கடந்தமாதம் மன்னாரில் நடைபெற்ற சம்பவத்தில் நம் எல்லோரினருடைய பார்வையிலும் தெரிவது, அமைச்சர் ரிச்சாட் பதியுதீன், தனது முஸ்லிம் மக்களின் சார்பாக நீதிபதி தனது தீர்ப்பினை வழங்க வேண்டும் என நீதிபதியை மிரட்டியதாகவே இருந்தது. இதன் காரணமாக நீதிமன்றங்களும், நீதித்துறை சார்ந்தவர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் உட்பக்கத்தை சற்று விரிவாக பார்ப்பது நலம் என்று நினைக்கத் தோன்றுகின்றது. இது ஒரு அரசியல்வாதியின் பேயாட்டமாக தெரிவதைவிட இது வடக்கின், தமிழ் – முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்ட பிரிவினையாகவே தெரிகின்றது.
இங்கே ஒருவர், மன்னார் நீதிபதிக்கு தொலைபேசி வழி மிரட்டியதாக சொல்லப்படுவது நீதிமன்னறத்தில் ஒப்புவிக்கப்படுமானால், அது பெரும்பாலும் நோயின் அறிகுறி அன்றி நோயின் தன்மையல்ல.
மன்னாரில் ஏற்பட்டுள்ள நிகழ்வின் செயற்பாடுகளை நாம் பார்க்கும்போது அதன் கடந்த காலத்தை நோக்கிச் செல்ல வேண்டியுள்ளது. அதாவது 1990களுக்கு நாம் செல்ல வேண்டும். 1990 களில் புலிகள் இயக்கம் வடக்கு பிரதேசத்தில் வாழ்ந்த, முஸ்லிம் மக்களை துரத்தியதோடு அல்லாமல் மன்னார் உப்புக்குளம் கிராமத்தில் இருந்த முஸ்லிம் மக்களையும் துரத்தினார்கள். அந்த கிராமத்திலிலிருந்து துரத்தப்பட்ட மக்கள் யாழ்ப்பாணம் பகுதியிலிருந்து துரத்தப்பட்ட அகதி மக்களோடு புத்தளத்திலேயே போய் வாழ்ந்தார்கள்.
உப்புக்குளம் கிராமவாசிகளின் பிரதானமான ஜீவாதாரமாக இருந்தது மீன்பிடித் தொழிலேயாகும். இவர்களுக்கு கொந்தைப்பிட்டி என்ற ஒரு வலைப்பாடு இருந்தது. வலைப்பாடு என்பது மீனவர்கள், வாடிகளை அமைத்து, படகுகளை வைத்துக்கொண்டு தங்கியிருக்கும் கரையோரப் பகுதியாகும்.
கொந்தைப்பிட்டி பாடு, உப்புக்குளம் கிராமத்தின் அருகாமையிலேயே அமைந்திருந்தது. முஸ்லிம் மக்கள் துரத்தப்பட்ட பின்னர், இந்த பகுதி வெற்றிடமாகவே இருந்தது.
இவை நடந்து சற்று காலத்துக்குப் பின்னர், அதாவது 1999களில், புலி அமைப்பினால் விடத்தல் தீவிலிருந்த தமிழ் மீனவர்கள் புலிகளின் தேவைகளுக்காக வெளியேற்றப்பட்டார்கள். இதற்கான காரணம் புலிகள் ஆயுதங்களை கொண்டு வந்து இறக்கும் இடமாக விடத்தல் தீவை பாவிக்கத் தொடங்கியமையேயாகும். விடத்தல்தீவு, புலிகள் ஆயுதங்களை கொண்டு வந்து இறக்கும் ஒரு பிரதான இடமாக இருந்தது.
இங்கு ஒரு முக்கிய விடயம் என்னவென்றால் மன்னாரிலிருந்து செல்லும் றோலர்களும் இந்தியாவிலிருந்து வரும் இந்திய மீனவர்களின் றோலர்களும் என நூறு, ஆயிரக்கணக்கில் இப்பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டமையேயாகும்.
இந்திய மீனவர்களின் படகுகளுக்கு இலங்கையின் கரையோரப் பகுதிவரை வந்து மீன்பிடிக்க, புலிகள் உற்சாகம் அளித்தார்கள். இதனால் கடற்படையினரால் இதற்குள் யார் புலி, யார் மீனவர்கள் என்ற வித்தியாசத்தை உணர முடியவில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, இந்த மீனவர்களை அரணாக்கிக் கொண்டு, புலிகள் தமது றோலர்களில் ஆயுதங்களை இலகுவாக கொண்டுவந்து இறக்கினார்கள். புலிகள் இயக்கக்கத்துக்கு தேவையான பாரிய ஆயுதங்கள்கூட விடத்தல் தீவு வழியாகவே கொண்டுவந்து இறக்கப்பட்டன. இங்கு கொண்டுவரப்பட்ட பாரிய ஆயுதங்களையும், செல்களையும், குளிரூட்டிகளால் நிரப்பப்பட்ட லொறிகளிலேயே புலிகள் வன்னிக்கு கொண்டு போனார்கள்.
புலிகளின் தேவைகளுக்காக, விடத்தல் தீவிலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் மீனவர்கள், மன்னார் தீவின் பள்ளிமுனை என்ற பகுதியில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டார்கள். இப்படித் தங்கவைக்கப்பட்ட மீனவர்கள் றோமன் கத்தோலிக்க மதத்தை சார்ந்தவர்கள். பள்ளிமுனை என்ற கிராமம் தமிழ் கிராமமாகும். அங்கு தற்காலிகமாக குடியேறிய, விடத்தல் தீவு தமிழ் மீனவர்கள், பள்ளிமுனை தமிழ் மீனவர்களோடு இடம்பெற்ற சில பிரச்சினைகளின் காரணமாக அவர்களால், ஒருவருடத்துக்கு மேல் அங்கு வாழ முடியவில்லை.
அதன் பிறகு, பனங்காட்டுக் கொட்டு என்ற தமிழ் கிராமத்துக்கு இவர்கள் புலிகளால் இடமாற்றம் செய்ப்பட்டார்கள். அங்கும் அந்த மக்களோடு பிரச்சினைப்பட்டு, அங்கும் அவர்களால் வாழ முடியவில்லை. அதன் பின்னர் விடத்தல் தீவு மீனவர்களை, உப்புக்குளம் கிராமத்திலிருந்து 9 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள, தோட்டவெளி என்ற இடத்தில் தங்க வைக்கப்பட்டார்கள். தோட்டவெளியில் தங்கிய இந்த மீனவர்கள், கொந்தைப்பிட்டி கரையோரத்தை தமது பாவனைக்கு பிடித்துக் கொண்டார்கள். இக்காலம் 2002ம் ஆண்டாக இருந்தது.
1990களில் புலிகளால், உப்புக்குள கிராமத்திலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்களின் ஒருசாரார் யுத்த நிறுத்த ஒப்பந்தம் காரணமாக புத்தளத்திலிருந்து அப்பகுதிக்கு வந்து மீண்டும், மீன்பிடித் தொழிலில் ஈடுபட தொடங்கினார்கள். இவர்கள் வந்தவுடன், ஏற்கனவே விடத்தல் தீவிலிருந்து வந்து குடியேறி, மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தமிழ் கத்தோலிக்க மீனவர்களுடன் முரண்பாடுகள் உருவாகியது.
இந்த பிரச்சனையை சுமூகத்துக்கு கொண்டுவருவதற்கு, இப்பகுதிக்கு பொறுப்பாக இருந்த கடற்புலிகளின் தலைவர்களில் ஒருவரான அமுதன், இவர்களுடன் பேசி பிரச்சினையை தவிர்க்கும் முகமாக ஒரு இணக்கத்தை ஏற்படுத்த முயற்சித்தார். உப்புக்குள மீனவ சங்கத்துடனும், விடத்தல் தீவு மீனவ சங்கத்துடனும் பேசி கையெழுத்திட்ட ஒப்புதல் ஒன்றின் மூலம், விடத்தல் தீவு பிரதேசத்தை புலிகள் கைவிடும்போது, அங்குவாழ்ந்த மக்களை கொந்தைப்பிட்டியை விட்டு வெளியேற்றி விடத்தல் தீவுக்கு போக வழி செய்வதாக உறுதியளித்தார்.
உப்புக்குள கிராமமும், கொந்தைப்பிட்டி மீன்பிடி கரையும், முஸ்லீம் மக்களுக்கு உரித்தானதாக இருந்தது. விடத்தல் தீவு மீனவர்கள், கொந்தைப்பிட்டி கரையோரப்பகுதியில், வாடிகள் கட்டுவதற்கு வேண்டுமானால், உப்புக்குள மீனவ சங்கத்தின் அனுமதியுடன் தான் கட்ட முடியும் என அந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன் பின்னர், அரசாங்க உத்தியோகத்தர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போதும், விடத்தல் தீவு மீனவர்கள் கொந்தைப்பிட்டி மீன்பிடிக் கரையோரப் பிரதேசத்தில் தற்காலிகமாக தங்க மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டது. உதாரணமாக, 2005 யூன் 7ம் திகதி மன்னார் உதவி மீன்பிடிதுறை இயக்குனர், உப்புக்குள முஸ்லிம் மீனவர்களின் ஒப்புதலைப்பெற்று, விடத்தல்தீவு தமிழ் கத்தோலிக்க மீனவர்கள், மேலும் சில காலங்கள் அங்கு தொடர்ந்து தங்குவதற்கு அனுமதி பெற்று கொடுத்தார். அதன் பின்னர் தமிழ்தேசிய கூட்டு முன்ணணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற பிரதிநிதி செல்வம் அடைக்கலநாதன், தலையிட்டு விடத்தல் தீவு தமிழ் கத்தோலிக்க மீனவர்களை மேலும் ஒரு வருடம் தங்க அனுமதி வாங்கி கொடுத்தார்.
2007 மார்ச் 19ம்திகதி மன்னார் மாவட்டத்தின் பிரதேச செயலாளர் தலைமையில் நடாத்தப்பட்ட ஒரு கூட்டத்தில், உப்புக்குளம் மற்றும் விடத்தல் தீவு மீனவர்களிடையே தற்காலிக ஒரு உடன்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் 2009ல் உப்புக்குளம் பகுதியிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம் மீனவர்கள், மீண்டும் அப்பகுதிக்கு வந்து தங்க தொடங்கிய போது, பிரச்சினை உக்கிரம் அடைந்தது.
2011 மார்ச் 7ம் திகதி உப்புக்குள மீனவர்கள், மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்தின அவர்களுக்கு ஒரு மகஜர் ஒன்றை கொடுத்து, கொந்தைப்பிட்டி மீன்பிடி கரையோரப் பிரச்சனைகளை தீர்த்து வைக்க கோரினார்கள். இதன் அடிப்படையில் 2011 நவம்பர் 3ம்திகதி, மன்னார் உதவி மீன்பிடி இயக்குனரும், மன்னார் மாவட்ட சங்கங்களின் தலைவரும், பள்ளி முனைப் பனங்காட்டு கொட்டு, உப்புக்குளம் விடத்தல் தீவு ஆகிய மீன்பிடி சங்கங்களின் தலைவர்கள் ஒரு கூட்டத்தை கூடி, விடத்தல் தீவு மீனவர்கள் மீண்டும் விடத்தல் தீவுக்கு திரும்பிச் வேண்டும் என்றும், 2011 நம்பர் 30ம் திகதிக்கு முன்னதாக தமது வாடிகளை அகற்றி, அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. எல்லோரும் இணைந்து எடுத்த இந்த முடிவு நடைமுறைக்கு வரவில்லை.
பின்னர் இது சம்பந்தமாக பொலிசாருடன் இணைந்து, 2012 யூன் 7, 2012 யூன் 12 மற்றும் 2012 யூன் 26 ஆகிய 3 தினங்கள் ஒரு கூட்டம் நடைபெற்றது. அப்போதும், வாதப்பிரதிவாதங்கள் இடம் பெற்றாலும் முடிவு ஒன்றை எட்ட முடியவில்லை. இந்த மூன்று நாட்களில் கடைசி நாளில், கொந்தைப்பட்டி வாடிப் பிரதேசங்களை விட்டு, தாம் வெளியேறுவதாக விடத்தல் தீவு மீனவர்கள் சொன்னாலும், அவர்கள் அதை நடைமுறைப்படுத்தவில்லை.
அதன் பின்னர் 2012 யூலை 13ம் திகதி, முஸ்லீம் மீனவர்கள் 20பேர் அடங்கிய ஒரு குழு, தமது எதிர்ப்பை தெரிவிக்க கொந்தைப்பிட்டி கரையோரப்பிரதேசம் போய், அங்கு ஏற்பட்ட அமளி துமளிகளின் போது ஏகப்பட்ட மீனவ வாடிகள் சின்னாபின்னப் படுத்தப்பட்டன.
தமிழ் மீனவர்களிடமிருந்து 17 புகார்கள் பொலிசாரிடம் முறையிடப்பட்டன. இது குறித்த விசாரணைகளின் பின்னர், 2012 யூலை மாதம் 16ம் திகதி 396/2012 B அறிக்கை, மன்னார் நீதிமன்றத்துக்கு பொலிசாரினால் கையளிக்கப்பட்டது. இந்த அசம்பாவிதங்களில் ஈடுபட்ட முஸ்லீம்கள் அப்பகுதியை விட்டு ஓடிவிட்டனர் என பொலிஸ் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்த அறிக்கையின்படி, மன்னார் நீதிபதி, முஸ்லிம் – தமிழ், இருபகுதியினர்க்கும், 2012 யூலை 15ம் திகதி, நீதிமன்றத்துக்கு சமூகம் அளிக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தார். ஆனால் 15ம்திகதி நீதிமன்றத்துக்கு தமிழ் மீனவர்கள் மட்டுமே சமூகமளித்திருந்தார்கள். முஸ்லிம் மீனவர்கள் சமூகமளிக்கவில்லை. எனவே அன்று அப் பிரச்சனைக்கு ஒரு தீர்ப்பை வழங்க முடியாமல் போனதால், இந்த பிரச்சினை முடிவுறும் வரை தமிழ் மீனவர்களுக்கு, கொந்தைப்பிட்டி கரையோரங்களில் தற்காலீகமாக தங்க அனுமதியளித்து, பொலிசார் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இங்கே பொலிசார் மூன்று உத்தரவுகளை பிறப்பிக்குமாறு நீதிபதியிடம் வேண்டினார்கள்.
1. தமிழ் மீனவர்களுக்கு எதிராக, முஸ்லிம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது என்பதாகும். அது சமாதானத்தை பாழடித்துவிடும் என்று காரணம் கூறினார்கள்.
2. மாவட்ட காரியதரிசியும் பிரதேச காரியதரிசியும் இணைந்து தமிழ் மீனவர்களுக்கு வேறு ஒரு இடத்தை தேடிக்கொடுக்க வேண்டும் என்பதாகும்.
3.வேறு ஒரு இடம் தமிழ் மீனவர்களுக்கு கிடைத்த உடனேயே, தமிழ் மீனவர்கள் கொந்தைப்பிட்டி கரையோர பிரதேசத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பதாகும்.
இது குறித்த தீர்ப்பு வழங்கப்பட வேண்டிய நாளான, 2012 யூலை 18ம் திகதி இருதரப்பினரும் நீதிமன்றத்துக்கு பிரசன்னமாகும்படி கட்டளையிடப்பட்டது. இருப்பினும் யூலை 18ம் திகதி முஸ்லிம்தரப்பில் எவருமே நீதிமன்றத்துக்கு வரவில்லை. அவர்கள் சார்பாக ஒரு வழக்கறிஞர் மட்டும் பிரசன்னமாகியிருந்தார்.
அவர் 1996 இலக்கம் சரத்து 2 எனும் மீனவ மற்றும் நீர்பாசன சட்டத்தின்படி 44 வது பிரிவில், மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாளுவதற்கு மீன்பிடிதுறை இயக்குனருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு, நீதிபதிக்கு அது சம்பந்தமான அதிகாரங்கள் இல்லை என்றும் வாதிட்டார். அத்துடன் ஏற்கனவே மீன்பிடி இயக்குனர், கொந்தைப்பிட்டி தமிழ் மீனவர்கள் வெளியேற வேண்டும் என்ற முடிவை பலமுறை எடுத்திருப்பதாகவும் கூறிய தகவல்களை முன்வைத்தார்.
இதன் அடிப்படையில் மன்னார் நீதிபதி, 3 மாதத்துக்குள், மன்னார் அரசாங்க அதிபரும், பிரதேசசபை காரியதரிசியும், விடத்தல் தீவிலிருந்து வந்து தங்கியிருக்கும் தமிழ் மீனவர்களை, வேறு ஒரு இடத்தை ஒழுங்கு செய்து வாழ வழி செய்து கொடுக்க வேண்டும் என்றும், அது நடைமுறைப்படுத்தப்படும் போது உடனடியாக தமிழ் மீனவர்கள், கொந்தைப்பிட்டி கரையோரத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கட்டளையிட்டார்.
நீதிமன்றத்துக்குள் இப்படியான ஒரு தீர்ப்பை நீதிபதி, முஸ்லீம்களுக்கு சார்பாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது, நீதிமன்றத்திற்கு வெளியே குழுமியிருந்த 400 பேர்வரையிலான முஸ்லிம் மீனவர்கள், இது குறித்து அறியாது, நீதிபதிக்கு எதிராக கோசங்களை எழுப்பிய வண்ணம் இருந்தனர். கொந்தைப்பிட்டி பிரச்சனைகளுக்கு முன்பே, இந்த நீதிபதி தமக்கு சார்பாக தீர்ப்பு வழங்கப் போவதில்லை, இந்த நீதிபதி தமிழர்கள் சார்பாகவே தீர்ப்பு வழங்குவார் என்ற சந்தேகம் முஸ்லீம் தரப்புக்குள் இருந்தது.
இதற்கு இன்னோர் காரணம், 2012 யூன் மாதம் மன்னார் பிரதேசத்தின் அடம்பன் மற்றும் மிரிச்சுகட்டி முஸ்லிம் பள்ளிவாசல்களின் தலைவர்கள், நீதித்துறை கமிசனுக்கு இந்த நீதிபதி குறித்து மகஜர் ஒன்றை அனுப்பி, இந்த நீதிபதியை, இந்த பகுதியிலிருந்து இடமாற்றம் செய்யும்படி வேண்டியிருந்தார்கள். கொந்தைப்பிட்டி பிரச்சினை தொடர்பாக இந்த நீதிபதியால் வழங்கப்படும் முடிவு, முஸ்லிம்களுக்கு சார்பாக இருக்காது என்று நினைத்ததனாலேயே, முஸ்லிம்கள் நீதிமன்றத்துக்கு சமூகம் அளிக்கவில்லை. இருந்தாலும் யூலை மாதம் 18ம்திகதி முஸ்லீம் மக்கள் வெளியே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்த போது, நீமன்றத்துக்குள் நீதிபதி முஸ்லீம்களுக்கு சார்பாகவே நீதி வழங்கிக் கொண்டிருந்தார்.
இது குறித்து எவரும் (முஸ்லீம் சட்டத்தரணி உட்பட), வெளியிலிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தெரிவிக்கவே இல்லை. முஸ்லீம் மக்களுக்கு சார்பான ஒரு நீதி வழங்கப்பட்டும் வெளியே நீண்டு தொடர்ந்த, ஆர்ப்பாட்டத்தை செவிமடுத்த நீதிபதி, இதை ஒரு எரிச்சல்தரும் நிகழ்வாகவே சிந்தித்திருப்பார் என எண்ணத் தோன்றுகின்றது. நீதிபதி இருமுறை, மன்னார் பொலிஸ் அதிகாரியை தொடர்பு கொண்டு பொலீசாரின் பலத்தை பிரயோகித்து ஆர்ப்பாட்டக்காரரை துரத்தும்படி கேட்டிருந்தார். அதன் பின்னரும், தொடர்ந்தும் நீதிமன்றத்தின் வெளியே ஆர்ப்பாட்டகாரர்கள் கோசமிட்டுக் கொண்டிருந்ததினால், நீதிபதி ஆசனத்திலிருந்து நேரடியாக இறங்கி தனது அங்கியுடன் வந்து, ஆர்ப்பாட்டகார்களை அடித்து துரத்துமாறு அல்லது கண்ணீர் புகை அடித்து அல்லது முழங்காலுக்கு கீழ் வெடி வைத்து என்றாலும் துரத்தமாறு பொலீசாருக்குக் கட்ளை இட்டார்.
இதுவரைக்கும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு, பாதைகளை அடைத்துக்கொண்ட ஆர்ப்பாட்டக்கார்கள், நீதிபதியின் இந்த கட்டளையை கேட்டதும் கோபத்துக்குள்ளாகி, ஆவேசமானார்கள். அதன்போதே பொலிசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை பாவித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை நீதிமன்றம் நோக்கி எறியத் தொடங்கினார்கள். மூன்று பொலீஸ் அதிகாரிகள் பாரதூரமான காயங்களுக்கு உள்ளானார்கள். இன்னும் சிலருக்கு காயம் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்கார்களில் 18 பேரை கைது செய்த பொலீசார், 13 பேரை தடுத்துவைத்து, 5 பேரை விடுதலை செய்தனர். அதற்கு அடுத்தநாள் யூலை 19ம் திகதி மன்னார் நீதிபதி பொஸிற்கு ஒரு புகாரைக் கொடுத்து, அமைச்சர் ரிச்சாட் பதியுதீனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தார். அவர் யூலை மாதம் 15ம்திகதி தன்னால் வழங்கப்பட்ட தீர்ப்பு பிழையானது என்று தன்னை அச்சுறுத்தியதாகவும் அந்த வழக்கு பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழ் – முஸ்லீம் சமூகங்களிடையே மோதல் ஒன்று உருவானதற்கான காரணங்களாக நாம் இரு விடயங்களைக் காண முடிகிறது.
1. ஒரு முஸ்லீம் அமைச்சர் நீதிபதியை மிரட்டினார் என தமிழ் பகுதியும்,
2. சமாதானமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களை அடித்துதுரத்த உத்தரவிட்டார் என முஸ்லிம் பகுதியும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.
இந்த பிரச்சனையை தீர்ப்பதென்றால் இரத்தத்துக்கு இரத்தம் என்ற அடிப்படையில் போராடக்கூடாது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இவை எல்லாவற்றிக்கும் அடிப்படைக் காரணமாகத் தெரிவது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் மனதில் இருக்கும் ஒருவர் மீது ஒருவருக்குள்ள அவநம்பிக்கையாகும். இது இன்னமும் தொடருமானால், இவர்கள் ஒரு முடிவுக்கு வர மாட்டார்கள் என்றே நினைக்கத் தோன்றுகின்றது.
(‘திவயின’வில் 30 07 2012ல் வெளியான கட்டுரையை தேசம்நெற்றுக்காக தமிழில் மொழிபெயர்த்தவர் அஜீவன்)

இதன் உட்பக்கத்தை சற்று விரிவாக பார்ப்பது நலம் என்று நினைக்கத் தோன்றுகின்றது. இது ஒரு அரசியல்வாதியின் பேயாட்டமாக தெரிவதைவிட இது வடக்கின், தமிழ் – முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்ட பிரிவினையாகவே தெரிகின்றது.
இங்கே ஒருவர், மன்னார் நீதிபதிக்கு தொலைபேசி வழி மிரட்டியதாக சொல்லப்படுவது நீதிமன்னறத்தில் ஒப்புவிக்கப்படுமானால், அது பெரும்பாலும் நோயின் அறிகுறி அன்றி நோயின் தன்மையல்ல.
மன்னாரில் ஏற்பட்டுள்ள நிகழ்வின் செயற்பாடுகளை நாம் பார்க்கும்போது அதன் கடந்த காலத்தை நோக்கிச் செல்ல வேண்டியுள்ளது. அதாவது 1990களுக்கு நாம் செல்ல வேண்டும். 1990 களில் புலிகள் இயக்கம் வடக்கு பிரதேசத்தில் வாழ்ந்த, முஸ்லிம் மக்களை துரத்தியதோடு அல்லாமல் மன்னார் உப்புக்குளம் கிராமத்தில் இருந்த முஸ்லிம் மக்களையும் துரத்தினார்கள். அந்த கிராமத்திலிலிருந்து துரத்தப்பட்ட மக்கள் யாழ்ப்பாணம் பகுதியிலிருந்து துரத்தப்பட்ட அகதி மக்களோடு புத்தளத்திலேயே போய் வாழ்ந்தார்கள்.
உப்புக்குளம் கிராமவாசிகளின் பிரதானமான ஜீவாதாரமாக இருந்தது மீன்பிடித் தொழிலேயாகும். இவர்களுக்கு கொந்தைப்பிட்டி என்ற ஒரு வலைப்பாடு இருந்தது. வலைப்பாடு என்பது மீனவர்கள், வாடிகளை அமைத்து, படகுகளை வைத்துக்கொண்டு தங்கியிருக்கும் கரையோரப் பகுதியாகும்.
கொந்தைப்பிட்டி பாடு, உப்புக்குளம் கிராமத்தின் அருகாமையிலேயே அமைந்திருந்தது. முஸ்லிம் மக்கள் துரத்தப்பட்ட பின்னர், இந்த பகுதி வெற்றிடமாகவே இருந்தது.
இவை நடந்து சற்று காலத்துக்குப் பின்னர், அதாவது 1999களில், புலி அமைப்பினால் விடத்தல் தீவிலிருந்த தமிழ் மீனவர்கள் புலிகளின் தேவைகளுக்காக வெளியேற்றப்பட்டார்கள். இதற்கான காரணம் புலிகள் ஆயுதங்களை கொண்டு வந்து இறக்கும் இடமாக விடத்தல் தீவை பாவிக்கத் தொடங்கியமையேயாகும். விடத்தல்தீவு, புலிகள் ஆயுதங்களை கொண்டு வந்து இறக்கும் ஒரு பிரதான இடமாக இருந்தது.
இங்கு ஒரு முக்கிய விடயம் என்னவென்றால் மன்னாரிலிருந்து செல்லும் றோலர்களும் இந்தியாவிலிருந்து வரும் இந்திய மீனவர்களின் றோலர்களும் என நூறு, ஆயிரக்கணக்கில் இப்பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டமையேயாகும்.
இந்திய மீனவர்களின் படகுகளுக்கு இலங்கையின் கரையோரப் பகுதிவரை வந்து மீன்பிடிக்க, புலிகள் உற்சாகம் அளித்தார்கள். இதனால் கடற்படையினரால் இதற்குள் யார் புலி, யார் மீனவர்கள் என்ற வித்தியாசத்தை உணர முடியவில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, இந்த மீனவர்களை அரணாக்கிக் கொண்டு, புலிகள் தமது றோலர்களில் ஆயுதங்களை இலகுவாக கொண்டுவந்து இறக்கினார்கள். புலிகள் இயக்கக்கத்துக்கு தேவையான பாரிய ஆயுதங்கள்கூட விடத்தல் தீவு வழியாகவே கொண்டுவந்து இறக்கப்பட்டன. இங்கு கொண்டுவரப்பட்ட பாரிய ஆயுதங்களையும், செல்களையும், குளிரூட்டிகளால் நிரப்பப்பட்ட லொறிகளிலேயே புலிகள் வன்னிக்கு கொண்டு போனார்கள்.
புலிகளின் தேவைகளுக்காக, விடத்தல் தீவிலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் மீனவர்கள், மன்னார் தீவின் பள்ளிமுனை என்ற பகுதியில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டார்கள். இப்படித் தங்கவைக்கப்பட்ட மீனவர்கள் றோமன் கத்தோலிக்க மதத்தை சார்ந்தவர்கள். பள்ளிமுனை என்ற கிராமம் தமிழ் கிராமமாகும். அங்கு தற்காலிகமாக குடியேறிய, விடத்தல் தீவு தமிழ் மீனவர்கள், பள்ளிமுனை தமிழ் மீனவர்களோடு இடம்பெற்ற சில பிரச்சினைகளின் காரணமாக அவர்களால், ஒருவருடத்துக்கு மேல் அங்கு வாழ முடியவில்லை.
அதன் பிறகு, பனங்காட்டுக் கொட்டு என்ற தமிழ் கிராமத்துக்கு இவர்கள் புலிகளால் இடமாற்றம் செய்ப்பட்டார்கள். அங்கும் அந்த மக்களோடு பிரச்சினைப்பட்டு, அங்கும் அவர்களால் வாழ முடியவில்லை. அதன் பின்னர் விடத்தல் தீவு மீனவர்களை, உப்புக்குளம் கிராமத்திலிருந்து 9 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள, தோட்டவெளி என்ற இடத்தில் தங்க வைக்கப்பட்டார்கள். தோட்டவெளியில் தங்கிய இந்த மீனவர்கள், கொந்தைப்பிட்டி கரையோரத்தை தமது பாவனைக்கு பிடித்துக் கொண்டார்கள். இக்காலம் 2002ம் ஆண்டாக இருந்தது.
1990களில் புலிகளால், உப்புக்குள கிராமத்திலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்களின் ஒருசாரார் யுத்த நிறுத்த ஒப்பந்தம் காரணமாக புத்தளத்திலிருந்து அப்பகுதிக்கு வந்து மீண்டும், மீன்பிடித் தொழிலில் ஈடுபட தொடங்கினார்கள். இவர்கள் வந்தவுடன், ஏற்கனவே விடத்தல் தீவிலிருந்து வந்து குடியேறி, மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தமிழ் கத்தோலிக்க மீனவர்களுடன் முரண்பாடுகள் உருவாகியது.
இந்த பிரச்சனையை சுமூகத்துக்கு கொண்டுவருவதற்கு, இப்பகுதிக்கு பொறுப்பாக இருந்த கடற்புலிகளின் தலைவர்களில் ஒருவரான அமுதன், இவர்களுடன் பேசி பிரச்சினையை தவிர்க்கும் முகமாக ஒரு இணக்கத்தை ஏற்படுத்த முயற்சித்தார். உப்புக்குள மீனவ சங்கத்துடனும், விடத்தல் தீவு மீனவ சங்கத்துடனும் பேசி கையெழுத்திட்ட ஒப்புதல் ஒன்றின் மூலம், விடத்தல் தீவு பிரதேசத்தை புலிகள் கைவிடும்போது, அங்குவாழ்ந்த மக்களை கொந்தைப்பிட்டியை விட்டு வெளியேற்றி விடத்தல் தீவுக்கு போக வழி செய்வதாக உறுதியளித்தார்.
உப்புக்குள கிராமமும், கொந்தைப்பிட்டி மீன்பிடி கரையும், முஸ்லீம் மக்களுக்கு உரித்தானதாக இருந்தது. விடத்தல் தீவு மீனவர்கள், கொந்தைப்பிட்டி கரையோரப்பகுதியில், வாடிகள் கட்டுவதற்கு வேண்டுமானால், உப்புக்குள மீனவ சங்கத்தின் அனுமதியுடன் தான் கட்ட முடியும் என அந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன் பின்னர், அரசாங்க உத்தியோகத்தர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போதும், விடத்தல் தீவு மீனவர்கள் கொந்தைப்பிட்டி மீன்பிடிக் கரையோரப் பிரதேசத்தில் தற்காலிகமாக தங்க மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டது. உதாரணமாக, 2005 யூன் 7ம் திகதி மன்னார் உதவி மீன்பிடிதுறை இயக்குனர், உப்புக்குள முஸ்லிம் மீனவர்களின் ஒப்புதலைப்பெற்று, விடத்தல்தீவு தமிழ் கத்தோலிக்க மீனவர்கள், மேலும் சில காலங்கள் அங்கு தொடர்ந்து தங்குவதற்கு அனுமதி பெற்று கொடுத்தார். அதன் பின்னர் தமிழ்தேசிய கூட்டு முன்ணணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற பிரதிநிதி செல்வம் அடைக்கலநாதன், தலையிட்டு விடத்தல் தீவு தமிழ் கத்தோலிக்க மீனவர்களை மேலும் ஒரு வருடம் தங்க அனுமதி வாங்கி கொடுத்தார்.
2007 மார்ச் 19ம்திகதி மன்னார் மாவட்டத்தின் பிரதேச செயலாளர் தலைமையில் நடாத்தப்பட்ட ஒரு கூட்டத்தில், உப்புக்குளம் மற்றும் விடத்தல் தீவு மீனவர்களிடையே தற்காலிக ஒரு உடன்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் 2009ல் உப்புக்குளம் பகுதியிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம் மீனவர்கள், மீண்டும் அப்பகுதிக்கு வந்து தங்க தொடங்கிய போது, பிரச்சினை உக்கிரம் அடைந்தது.
2011 மார்ச் 7ம் திகதி உப்புக்குள மீனவர்கள், மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்தின அவர்களுக்கு ஒரு மகஜர் ஒன்றை கொடுத்து, கொந்தைப்பிட்டி மீன்பிடி கரையோரப் பிரச்சனைகளை தீர்த்து வைக்க கோரினார்கள். இதன் அடிப்படையில் 2011 நவம்பர் 3ம்திகதி, மன்னார் உதவி மீன்பிடி இயக்குனரும், மன்னார் மாவட்ட சங்கங்களின் தலைவரும், பள்ளி முனைப் பனங்காட்டு கொட்டு, உப்புக்குளம் விடத்தல் தீவு ஆகிய மீன்பிடி சங்கங்களின் தலைவர்கள் ஒரு கூட்டத்தை கூடி, விடத்தல் தீவு மீனவர்கள் மீண்டும் விடத்தல் தீவுக்கு திரும்பிச் வேண்டும் என்றும், 2011 நம்பர் 30ம் திகதிக்கு முன்னதாக தமது வாடிகளை அகற்றி, அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. எல்லோரும் இணைந்து எடுத்த இந்த முடிவு நடைமுறைக்கு வரவில்லை.
பின்னர் இது சம்பந்தமாக பொலிசாருடன் இணைந்து, 2012 யூன் 7, 2012 யூன் 12 மற்றும் 2012 யூன் 26 ஆகிய 3 தினங்கள் ஒரு கூட்டம் நடைபெற்றது. அப்போதும், வாதப்பிரதிவாதங்கள் இடம் பெற்றாலும் முடிவு ஒன்றை எட்ட முடியவில்லை. இந்த மூன்று நாட்களில் கடைசி நாளில், கொந்தைப்பட்டி வாடிப் பிரதேசங்களை விட்டு, தாம் வெளியேறுவதாக விடத்தல் தீவு மீனவர்கள் சொன்னாலும், அவர்கள் அதை நடைமுறைப்படுத்தவில்லை.
அதன் பின்னர் 2012 யூலை 13ம் திகதி, முஸ்லீம் மீனவர்கள் 20பேர் அடங்கிய ஒரு குழு, தமது எதிர்ப்பை தெரிவிக்க கொந்தைப்பிட்டி கரையோரப்பிரதேசம் போய், அங்கு ஏற்பட்ட அமளி துமளிகளின் போது ஏகப்பட்ட மீனவ வாடிகள் சின்னாபின்னப் படுத்தப்பட்டன.
தமிழ் மீனவர்களிடமிருந்து 17 புகார்கள் பொலிசாரிடம் முறையிடப்பட்டன. இது குறித்த விசாரணைகளின் பின்னர், 2012 யூலை மாதம் 16ம் திகதி 396/2012 B அறிக்கை, மன்னார் நீதிமன்றத்துக்கு பொலிசாரினால் கையளிக்கப்பட்டது. இந்த அசம்பாவிதங்களில் ஈடுபட்ட முஸ்லீம்கள் அப்பகுதியை விட்டு ஓடிவிட்டனர் என பொலிஸ் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்த அறிக்கையின்படி, மன்னார் நீதிபதி, முஸ்லிம் – தமிழ், இருபகுதியினர்க்கும், 2012 யூலை 15ம் திகதி, நீதிமன்றத்துக்கு சமூகம் அளிக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தார். ஆனால் 15ம்திகதி நீதிமன்றத்துக்கு தமிழ் மீனவர்கள் மட்டுமே சமூகமளித்திருந்தார்கள். முஸ்லிம் மீனவர்கள் சமூகமளிக்கவில்லை. எனவே அன்று அப் பிரச்சனைக்கு ஒரு தீர்ப்பை வழங்க முடியாமல் போனதால், இந்த பிரச்சினை முடிவுறும் வரை தமிழ் மீனவர்களுக்கு, கொந்தைப்பிட்டி கரையோரங்களில் தற்காலீகமாக தங்க அனுமதியளித்து, பொலிசார் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இங்கே பொலிசார் மூன்று உத்தரவுகளை பிறப்பிக்குமாறு நீதிபதியிடம் வேண்டினார்கள்.
1. தமிழ் மீனவர்களுக்கு எதிராக, முஸ்லிம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது என்பதாகும். அது சமாதானத்தை பாழடித்துவிடும் என்று காரணம் கூறினார்கள்.
2. மாவட்ட காரியதரிசியும் பிரதேச காரியதரிசியும் இணைந்து தமிழ் மீனவர்களுக்கு வேறு ஒரு இடத்தை தேடிக்கொடுக்க வேண்டும் என்பதாகும்.
3.வேறு ஒரு இடம் தமிழ் மீனவர்களுக்கு கிடைத்த உடனேயே, தமிழ் மீனவர்கள் கொந்தைப்பிட்டி கரையோர பிரதேசத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பதாகும்.
இது குறித்த தீர்ப்பு வழங்கப்பட வேண்டிய நாளான, 2012 யூலை 18ம் திகதி இருதரப்பினரும் நீதிமன்றத்துக்கு பிரசன்னமாகும்படி கட்டளையிடப்பட்டது. இருப்பினும் யூலை 18ம் திகதி முஸ்லிம்தரப்பில் எவருமே நீதிமன்றத்துக்கு வரவில்லை. அவர்கள் சார்பாக ஒரு வழக்கறிஞர் மட்டும் பிரசன்னமாகியிருந்தார்.
அவர் 1996 இலக்கம் சரத்து 2 எனும் மீனவ மற்றும் நீர்பாசன சட்டத்தின்படி 44 வது பிரிவில், மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாளுவதற்கு மீன்பிடிதுறை இயக்குனருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு, நீதிபதிக்கு அது சம்பந்தமான அதிகாரங்கள் இல்லை என்றும் வாதிட்டார். அத்துடன் ஏற்கனவே மீன்பிடி இயக்குனர், கொந்தைப்பிட்டி தமிழ் மீனவர்கள் வெளியேற வேண்டும் என்ற முடிவை பலமுறை எடுத்திருப்பதாகவும் கூறிய தகவல்களை முன்வைத்தார்.
இதன் அடிப்படையில் மன்னார் நீதிபதி, 3 மாதத்துக்குள், மன்னார் அரசாங்க அதிபரும், பிரதேசசபை காரியதரிசியும், விடத்தல் தீவிலிருந்து வந்து தங்கியிருக்கும் தமிழ் மீனவர்களை, வேறு ஒரு இடத்தை ஒழுங்கு செய்து வாழ வழி செய்து கொடுக்க வேண்டும் என்றும், அது நடைமுறைப்படுத்தப்படும் போது உடனடியாக தமிழ் மீனவர்கள், கொந்தைப்பிட்டி கரையோரத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கட்டளையிட்டார்.
நீதிமன்றத்துக்குள் இப்படியான ஒரு தீர்ப்பை நீதிபதி, முஸ்லீம்களுக்கு சார்பாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது, நீதிமன்றத்திற்கு வெளியே குழுமியிருந்த 400 பேர்வரையிலான முஸ்லிம் மீனவர்கள், இது குறித்து அறியாது, நீதிபதிக்கு எதிராக கோசங்களை எழுப்பிய வண்ணம் இருந்தனர். கொந்தைப்பிட்டி பிரச்சனைகளுக்கு முன்பே, இந்த நீதிபதி தமக்கு சார்பாக தீர்ப்பு வழங்கப் போவதில்லை, இந்த நீதிபதி தமிழர்கள் சார்பாகவே தீர்ப்பு வழங்குவார் என்ற சந்தேகம் முஸ்லீம் தரப்புக்குள் இருந்தது.
இதற்கு இன்னோர் காரணம், 2012 யூன் மாதம் மன்னார் பிரதேசத்தின் அடம்பன் மற்றும் மிரிச்சுகட்டி முஸ்லிம் பள்ளிவாசல்களின் தலைவர்கள், நீதித்துறை கமிசனுக்கு இந்த நீதிபதி குறித்து மகஜர் ஒன்றை அனுப்பி, இந்த நீதிபதியை, இந்த பகுதியிலிருந்து இடமாற்றம் செய்யும்படி வேண்டியிருந்தார்கள். கொந்தைப்பிட்டி பிரச்சினை தொடர்பாக இந்த நீதிபதியால் வழங்கப்படும் முடிவு, முஸ்லிம்களுக்கு சார்பாக இருக்காது என்று நினைத்ததனாலேயே, முஸ்லிம்கள் நீதிமன்றத்துக்கு சமூகம் அளிக்கவில்லை. இருந்தாலும் யூலை மாதம் 18ம்திகதி முஸ்லீம் மக்கள் வெளியே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்த போது, நீமன்றத்துக்குள் நீதிபதி முஸ்லீம்களுக்கு சார்பாகவே நீதி வழங்கிக் கொண்டிருந்தார்.
இது குறித்து எவரும் (முஸ்லீம் சட்டத்தரணி உட்பட), வெளியிலிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தெரிவிக்கவே இல்லை. முஸ்லீம் மக்களுக்கு சார்பான ஒரு நீதி வழங்கப்பட்டும் வெளியே நீண்டு தொடர்ந்த, ஆர்ப்பாட்டத்தை செவிமடுத்த நீதிபதி, இதை ஒரு எரிச்சல்தரும் நிகழ்வாகவே சிந்தித்திருப்பார் என எண்ணத் தோன்றுகின்றது. நீதிபதி இருமுறை, மன்னார் பொலிஸ் அதிகாரியை தொடர்பு கொண்டு பொலீசாரின் பலத்தை பிரயோகித்து ஆர்ப்பாட்டக்காரரை துரத்தும்படி கேட்டிருந்தார். அதன் பின்னரும், தொடர்ந்தும் நீதிமன்றத்தின் வெளியே ஆர்ப்பாட்டகாரர்கள் கோசமிட்டுக் கொண்டிருந்ததினால், நீதிபதி ஆசனத்திலிருந்து நேரடியாக இறங்கி தனது அங்கியுடன் வந்து, ஆர்ப்பாட்டகார்களை அடித்து துரத்துமாறு அல்லது கண்ணீர் புகை அடித்து அல்லது முழங்காலுக்கு கீழ் வெடி வைத்து என்றாலும் துரத்தமாறு பொலீசாருக்குக் கட்ளை இட்டார்.
இதுவரைக்கும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு, பாதைகளை அடைத்துக்கொண்ட ஆர்ப்பாட்டக்கார்கள், நீதிபதியின் இந்த கட்டளையை கேட்டதும் கோபத்துக்குள்ளாகி, ஆவேசமானார்கள். அதன்போதே பொலிசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை பாவித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை நீதிமன்றம் நோக்கி எறியத் தொடங்கினார்கள். மூன்று பொலீஸ் அதிகாரிகள் பாரதூரமான காயங்களுக்கு உள்ளானார்கள். இன்னும் சிலருக்கு காயம் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்கார்களில் 18 பேரை கைது செய்த பொலீசார், 13 பேரை தடுத்துவைத்து, 5 பேரை விடுதலை செய்தனர். அதற்கு அடுத்தநாள் யூலை 19ம் திகதி மன்னார் நீதிபதி பொஸிற்கு ஒரு புகாரைக் கொடுத்து, அமைச்சர் ரிச்சாட் பதியுதீனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தார். அவர் யூலை மாதம் 15ம்திகதி தன்னால் வழங்கப்பட்ட தீர்ப்பு பிழையானது என்று தன்னை அச்சுறுத்தியதாகவும் அந்த வழக்கு பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழ் – முஸ்லீம் சமூகங்களிடையே மோதல் ஒன்று உருவானதற்கான காரணங்களாக நாம் இரு விடயங்களைக் காண முடிகிறது.
1. ஒரு முஸ்லீம் அமைச்சர் நீதிபதியை மிரட்டினார் என தமிழ் பகுதியும்,
2. சமாதானமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களை அடித்துதுரத்த உத்தரவிட்டார் என முஸ்லிம் பகுதியும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.
இந்த பிரச்சனையை தீர்ப்பதென்றால் இரத்தத்துக்கு இரத்தம் என்ற அடிப்படையில் போராடக்கூடாது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இவை எல்லாவற்றிக்கும் அடிப்படைக் காரணமாகத் தெரிவது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் மனதில் இருக்கும் ஒருவர் மீது ஒருவருக்குள்ள அவநம்பிக்கையாகும். இது இன்னமும் தொடருமானால், இவர்கள் ஒரு முடிவுக்கு வர மாட்டார்கள் என்றே நினைக்கத் தோன்றுகின்றது.
(‘திவயின’வில் 30 07 2012ல் வெளியான கட்டுரையை தேசம்நெற்றுக்காக தமிழில் மொழிபெயர்த்தவர் அஜீவன்)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக