சனி, 27 பிப்ரவரி, 2010

உரு​ளைக் கிழங்கு போளி

மைதா மாவு -​ ​  250 கிராம்
உரு​ளைக் கிழங்கு ​ -​ ​ 500 கிராம்வெல்​லம் ​ ​ ​ ​ ​ ​ ​-
தேங்​காய் ​ ​ ​ ​ ​ ​ ​ ​ -​ ​ 1 மூடி
கட​லைப் பருப்பு ​ ​ -​ ​50 கிராம்
ஏலக்​காய் ​ ​ ​ ​ ​ ​ ​ ​ -​ ​6
நெய் ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ -​ ​50 கிராம்
மஞ்​சள் பொடி ​ ​ ​ -​ ​1 சிட்​டிகை
நல்​லெண்​ணெய் ​ ​ ​ -​ ​300 கிராம்
உப்பு ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ -​ ​1 டீ ஸ்பூன்​

செய்​முறை :

உரு ​ளைக் கிழங்கை தோல் நீக்கி வேக வைக்க வேண்​டும்.​ தேங்​கா​யைத் துரு​விக் கொள்ள வேண்​டும்.​ அதன் பிறகு உரு​ளைக் கிழங்கை கட​லைப் பருப்பு,​​ தேங்​காய் துரு​வல் இவற்​று​டன் வெல்​லத்​தை​யும் சேர்த்து நன்​றாக மசிய அரைக்க வேண்​டும்.​ அரைத்த விழுதை அடுப்​பில் ​ வாண​லி​யில் கொஞ்​சம் நெய் விட்டு காய்ந்​த​தும் போட்​டுக் கிளற வேண்​டும்.​ ஏலக்​கா​யைப் பொடி செய்து வதக்​கிய கல​வை​யில் தூவி இறக்​கி​விட வேண்​டும்.​ மைதா மாவில் மஞ்​சள் பொடி,​​ எண்​ணெய்,​​ உப்பு சேர்த்து தண்​ணீர் விட்டு கெட்​டி​யா​கப் பிசைந்து வைக்க வேண்​டும்.​

பிசைந்த மாவை சிறு சிறு உருண்​டை​க​ளாக உருட்டி அதை அப்​ப​ளம் போல் தட்டி அதன் நடு​வில் உரு​ளைக் கிழங்கு பூர​ணத்தை வைத்து அப்​ப​ளத்தை நான்கு ஓரங்​க​ளி​லும் மூடி மீண்​டும் அதை வட்ட வடி​வ​மா​கத் தட்ட வேண்​டும்.​ தோசைக் கல்லை அடுப்​பில் வைத்​துக் காய்ந்​த​தும் சிறிது நல்​லெண்​ணெய்​விட்டு போளி​யைப் போட்டு இரு​பு​ற​மும் பொன்​னி​ற​மாக வெந்​த​வு​டன் எடுத்து விட வேண்​டும்.​

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல