சனி, 16 பிப்ரவரி, 2013

தாயின் கணவனை திருமணம் செய்த மகள்!

தெரணியகலவைச் சேர்ந்த 29 வயது இளைஞன் ஒருவர் ஒரு தாயையும், ஒரு மகளையும் திருமணம் செய்த குற்றச்சாட்டில் அவிசாவளை பொலிஸ் நிலைய்ய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

தாய்க்கு வயது 44. விதவை. இவ்விதவைத் தாய் வேலை செய்து வந்த பண்ணையில் சாரதியாக இளைஞன் சேர்ந்து 06 வருடங்களுக்கு முன் இவரை பதிவு திருமணம் செய்து இருக்கின்றார்.

அத்துடன் ஒரே வீட்டில் தாய், மகள், இவர் ஒன்றாக வாழ்ந்தனர்.

பின் இளைஞன் பண்ணைக்கு சென்று வாழ தொடங்கினார். அதன் பிறகு வீட்டுக்கு வருகின்றமையை குறைத்து கொண்டார்.

தனியார் வகுப்புக்கு சென்ற இள வயது மகள் ஒரு நாள் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. தாய் பொலிஸில் முறையிட்டார்.

ஆயினும் தாய்க்கு தொலைபேசி தொடர்பு கொண்டார் மகள். தாயின் கணவருடன் ஒன்றாக வாழ்ந்து வருகின்றார் என்று தெரிவித்து இருக்கின்றார்.

மூவரையும் பொலிஸார் அழைத்தனர். தாயின் கணவனை திருமணம் செய்திருக்கின்றமைக்கு ஆதாரமாக திருமணச் சான்றிதழை மிகுந்த உஷாரோடு காண்பித்தார்.

ஆனால் தாய் கைகளை பிசைந்தார். இவரது உடைமையில் இருந்த திருமண சான்றிதழ் மாயமாக காணமல் போய் இருந்தது.

தாயின் கணவனை திருமணம் செய்கின்றமைக்காக தாயின் திருமண சான்றிதழை ஒளித்துக் கொண்டார் என மகள் ஒப்புக் கொண்டார்.

கணவனான இளைஞனையும், மகளையும் வீட்டில் தங்க வைக்கின்றமைக்கு தாய் இணங்கி உள்ளார்.

இருப்பினும் பல தார மண குற்றச்சாட்டில் இளைஞன் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் எதிர்வரும் 19 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக்கப்படுவார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல