷிய நாடாக மாறி விட்டதால் லெனின் உடலை அடக்கம் செய்ய கோரிக்கை வலுவடைந்துள்ளது.
Labels:
உலகப்பார்வை
இந்திய மாடல் அழகியை காதலிக்கும் ஆலிவுட் நடிகர்
பிரபல ஆலிவுட் நகைச்சுவை திரைப்படமான `தி மாஸ்க்' படத்தில் நடித்தவர், ஜிம் கேரி. புகழ் பெற்ற காமெடி ஹீரோவான இவர், ஜெனி மெக்கர்தி என்ற அழகியுடன் 5 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்தார். கடந்த ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில், ஆஞ்சல் ஜோசப் என்ற இளம் மாடல் அழகியை காதலிக்க தொடங்கியுள்ளார். விழா, விருந்து உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் இருவரும் ஒன்றாகவே சுற்றி வருகின்றனர்.
Labels:
சினிமா
தலைமுடியை விற்க மலேசியாவில் திட்டம்
இந்தியாவில் கோவில்களில் காணிக்கையாக செலுத்தப்படும் தலைமுடிகளை, `விக்' தயாரிப்பு மற்றும் மருந்து பொருட்களுக்காக விற்பனை செய்வது வழக்கம். இந்தியாவில் போலவே, மலேசியாவில் உள்ள பத்து மலை முருகன் கோவிலிலும் இந்திய பக்தர்கள் முடி காணிக்கை செய்கின்றனர். ஆண்டு தோறும் தைப்பூச திருநாளில் கிலோ கணக்கில் முடி குவிகிறது. இது வரை, இந்த முடியை கழிவு பொருளாக ஆறுகளில் கொட்டி வந்தனர்.
Labels:
உலகப்பார்வை
முன்னாள் மந்திரி மனைவியுடன் உறவு வைத்த பாதுகாவலர்
ஆலன் ஜான்சனும் அவருடைய மனைவி லாரா ஜான்சனும்
இங்கிலாந்தில் கடந்த ஆண்டு வரை உள்துறை மந்திரியாக இருந்தவர் ஆலன் ஜான்சன். இங்கிலாந்து தொழிலாளர் கட்சியின் முக்கிய தலைவரான அவருக்கு பாதுகாவலராக பால் ரைஸ் (வயது 45) என்ற சிறப்பு அதிரடிப்படை போலீஸ்காரர் இருந்தார். ஆலன் ஜான்சனிடம் பணியாற்றியபோது, அவருடைய மனைவி லாரா ஜான்சன் (வயது 46) மற்றும் பெண் உதவியாளர் ஆகியோருடன் பால் ரைஸ் உறவு வைத்துள்ளார். இந்த தகவல், தற்போது வெளியாகி உள்ளது.
Labels:
உலகப்பார்வை,
வினோதமான செய்திகள்
புற்றுநோயை குணமாக்கும் ஒட்டகத்தின் சிறுநீர்
ஒட்டகத்தின் பால் மற்றும் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகையான மருந்து புற்றுநோயைக் குணப்படுத்தும் என்று அரபு நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உலகில் ஒவ்வோர் ஆண்டும் 60 இலட்சம் பேர் புற்றுநோயின் காரணமாக இறந்து வருகின்றனர். அரபு நாடுகளில் இதய நோய் மற்றும் தொற்று நோய்களுக்கு அடுத்தபடியாக புற்றுநோயால் பாதிகப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதி கரித்து வருகிறது என கணிப்பிடப்பட்டுள்ளது.
Labels:
மருத்துவம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)











