ஞாயிறு, 2 ஜனவரி, 2011

யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஆரம்பமானது

நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1974 ஆம் ஆண்டு ஜனவரியில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு வரிசையை ஆரம்பித்து வைத்திருந்தவரான உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தோற்றுனர் வண. சேவியர் தனிநாயகம் அடிகளாரால் நான்காம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து வைபவ முறைப்படி திறந்து வைக்கப்பட்டது.

யாழ் நகரம் சோடனைகளாலும், மின் அலங்காரங்களாலும், சப்புறங்களாலும் விழாக் கோலம் பூண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மாநாட்டின் ஆய்வு அமர்வுகள் வீரசிங்கம் மண்டபத்திலும் யாழ். றிமர் மண்டபத்திலும் சிறப்பாக நடைபெற, அதன் கலை நிகழ்ச்சிகள் யாழ். திறந்த வெளியரங்கிலும் தமிழர் பண்பாட்டுப் பொருட்காட்சி சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மண்டபத்திலும் மாலையில் நடைபெற்றன.

வரலாறு

1964 ஜனவரியின் ஆரம்பத்தில் புதுடெல்லியில் நடந்த 26வது அகில உலகக் கீழைத்தேயக் கல்வி ஆய்வாளர் மாநாட்டின் போது தான் உலகத் தமிழாராய்ச்சி மன்றம் உருவாகியது. தமிழ், திராவிட ஆய்வுகளில் ஈடுபாடுள்ளவரும் மாநாட்டிற் கலந்து கொண்டவர்களுமான இருபத்தாறு பேர், பேராசிரியர் தனிநாயக அடிகளாரும் பேராசிரியர் வ. ஐ. சுப்பிரமணியமும் விடுத்த அழைப்பினை ஏற்றுச் ஜனவரி 7 ஆம் நாள் உத்தியோகப் பற்றற்ற முறையிலே புதுடெல்லியிற் கூடி உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தினை தோற்றுவித்தனர்.




1431: பிரான்ஸில் ஆங்கிலப் படைகளை எதிர்த்து போராடிய ஜோன் ஒவ்  ஆர்க் எனும் சிறுமி ஆயர் பியர்  கௌசோனிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டாள்.

1496: லியார்னோடா டாவின்சி மேற்கொண்ட பறக்கும் இயந்திர சோதனை தோல்வியுற்றது.

1521: பாப்பரசர் 10 ஆம் லியோ, மார்டின் லூதரை சமூகப் பிரஷ்ட் செய்தார்.

1815: பிரஷ்யா மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக ஆஸ்திரியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியன ரகசிய பாதுகாப்புக் கூட்டணி அமைத்தன.

1925: இத்தாலியில் பெனிட்டோ முசோலினி அதிகாரத்திற்கு வந்தார்.

1947: அமெரிக்க நாடாளுமன்ற விவாதங்கள் முதல் தடவையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன.

1956: ஈபில் கோபுரத்தின் மேற்பகுதி தீயினால் சேதமடைந்தது.

1957: ஹமில்டன் கைக்கடிகார நிறுவனம் முதலாவது இலத்திரனியல் கைக்கடிகாரத்தை அறிமுகப்படுத்தியது.

1958: மேற்கிந்திய கூட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.

1959: அலாஸ்கா, அமெரிக்காவின் 49 ஆவது மாநிலமாக்கப்பட்டது.

1961: கியூபாவுடனான உறவை அமெரிக்கா துண்டித்தது.

1962: பாப்பரசர் 23 ஆம் அருளப்பர் பிடெல் காஸ்ட்ரோவை சமூகப் பிரஷ்டம் செய்தார்.

1990: பனாமா முன்னாள் ஜனாதிபதி மனுவல் நொரீகா அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்தார்.

1993: மொஸ்கோவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ், ரஷ்ய ஜனாதிபதி பொரிஸ் யெல்ட்ஸின் ஆகியோர் அணுவாயுத குறைப்பு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டனர்.

1994: ரஷ்யாவில் விமான விபத்தொன்றில் 125 பேர் பலி.

1999: செவ்வாய் கிரகத்தை நோக்கி மார்ஸ் போலார் லாண்டர் விண்கலம் ஏவப்பட்டது.

2004: எகிப்திய விமானமொன்று செங்கடலில் வீழ்ந்ததால் 148 பேர் பலி.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல