திங்கள், 14 ஜனவரி, 2013

மகளே ரிசானா!

மரணம் உன்னை அழைத்து சென்றதாமே

நன்று நன்று

மனிதநேயங்களற்ற மனிதர்கள்

ஏன் மனிதர்களே அற்ற மண்ணில்

மகளே உனக்கென்ன வேலை

மரணம் உன்னை தாலாட்;டும்

என்ற நம்பிக்கை எனக்குண்டு



நீ குற்றம் புரிந்தவளாம்

சொல்கிறது ஒரு சட்டம்

நாலுமாத குழந்தைக்கு பாலூட்டும் போது

நடந்த மரணத்திற்க்கு நீ காரணமாம்

சட்டத்தின் வியாக்கியானம்

பராமரிப்புடன் வாழவேண்டிய உன் வயதில்

பராமரிப்பு பொறுப்பை தந்த

இந்த சமுதாயத்தின் சட்டமல்லவா இது

இதை விட வேறு எதை எதிர்பாக்கமுடியும்



இவர்களின் பார்வையிலே நீ குற்றம் புரிந்தவளாகவே இருக்கட்டும்

இதை செய்ய தூண்டியவர்கள் யார்?

சட்டம் முதலில் அவர்களை தண்டிக்கட்டும்

உன் போன்றவர்களின் ஏழ்மைக்கு காரணமானவர்களை

உன்னை போன்ற குழந்தை தொழிலாளார்கள் உருவாக காரணமானவர்களை



மகளே உன் மரணம்

சட்டத்தின் பெயரால் நடத்தி முடிக்கபட்ட பயங்கரவாதம்

இதை மதநம்பிக்கை கொண்டு ஜீரணிக்க முற்படுவது

மனித இனம் தன்னை மறுபரிசீலனைக்கு உட்படுத்தவேண்டிய நேரம்



அதனால் மகளே

இந்த பூமியில் உனக்கு இடமில்லாமல் போனதையொட்டி

வெட்கபட வேண்டியவர்கள் நாங்களே

பெருமைக்குரியவள் நீயல்லவா!

(மோகன்)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல