சனி, 11 டிசம்பர், 2010

சங்கானையில் நேற்றிரவு பயங்கரம் பூசகர்கள் மூவர் படுகாயம் ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு

சங்கானை முருகமூர்த்தி ஆலயத்திற்கு முன்பாக வைத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பூசகர்கள் மீது நேற்றிரவு 8.30 மணி யளவில் ஆயுததாரிகள் துப்பாக்கிப் பிரயோ கம் செய்துள்ளனர். இதில் படுகாயமடைந்த மூவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்கட்சிகளின் சந்திப்பு

தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன இன்றையதினம் சந்திப்பினை மேற்கொண்டன--அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு தமிழ் கட்சிகளுடன் இணையத் தயார் –TNA.!


தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கம் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேசியுள்ளனர். இச்சந்திப்பு இன்று கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

கமல், த்ரிஷாவை கைது செய்யக் கோரி கமிஷனரிடம் புகார்!

பாலுணர்வைத் தூண்டும் வகையிலும், பண்பாட்டைச் சீர்குலைக்கும் விதத்திலும் பாடல் எழுதி பாடிய நடிகர் கமல், த்ரிஷா ஆகியோர் மீது கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனரிடம் இந்து மக்கள் கட்சி புகார் கொடுத்துள்ளது.

அரவிந்த் சாமி - காயத்ரிக்கு விவாகரத்து வழங்கப்பட்டது!

பிரபல நடிகர் அரவிந்த் சாமிக்கும் அவர் மனைவி காயத்ரி என்ற கவிதாவுக்கும் நேற்று விவாகரத்து வழங்கப்பட்டது.

மகாராணியின் உள்ளாடை ஏலத்தில் விற்பனை

பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிஸபெத்துக்கு 40 வருடங்களுக்குமுன் சொந்தமானதாக இருந்த உள்ளாடையொன்று ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது.

எங்கள் பிள்ளைகளை தந்துவிடு' இருக்கும் இடத்தைச் சொல்லிவிடு மனித உரிமைகள் தின ஆர்ப்பாட்டத்தில்!

சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை இரு வேறு ஆர்ப்பாட்டங்கள் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இடம்பெற்றன.காணாமல் போனோரை கண்டுபிடித்து தருமாறு,காணாமல் போனோரை கண்டறியும் குழு நேற்று பிற்பகல் 12.30 மணிக்கு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்குபற்றினர்.சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம்,சோசலிஷ கட்சி,பெண்கள் கண்காணிப்பகம்,சுதந்திரத்துக்கான அரங்கம்,இடதுசாரி விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளும் பங்குபற்றின.

ஆபாச சிடியை வெளியிடாமல் இருக்க ரூ. 20 கோடி தருவதாக கூறினார் நித்தியானந்தா

தானும், ரஞ்சிதாவும் அந்தரங்கமாக, படுக்கை அறையில் இருக்கும் காட்சி அடங்கிய வீடியோவை வெளியிடாமல் இருக்க ரூ. 20 கோடி பணம் தருவதாக பேரம்பேசினார் சாமியார் நித்தியானந்தா என்று கூறியுள்ளார் அந்த சிடியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய லெனின் கருப்பன்.

சவுதி அரச குடும்பத்தினரின் அந்தரங்க களியாட்டம் : விக்கிலீக்ஸ்

சவுதியின் மன்னர் குடும்ப இளம் வாரிசுகள் சவூதி நாட்டின் கடுமையான இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு முரணாக அந்தரங்க களியாட்டங்களில் ஈடுபடுவதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள இரகசிய ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிண்ணங்கள் திருடப்பட்டன

டென்னிஸ் உலகின் ஜம்பவானாகத் திகழ்ந்த சாம்ப்ராஸின் வெற்றிக் கிண்ணங்களும் பரிசில்களும் திருட்டுப்போயுள்ளன. டென்னிஸ் வீரரான அமெரிக்காவின் பீட்சாம்ப்ராஸ் டென்னிஸ் அரங்கில் தான் வென்றெடுத்த கிண்ணங்களையும் பரிசில்களையும் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலசிலுள்ள அவரது இல்லத்தில் பாதுகாத்து வந்தார்.

இளவரசர் சாள்ஸ் கமீலா பயணித்த கார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல்

பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவி கமீலா ஆகியோர் பயணித்த கார் மீது ஆர்ப்பாட்டக்காரர்களால் வியாழக்கிழமை இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மெஹிந்தி மூலம் உங்கள் பாதங்களை இப்படி அழகு படுத்திக்கொள்ளலாம்

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல