திங்கள், 22 பிப்ரவரி, 2010

மயானத்தில் புதைப்பதற்கு தயாரான வேளையில் விழித்தெழுந்த பெண்மணி

மரணமானதை மருத்துவ ரீதியில் உறுதிப்படுத்தப்பட்டு புதைப்பதற்கு தயாரான வேளையில் பெண்ணொருவர் திடீரென உயிர் பெற்று எழுந்த அதிசயம் கொலம்பியாவில் இடம்பெற்றுள்ளது.
நரம்பியல் ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த மேற்படி 45 வயதான பெண் உடல் நலம் மோசமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவ சிகிச்சை பயனளிக்காத நிலையில் அப்பெண்ணின் இருதய இயக்கம் மற்றும் சுவாசம் என்பன ஸ்தம்பிதமடைய அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இது தொடர்பில் அப்பெண்ணுக்கு சிகிச்சையளித்த மருத்துவரான மிகுயல் அஞ்ஜெல் சாவெட்ரா விபரிக்கையில், ""மேற்படி பெண்ணின் குருதி அமுக்கம் மற்றும் இருதய துடிப்பு என்பவற்றை மருத்துவ உபகரணங்களை பயன்படுத்தி பரிசோதித்த போது அவை எந்தவித வாசிப்பையும் காட்டவில்லை'' என்று கூறினார்.

இந் நிலையில் மேற்படி மருத்துவமனை உத்தியோகத்தர்கள் அப்பெண் மரணமானதை உறுதிப்படுத்தும் சான்றிதழில் கையெழுத்திட்டனர்.
தொடர்ந்து பெண்ணின் உடல் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மரணச் சடங்கு நிறைவேற்றப்பட்டு புதைப்பதற்காக மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல