சனி, 3 ஏப்ரல், 2010

நடிகை பூஜாவுக்கு கல்யாணமா?

நான் கடவுள் படத்தில் நடித்ததற்கான சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெறப் போகும் கனவில் இருக்கும் பூஜாவுக்கு தற்போது கல்யாணக் கனவும் வந்திருக்கிறதாம்.

கார்த்தி தமன்னா காதல்

எண்பதுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் பேசப்பட்ட நட்சத்திரக் காதலர்கள் வெகுசிலர் பிரபு- குஷ்பு ராம்கி- நிரோஷா, பார்த்திபன்- சீதா, சூர்யா- ஜோதிகா என்று போடப்படும் தீர்க்கமான பட்டியலில் இப்போது கார்த்தி- தமன்னா.

CRT - LCD என்ன வேறுபாடு?

ஒரு டெஸ்க் டொப் கணினியை வாங்கும் போது நாம் அதிகமாக சிபியூவின் வேகம் ஹாட் டிஸ்க் மற்றும் நினைவகத்தின் கொள்ளளவு பற்றியே அதிகம் கருத்திற் கொள்கிறோம். அவற்றைப் போன்று அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டிய மற்றுமொரு வன்பொருள் சாதனமே Monitor மொனிட்டர். மொனிட்டர்கள் கணினியில் நமது செயற்பாடுகளை உடனுக்குடன் வெளிப்படுத்திய வண்ணம் உள்ளன. மொனிட்டர்களை Visual Display Unit (VDU) எனவும் அழைக்கப்படும்.

காசநோய் குறித்து அச்சப்படத் தேவையில்லை

உலகில் உள்ள காச நோயாளர்களில் அரைப் பகுதியினர் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், தாய்லாந்து, சீனா நாடுகளில் காணப்படுகின்றனர். சன நெரிசல் கூடிய குடியிருப்புகளையும் அவற்றில் போதிய காற்றோட்டம், சூய ஒளி குறைவான அறைகளில் வாழ்பவர்களையும், போசணை நிலை, நோயெதிர்ப்புத் தன்மை குறைவானவர்களையும் காச நோய் விரைவாக தொற்றிக் கொள்கிறது.

திரையுலகில் பிரமாதமாக பிரகாசிக்க முடியாமல் போன நடிகை ஷோபனா

தென்னகத் தமிழத் திரையுலகம் வந்தாரை வாழவைக்கும் ஒரு இடமாக இனமத பேதமின்றி திறமையுள்ளவர்களுக்கு நிச்சயமாக கைகொடுக்கும் ஒரு ஆல விருட்சமாக இருக்கின்றது. இங்கே தமிழ் தெரிந்த நடிகர், நடிகைகளை விட வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் புகழடைந் ததாக பரவலாக பேசப்படுகின்றது.

திருமதி மீனா மீண்டும் நாயகி ஆகிவிட்டாரம்

தமிழ் கதாநாயகன்கள் பிற மொழிகளில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கும் போதே திருமதியாகி விட்ட மீனா மீண்டும் நாயகியாகியிருக்கிறார். திருமணமான நடிகை கதாநாயகியாக நடிப்பது தமிழ்த் திரையுலகில் அரிது.

திருமணத்தின் போது...

தற்போது இல்லற வாழ்க்கையில் மனமுறிவும், மணமுறிவும் அதிகமாக நடைபெறுகின்றன. எனவே திருமணத்துக்கு முன்பாக முறையான ஆலோசனை பெறுவது அவசியம்.

பெண் மொழிகள்

1. மனைவிக்காக செலவழிக்காத கணவன் சம்பாதித்தென்ன?
சேர்த்தென்ன?

2. கணவன் வீட்டில் ராமன் வெளியில் கிருஷ்ணன் எனறால்
மனைவி வீட்டில் கண்ணகி வெளியில் மாதவி சரியா?

சூரியனைப்பற்றிய தகவல்

சூரிய நமஸ்காரம்: தினமும் காலையில் நீராடிய பின் கிழக்கு திசைநோக்கி சூரியநமஸ்காரம் செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பிராணாயாமம் என்னும் மூச்சுப்பயிற்சி, அதனைத் தொடர்ந்து காயத்ரீ மந்திரம் ஜபித்தல் ஆகியவை, சூரியனின் ஆற்றலை அதன் கிரணங்களின் மூலம் பெறும் முறைகளாகும். காலை, மாலை வேளைகளில் சூரியனை நோக்கி இருகைகளாலும் நீரை எடுத்து அர்க்யம் விடுவதும் சூரிய தோஷத்திற்கு தகுந்த பரிகாரமாகும். ஆதித்ய ஹ்ருதயம் போன்ற சூரிய துதிகளைச் சொல்வதால் நம் உடலும், மனமும் சூரிய சக்தியைக் கிரகித்துக் கொள்கின்றன. கிரகணம் பற்றிசுவாமி சிவானந்தர்பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்த போது அதிலிருந்து அமிர்தம் வெளிப் பட்டது.

நவக்கிரகங்களும், வழிபாட்டுத் தலங்களும்

கிரகம்: சூரியன்
ஸ்தலம்: சூரியனார் கோவில்
நிறம்: சிவப்பு
தானியம்: கோதுமை
வாகனம்: ஏழு குதிரை பூட்டிய தேர்
மலர்: செந்தாமரை
உலோகம்: தாமிரம்
நாள்: ஞாயிறு
ராசிகற்கள்: மாணிக்கம்
பலன்கள்: காரிய சித்தி.

வைகுண்ட ஏகாதசி

ஒரு காலத்தில் அம்பரீஷன் என்பவன், இப்பூமண்டலத்தின் சக்கரவர்த்தியாக ஆட்சி செய்து வந்தான். அவன் ஏகாதசி விரதத்தை தவறாது கடைபிடித்து வந்தான். ஒருமுறை, ஏகாதசி முடிந்த மறுநாள் துவாதசி சமயத்தில், யமுனைக்கரையில் கோபக்கார துர்வாச முனிவரை அவன் சந்தித் தான். அவருக்கு பாதபூஜை செய்து, அவரையும் தன்னோடு உணவு உண்ண வரும்படி அழைத்தான். யமுனையில் நீராடிவிட்டு வருவதாகச் சொல்லிச் சென்ற முனிவர், நீண்டநேரமாகியும் வரவில்லை. அம்பரீஷனின் ஏகாதசி விரத பலனை பங்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், இவ்வாறு அவர் செய்தார்.

எத்தனை விதமான பொய்கள் என்று பார்ப்போமா?

1. சாதுவான பொய்:

“என்னுடைய வலைப்பதிவை (Blog) படித்தீர்களா?” என்று யாரேனும் ஆவலோடு கேட்டால், “மன்னிக்கணும் சார்! படிக்கணும்னுதான் நினைச்சிருந்தேன். அடுத்தடுத்து வேலை வந்ததுல ஆபீஸ்ல முடியலை. சரி, வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையா படிச்சுடுவோம்னுதான் தீர்மானிச்சேன். ஆனா பாருங்க, என்னவோ பிராப்ளம்... நெட் கனெக்ட் ஆகவே இல்லே! போன் பண்ணிச் சொல்லியிருக்கேன். அநேகமா இன்னிக்கு நாளைக்குச் சரியாயிடும். முதல் வேலை உங்க பதிவைப் படிக்கிறதுதான். ஆமா, என்ன எழுதியிருக்கீங்க?” என்று சீரியஸாகக் கேட்பது சாதுவான பொய்க்கு உதாரணம். அவர் சொன்னாலும், அதை நாம் படிக்கப்போவது இல்லை என்பது வேறு விஷயம். இருந்தாலும், அவர் மனசு நோகக்கூடாது என்பதற்காகச் சொல்கிற பொய்யானதால், இது சாத்விகமான பொய்யில் சேர்த்திடலாம்.

இதே மாதிரிதான், சிலரின் பதிவுகளை முழுதாகப் படிக்காமலே அதிலிருந்து சில வரிகளை கட் அண்ட் பேஸ்ட் போட்டுவிட்டு, வெரி நைஸ் என்றோ, அல்லது ஸ்மைலி சிம்பலோ போட்டுப் பின்னூட்டம் இடுவதும் சாதுவான பொய்யில் அடங்கும்.

என் தோழி என்ன தவறு செய்தாள்?

சந்திராவை தெரியுமா உங்களுக்கு…சத்தமாக்கூட பேசமாட்டா. பேசறதே அவ்வளவு மெலிதான குரலா இருக்கும். ‘கோவம் வந்தா கூட உன் குரல் இப்படித்தான் இருக்குமா சந்திரா’- ன்னுக்கூட கேட்டிருக்கேன்…அதுக்கும் ஒரு சின்ன புன்னகைதான். எங்க பேட்ச்லே எல்லோரும் வேலைக்குப் போகணும்ன்ற லட்சியத்தோடவெல்லாம் படிக்கலை. படிச்சுட்டு முதல்லே கல்யாணம், அப்புறம் சூழ்நிலை அனுமதிச்சா வேலைன்ற மாதிரி சில பேரு இருந்தாங்க. அந்த சில பேருலே சந்திராவும் ஒருத்தி. அவங்களோட அந்த மாதிரி மனநிலைக்கு நிறைய காரணங்கள் இருந்தது. சந்திராவுக்கு அப்பாவோட ரிடையர்மெண்ட் காரணமா இருந்துச்சு. ரிடயர்டு ஆகிறதுக்குள்ளே பொண்ணோட கல்யாணத்தை முடிச்சுடணும்னு எல்லா மத்திய தர பெற்றோருக்கும் இருக்கும் நெருக்குதல்தான்.

வருங்காலக் கணவருடன் காஞ்சி கோயிலில் நடிகை ரம்பா!

தனது வருங்காலக் கணவர் இந்திரனுடன் நடிகை ரம்பா காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றார். தனது கல்யாணப் பத்திரிகையை சாமியின் காலடியில் வைத்து பூஜை செய்தார்.

கரு‌த்த‌ரி‌க்கு‌ம் மு‌ன் அ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டியவை எவை?

புதுமண‌த் த‌ம்ப‌திகளு‌ம் ச‌ரி, குழ‌ந்தை பெ‌ற்று‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று முடிவெடு‌த்து‌ள்ளவ‌ர்களு‌ம் ச‌‌ரி ‌சில மு‌க்‌கியமான ‌விஷய‌ங்களை‌த் தெ‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

தாயாகு‌ம் மு‌ன்பு உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரி‌ந்‌திரு‌க்க வே‌ண்டிய ‌விஷய‌ங்களாவன :

ராதா மகளைப் போல் ஸ்ரீதேவியின் மகளும் திரைக்கு வருகிறார்.

இந்திய சினிமாவில் முன்னணி நாயகியாகக் கொடி கட்டிப் பறந்த அந்த கால கனவுக்கன்னி நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜானவி விரைவில் கதாநாயகியாக தனது திரையுலகப் பயணத்தைத் துவங்குகிறார். எம்ஜிஆருடன் “நம்நாடு” படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடிப்பில் கலக்கியவர் ஸ்ரீதேவி.

இலங்கைத் தமிழர் பிரச்னை தமிழகக் கட்சி அரசியலா?

இலங்கையில் நடந்து முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறப்படும் போர், இரண்டு நாடுகளுக்கிடையில் நடந்த போர் அல்ல. முழுக்குடியுரிமை பெற்ற தமிழ்மொழி பேசும் மக்களுக்கு எதிராக, பல நாட்டுப் படை, போர்க்கருவிகள், அரசியல், நிதியுதவியுடன், அரசு அதிகாரத்தை கையில் வைத்துள்ள இலங்கை அரசு நடத்திய கொடூரமான போர் என்பதை - மீண்டும் நினைவுறுத்தும் அவசியம் எழுந்துள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல