ஒன்பது ஜோடி காதலர்கள் நிர்வாணக்கோலத்துடன் ஒரே வைபவத்தில் திருமணம் செய்துகொண்ட சம்பவம் ஜமைக்காவில் இடம்பெற்றுள்ளது.
ஜமைக்காவின் நீக்ரில் கடற்கரையில் இந்த திருமண நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதில் கலந்துகொண்ட மணமகள்கள் முகத்திரைகளை மாத்திரம் அணிந்திருந்தனர். ஆனால் இவர்களின் உடலில் பெயின்றுகள் பூசப்பட்டிருந்தன.
உல்லாச ஹோட்டலொன்று அனைத்து திருமணம செலவுகளையும் தானே ஏற்றுக்கொண்டு குழுவாக நிர்வாண திருமணம் செய்துகொள்ள 10 காதல் ஜோடிகளை அழைத்திருந்தது.
ஆனால் ஒரு காதல் ஜோடியானது இந்நிகழ்வு இடம்பெறுவதற்கு முதல் நாள் இத்திட்டத்திலிருந்து வாபஸ் பெற்றது.
இந்த திருமண ஜோடிகள் கேள்விக்கொத்தொன்றின் மூலம் இத்திருமணம் வைபவத்திற்கு தெரிவுசெய்யப்பட்டனர்.
'ஏன் இவர்கள் நிர்வாணக்கோலத்துடன் திருமண வாழ்க்கையை ஆரம்பிக்க விரும்புகிறீர்கள்?' என்பதும் ஒரு கேள்வியாகும். சுமார் 100 ஜோடிகள் இதற்கு விண்ணப்பித்திருந்தன. அவற்றிலிருந்து 10 ஜோடிகள் தெரிவுசெய்யப்பட்டன.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக